Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, February 28, 2018

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.
அதனை S T R அதாவது, SMILE (சிரிக்க சொல்வது), TALK (பேச சொல்வது), RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது) இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம்.
அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்! உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும், அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்

ந்ருஸிம்ஹ அச்யுதாநந்த தேவ நமஸ்தே
க்ருபாலோ சக்ரபாணே நமஸ்தம்ப
ஸம்பூத திவ்யாவதார பரப்ரஹ்ம ரூபம்
ப்ரபுத்தாட்டஹாஸம் கரப்ரெளல சக்ரம்
ஹரப்ரஹ்ம ஸேவ்யம் ப்ரஸந்நம்
த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்
கிரிஜ ந்ருஹரிமீஸம் கர்விதாராதி
வஜ்ரம் பரம புருஷ மாத்யம் பாடலாத்ரௌ
ப்ரஸந்நம் அபய வரத ஹஸ்தம்
சங்க சக்ரேத தாநம் ஸரணமிஹ பஜாம்
சாச்வதம் நாரஸிம்ஹம் ஸ்ரீ ந்ருஸிம்ஹ!
மஹாஸிம்ஹ! திவ்யஸிம்ஹ! கிரிஸம்பவ!
தேவேச! ரக்ஷமாம் ஸரணாகதம்!

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம்

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.
பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர்.
“புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.
இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார்.
வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.
ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.
அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.
புராணப் பெருமைகள் மிகுந்த, புராதனமான சில திருத்தலங்களில் - மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகியவை மிகுந்த விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.
தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் - கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் ஸ்ரீ வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார்.
பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் ஸ்ரீ சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம்.
புதனும், சனியும் விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம்.
தினமும், “ஸ்ரீ சுதர்ஸனாய ஹும்பட்” என்ற மந்திரத்தையும், “ஓம் ஸுதர்சனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி, தந்நச் சக்ர ப்ரசோதயாத்,” என்ற ஸ்ரீ சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம்.
இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!
ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். பதினாறு வகைச் செல்வங்களும், கிரக தோஷங்களும் நீங்கும்.
*“ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா . . . ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா . . .”*

Image may contain: 1 person
👁கண்கள் சொல்லும் கதை👁
(மல்லர் தனுர்தாசர்,அடியார் பிள்ளை உறங்காவில்லி தாசர் ஆன வைபவம்)
🙏🏹🏹🔱🔱🙏🏿
இன்று மாசி ஆயில்யம்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் திருநட்சித்திரம்.
சூத்திர வர்ணத்தில் பிறந்து,
ரஜோகுணத்துடன் மல்/வில் யுத்தம் செய்து வாழ்ந்து வந்தவர், ராமானுஜருக்கு மிக உகந்த சீடராகி,திவ்யபிரபந்த வியாக்யானங்களில்,
பாகவத லட்சணத்துக்கு உதாரணமாக உரைக்க
ப்படும் அளவுக்கு உயர்ந்தவர்.
அவருடன் இணைந்து,அவர் துணைவியார் ஹேமாம்பாள்,
ஆண்டாள் கோஷ்டிக்குத் திலகமாக மாறி 'பொன் நாச்சியார்'ஆனதும் சிறந்த வைபவம்.ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தம்பதிகள் இருவரும் சிறந்த திருமால் அடியார்களாக ஒளிர்ந்தது கூரத்தாழ்வான்ஆண்டாளுக்கு அடுத்து,இவர்கள் இருவர் என்றால் அது மிகையாகாது.
1 கவர்ந்த கண்கள்
🙏🌺👁👁👁🙏🏿
தனுர்தாசர் தம் துணைவியார் பொன் நாச்சியாரின் பேரழகைக் குறிப்பாக அவரது கண்ணழகைப் பெரிதும் போற்றி வந்தார்.அவர் பாதம் மண்/புழுதியில் படாதபடி,கீழே ஒரு துணியைவிரித்து(எடுத்து மீண்டும் விரித்து) அதன் மேல் நடந்து வருமாறும்,அவர் கண்கள் வெயில் பட்டுக் கந்திவிடாமல் இருக்க கண்களுக்குக் குடை பிடித்திக்கொண்டும்வருவார்.ஒரு நாள் ஶ்ரீரங்கத்தில் நடந்த வசந்த உற்சவத்தில் பெருமாள் புறப்பாட்டின்போது,அனைவரும் பெருமாளைச் சேவித்து பாடி/ஆடிக் கொண்டு
வருகையில்,தனுர்தாசர்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தம் துணைவியின் கண்களுக்கு குடை பிடித்துக்கொண்டு வந்தார்.இதை சற்று தூரத்தில் இருந்து கவனித்த உடையவர் அவரை,அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். உடையவரிடம்வந்துவணங்கியவரிடம்,அனைவருக்கும் எதிரில் இவ்வாறு நடந்து கொள்வது தகுமா
என்றார்.அதற்கு அவர் தம் துணைவியின் கண்களின் அழகைப் போல வேறு கண்களை தாம் பார்த்த தில்லை எனவும்,அவற்றைப் பேணவே அவ்வாறு செய்வதாக க்கூறினார்.
உடனே உடையவர்அவரிடம்,
இந்தக் கண்களை விட பேரழகு வாய்ந்த கண்களை தாம் அவருக்குக் காட்டுவதாக க்கூறி,அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்றார்.உடையவரின் மனம் அறிந்த பெருமாள்
திருப்பாணாழ்வாரைப் பேதைமை செய்த"கரியவாகிப் புடைபரந்து,மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்களை"
தாசருக்குக் காட்டினார்.எந்த அமுதினைக் கண்ட பாணர், மற்றொன்றினைக் காணவில்லையோ, எந்த திருமுகத்தையும் கண்களையும் கண்ட அரசர் ஆளவந்தார் மஹா ஆசார்யர் ஆனாரோ அந்தக் கண்களைக் கண்ட தாசர் அங்கேயே மயங்கி விழுந்தார்.எழுந்த தாசர் உடையவர் திருவடிகளில் தண்டனிட்டுக் கதறினார்
'கண்டு கொண்டேன்;கண்டு கொண்டேன் (சத்தியமான அழகை)' என்று.
நயன் தாராவை மறந்தார்; நாராயணனைக் கண்டார்.
பேருண்மையை உணர்ந்த தாசரை உடையவரும் சீடராக ஏற்றுக் கொண்டார்.
2.கவர்ந்த கண்களும் உறங்காத கண்களும்:
🙏🌺🍀🌸🙏🏿
பேரழகையும்,பேருண்மையையும்,அவற்றைக் காட்டிக்கொடுத்த பேர ருளாளர் ராமானுஜர் மகிமையையும் முற்றும் உணர்ந்த தனுர்தாசர் அவர்களையே நெஞ்சிலும், கண்களிலும் நிறுத்தியதால், உறங்காமல் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வதையே
வாழ்க்கைஎன்றிருந்தார்.எம்பெருமானார் அதிகாலையில் விழித்தெழும் போது,இவர் அங்கே தயாராக நின்று கொண்டிருப்பார்.அவருக்கு உதவியாக அவருடனேயே செல்வார்.இரவில் அவர் உறங்கியபின் மடத்தில் கைங்கர்யங்களைச் செய்துவிட்டு தம் திருமாளிகைக்குச் செல்வார்(இதற்காகவே சொந்த வீடு,ஊரை(உறையூர்) விட்டு உடையவர் மடத்துக்குப் பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்).
அழகிய மணவாளர் புறப்பாட்டின் போது பெருமாள் மீது /அவர்வரும் வழிமீது வைத்த கண் வாங்காமல் மிக க்கவனமாகப் பார்த்துக் கொண்டே வருவார்(ஒரு காலத்தில் இதே பெருமாள் எதிரே வந்து "கண்ணுற நின்றபோது,காணகில்லா தாசர்,அண்ணல் இராமானுசர் அருளால் நண்ணருஞானம் தலைக்கொண்டு "பெருமாளைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை இப்போது).அவர் இடுப்பு வேஷ்டியில் எப்போதும் ஒரு கத்தி/வாளைச் செருகி வைத்திருப்பார்.
நம்பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து-அவர் வரும் வாகனம்/பல்லக்கு சற்று மாறாக அசைந்தாலும்-ஏற்பட்டால் உடனே கத்தியை எடுத்து தன்னைக் குத்திக்கொள்ள!! ஆனால் இவரின் கூரிய கவனத்தாலும்,அளப்பரிய பக்தியாலும்,எம்பெருமான்/எம்பெருமானார்கிருபையாலும் கத்தியை எடுப்பதற்கான வாய்ப்பு வரவே இல்லை!!
இரவு வீட்டுக்குச் சென்றாலும் அன்று நடந்தவை,மறுநாள் நடக்கப் போவது ஆகிய
வற்றை சிந்தித்துக் கொண்டே இருப்பாராம்.எப்போது உறங்குவார்,எப்போது விழிப்பார் என்றுஆச்சர்ய
ப்படும் அளவுக்கு.எனவே
உறங்காவில்லி தாசர்.
3.கல்லெல்லாம் தங்கமாக்கும் ராமானுஜ பர்ஸவேதி
🙏⚜️🔆🔆⚜️🙏🏿
அவருடையதூய்மையான,ஆழ்ந்த பக்திக்கு இணையே
இல்லை.உடையவர்,அதிகாலையில் காவிரிக்கு நீராடச் செல்லும் போது ஆண்டான்/ஆழ்வான் தோள்களில் கையை வைத்துச்செல்வார்
.நீராடித் திரும்பும்போது
,உறங்காவில்லி தாசர் தோளில் கை வைத்து வருவார்.இதை அந்தக் காலத்து ஆசார அந்தணர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.(நீராடும் முன் உயர்ந்த குலத்து அந்தணர்களைத் தொட்டுச் செல்லும் எதிராசர்,நீராடிய பின்சூத்திரரான உறங்காவில்லியை
எப்படித் தொட்டுக்கொண்டு வரலாம்?).அவர்கள் உடையவரிடமே இது பற்றிக் கேட்டனர்.அவர்களுக்குத் தாசரின் தூய்மையையும்,
மேன்மையையும் உணர்த்த விழைந்து,அன்றிரவு அவர்கள் உறங்கியபின் தாசரிடம் மடத்தில் காயப்போட்டிருந்த அவர்களின் வேஷ்டிகள் சிலவற்றைக் கிழிக்குமாறு கூறினார்.ஆசார்யர் வாக்கே வேத வாக்கு என்றிருந்த தாசர் உடனே அவற்றைக் கிழித்துவிட்டார்.மறுநாள் காலையில் தங்கள் வேஷ்டிகள் கிழிந்திருந்த தைப்பார்த்த அவர்கள் கோபத்தில் ஒருவரை ஒருவர்கண்டபடி(வாய்கூசும்படி) ஏசிக் கொண்டார்கள்.
சில நாட்கள்கழித்து,
ராமானுஜர் அவர்களில் சிலரைக் கூப்பிட்டு,
மடத்தின் செலவுகள்
அதிகரித்துக் கொண்டே
யிருக்கின்றன;ஆனால் போதிய வருமானம்இல்லை
,எனவே உறங்காவில்லி வீட்டுக்குச் சென்று சில நகைகளைத் திருடிக் கொண்டு வாருங்கள் என்றார்(மல்யுத்தப் போட்டிகளில் வென்று வந்த பரிசுத் தொகையில்,
அழகு மனைவிக்கு அதிக நகைகள் செய்து போட்டிருந்தார் தாசர்).
உடையவர்,தாசரிடம் குறிப்புக் காட்டினாலே அத்தனையும் கொண்டுவந்து கொட்டி விடுவாரே,என்பதைக் கூட உணர முடியாத அவர்கள் தாசர் வீட்டுக்கு திருடச் சென்றனர். அப்போது தாசர் அங்கில்லை.பொன்னாச்சியார் ஒருக்களித்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இவர்கள் அவரது ஒரு பக்கத்து நகைகளை அவசரமாக க்கழட்டி விட்டனர்.இவர்கள் நகைகளக் கழட்ட ஆரம்பித்ததுமே தூக்கம் களைந்தநாச்சியார்,வந்திருப்பவர்கள் திருமால் அடியார்கள் என்று கண்டு,அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்
கொள்ளட்டும்என்று,தூங்குவது போலஇருந்துவிட்டார்
.அவர்கள் ஒருபக்கம் கழட்டியதும் மறுபக்கம் கழட்டுவதற்கு ஏதுவாக திரும்பிப் படுத்தார். இதைப்பார்த்த வந்தவர்கள் அவர் விழித்துக் கொண்டார், என்று பயந்து ஓடிவிட்டனர்.
உடையவரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த தாசரிடம் நடந்ததைக் கூறினார் பொன்னாச்சியார்.'நீ ஏன் திரும்பிப் படுத்தாய்?அதனால் தான் அவர்கள் பயந்து சென்று விட்டார்கள்.நீ அசையாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு
போயிருப்பார்களே.
இப்படி அடியார்களிடம் அபசாரப் பட்டு விட்டாயே 
No automatic alt text available.

Image may contain: one or more people and people standing

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் ! (25.3.18 )

ராமநாமத்தின் விலை!
தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்...' .
. இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமை
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார்.
அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, 'ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.
திகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.
'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான்.
'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.
இந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார்.
'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.
'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.
அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!
ஸ்ரீ ராம ஜெயம் !!!!
Like
Comment
கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....
ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்.
இரவாகி விட்டது.
மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.
🌻வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
🌷அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.
🍄அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.
🌳மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.
💥அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்
போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.
🌻 அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.
🌷 அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.
🌴அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
🌂இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.
🌲அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.
👬 அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.
🍂பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
🌂மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.
🍀 அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.
🎃உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
😀கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.
😝கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.
😊கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.🐛
ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.
🌿இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.
💥அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.
😡நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.
😀நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.
👊வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.
😡 கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.
கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....
பல விஷயங்களுக்கு நாம் ரியாக்ட் செய்யாமலிருந்தாலே அந்த விஷயம் பிரச்சனையாகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றுமில்லாமல் போய் விடும்