Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, September 10, 2015

‘ரத்தம் உறைதல்

மனித உடலில் வியப்புக்குரிய விஷயங்கள் நிறையவே நிகழ்கின்றன. இதயம் துடிப்பது, காது கேட்பது, கண் பார்ப்பது, கருத்தரிப்பது,  தூக்கம் வருவது, ருசியும் வலியும் தெரிவது... இந்த வரிசையில் உடலில் இயற்கையிலேயே ரத்தம் உறைவதும் வியந்து பார்க்கும்  விஷயம்தான். இது மட்டும் நிகழாமல் இருந்தால், லேசான காயம்கூட மரணத்தில் முடிந்துவிடும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ‘ரத்தம்  உறைதல்’ என்பது சொல்லிவைத்தது போல் ஒரு சங்கிலி வினையாக நிகழ்கிறது. கிழிபட்ட ரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் புரதமும்  பாஸ்போ புரதமும் இணைந்து, ‘திராம்போபிளாஸ்டின்’ (Thromboplastin) எனும் புதுப் புரதமாக மாறுகிறது. இது சில ரத்த உறைவுக்  காரணிகளுடன் வினைபுரிந்து, ‘திராம்போகைனேஸ்’ (Thrombokinase) எனும் புரதப் பொருளாக மாறுகிறது. 



இந்த நேரத்தில், கல்லீரலில் இருந்து புரோத்ராம்பின் எனும் புரதப்பொருள், ரத்தச் சுற்றோட்டம் வழியாக அடிபட்ட ரத்தக்குழாய்க்கு  வருகிறது. அப்போது அங்குள்ள திராம்போகைனேஸ் கால்சியம் தாதுவுடன் இணைந்து செயல்பட்டு, புரோத்திராம்பினை ‘திராம்பின்’ எனும்  என்சைமாக மாற்றி விடுகிறது. இது ரத்தத்தில் உள்ள ‘ஃபைப்ரினோஜன்’ (Fibrinogen) எனும் புரதப்பொருளுடன் வினை புரிகிறது. இதன்  பலனாக, பிசுபிசுப்பான, நீண்ட ‘ஃபைப்ரின்’ இழைகள் உருவாகின்றன. இவை ஒரு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. அந்த வலையில்  தட்டணுக்கள், ரத்த அணுக்கள், பிளாஸ்மா முதலியவை சிறை பிடிக்கப்படுகின்றன. பின்னர் இந்த  வலையமைப்பு சுருங்கி, ஒரு  ரத்தக்கட்டியாக  உருவாகிறது. ஒழுகும் தண்ணீர்க் குழாயைத் துணி வைத்து அடைப்பதைப் போல, இந்த ரத்தக்கட்டிதான் கிழிபட்ட  ரத்தக்குழாயை அடைத்து, ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கிறது. 

ரத்த உறைவு என்பது இருமுனைக் கத்தி போன்றது. உடலிலிருந்து வெளியேறும்போது மட்டுமே ரத்தம் உறைய வேண்டும். ரத்தம் உடலில் 
சுற்றிக்கொண்டிருக்கும்போதே உறைந்துவிட்டால், ரத்த ஓட்டம் தடைபட்டு உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தாகிவிடும். உதாரணமாக, இதயத்  தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் கரோனரி தமனி குழாய்களில் ரத்தம் உறைந்துவிட்டால், மாரடைப்பு நேரும். மூளைத் தமனிகளில் இது  ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த மாதிரி நிலைமைகளைச் சமாளிக்க ‘ஹெப்பாரின்’ (Heparin) எனும் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.  இது  உடலுக்குள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் முக்கியமான மருந்து. அமெரிக்காவில் ஜோன்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்  இரண்டாமாண்டு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த ஜேய் மெக்ளியான் எனும் மாணவர் 1916ல் தற்செயலாகக் கண்டுபிடித்த மருந்து இது.  தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அப்போது அவர் கொடுத்த பேட்டியைப் படிப்போமா?

‘‘பேராசிரியர் டாக்டர் ஹோவெல் என்பவருக்கு நான் உதவியாளராக இருந்தபோது அவர்  ரத்தம் உறைய வைக்கும்  மருந்தைக் கண்டு
பிடிக்கும் ஆராய்ச்சியில் இருந்தார். மூளைத் திசுவிலிருந்து செபாலின் எனும் வேதிப்பொருளைப் பிரித்தெடுத்து பக்குவப்படுத்தி, அதில்  எந்தப் பகுதி ரத்தம் உறைவதற்குக் காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டியது என் வேலை. மூளைத் திசுவைப் பக்குவப்படுத்த  பக்குவப்படுத்த, அதிலிருந்து கிடைத்த செபாலினுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை குறைந்துகொண்டே போனது. அதே வேளையில்  அதைப் பக்குவப்படுத்தாமல் பயன்படுத்தவும் முடியாது. எனவே இந்த ஆராய்ச்சி நேரத்தை வீணாக்குவதாகப்பட்டது. 

இதயம் மற்றும் கல்லீரலில் செபாலின் போலவே வேறு ஒரு வேதிப்பொருள் காணப்படுவதாக ஜெர்மன் நாட்டின் ஆராய்ச்சி நூல்களில்  படித்தேன். அதற்கு பாஸ்போடைடு என்று பொதுவான பெயர். இதைக் கண்டுபிடிக்கும் விதமாக என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். முதலில்  இதயத் திசுவிலிருந்து கியூரின் எனும் பொருளைத் தயாரித்தேன். அதற்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை மிகவும் குறைவாகவே இருந்தது.  எனவே, கல்லீரலிலிருந்து இதேபோன்று ஹெப்பர் பாஸ்போடைடு என்ற பொருளைத் தயாரித்தேன்.  நாளாக நாளாக, காற்று பட்டதும்  ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை இதற்கும் குறைந்தது. ஒரு கட்டத்தில் துப்புரவாக  அது ரத்தத்தை உறையவே விடாமல் தடுக்கிறது  என்பதைத் தற்செயலாகப் பார்த்தேன். இதை ஏன் ரத்தம் உறைவைத் தடுக்கும் மருந்தாக பயன்படுத்தக்கூடாது என்று யோசித்தேன். 

என் புதிய கண்டுபிடிப்பு குறித்து பேராசிரியரிடம் கூறினேன். அவர் அதை நம்ப மறுத்தார். ‘திராம்பின் எதிர் மருந்து என்பது ஒரு  புரதமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நீ கண்டு பிடித்ததோ பாஸ்போடைடு வேதிப்பொருள். இது எப்படிச் சாத்தியம்?’ என்றார். நான்  அதை நிரூபிக்கத் தயார் என்றேன். சம்மதித்தார்.

உடனே ஒரு பூனையின் தோலை அறுத்து ஒரு குடுவையில் அதன் ரத்தத்தைச் சேகரித்து நான் கண்டுபிடித்திருந்த வேதிப்பொருளை அதில்  ஊற்றினேன். அந்த ரத்தம் உறையவே இல்லை. இந்த அதிசயத்தைக் கண்டு ஆனந்தப்பட்ட பேராசிரியர், என்னைக் கட்டிப் பிடித்துப்  பாராட்டினார். பிறகு நாய் மற்றும் பல விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்த்து அதை உறுதி செய்துகொண்ட பேராசிரியர் 1920ல் இந்த  மருந்துக்கு ‘ஹெப்பாரின்’ என்று பெயரிட்டார். ரத்தம் உறைவதற்கு மருந்து கண்டுபிடிக்கப்போய் அதற்கு எதிர் மறையாக ரத்தம் உறைவதைத்  தடுப்பதற்கு மருந்து கண்டுபிடித்த அதிசயம் இப்படித்தான் நடந்தது’’ என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.. 1935ல் சுவீடன்  விஞ்ஞானி எரிக் ஜார்பெஸ், ஹெப்பாரினுக்கு வேதிக்கட்டமைப்பைக் கண்டுபிடித்துச் சொன்னதும், விட்ரியம் எனும் மருந்து நிறுவனம்  இதைத் தயாரித்துக் கொடுக்க, 1936ல் மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. 

ஹெப்பாரின் எப்படி வேலை செய்கிறது? 

இது திராம்பின் என்சைமை செயலிழக்க வைப்பதால் ஃபைப்ரினோஜன் உற்பத்தியாவதும் ஃபைப்ரின் இழைகள் உருவாவதும்  தடுக்கப்படுகிறது. இதன் விளைவால் ரத்தம் உறைவதில்லை. இன்றைக்கும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்  இந்த மருந்துதான்.courtesy:kungumam







































தர்மங்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும்


தர்மா தர்மங்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும்

இந்தக் காலத்திலே அநேகம் பேருக்கு ஒரு கேள்வி உண்டாகிறது. என்ன என்றால் நீங்கள் சொல்கிறீர்கள், வேதத்துலே, சாஸ்த்ரத்திலே எல்லாம் இப்படி சொல்லி இருக்கிறது, இந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும், இது மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று சொல்லி இருக்கிறது என்கிறீர்கள். அது பெரியவர்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஜனங்கள் அதை நடைமுறையில் கொண்டு வரும்போது அது போலவே கொண்டு வருவதில்லை. இரண்டு வித்யாசம் வருகிறது. சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிறது ஒன்று, நாம் செய்வது ஒன்று. இதற்கு என்ன காரணம் இருக்கலாம்? முடியாது அல்லது தெரியாது என்று சொல்வதற்கு வழியில்லை. ஏனெனில் பெரியவர்கள் எல்லாரும் சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருக்கிறார்கள். பின்பு என்ன காரணம் இருக்கலாம் என்று அநேகம் பேர் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என்பதை முன்னோர்கள் சிலவற்றையெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். “வேதா வாக்யம் விததவசன:
விர்மரேவிதரோவா தர்மாதர்ம விபிரசனாம்
அனுதகோவாம் த்ருடாத்யாது உத்தோவாகயாம்
மஹமிதி தபோ விரிம்ருதி சந்த்யத்மாதீம்
மேதோதத்வாம் மிதித மஹதர் ஸர்வதோ நிவ்ருதாத்ம:”
என்ன சொல்கிறீர்கள்? வேதத்துலே இப்படி இருக்கிறது. திருட்டுத்தனம் செய்யக்கூடாது. பொய் சொல்லக் கூடாது. இன்னொருத்தனுக்கு ஹிம்ஸை செய்யக் கூடாது. அப்பா, அம்மா சொல்வதைக் கேட்க வேண்டும். அப்படி எல்லாம் சொல்லி இருக்கப்பா! அதனால் அதில் சொன்னபடி நாம் கேட்க வேண்டும். சொல்லும்போது அவனுக்கு என்ன தோன்றுகிறது? வேதத்திலே சொன்னதை எல்லாம் எப்படி நம்பமுடியும்? “வேதோ வாக் விததவசன: வேதத்திலே பொய் சொல்லி இருக்கிறார்களோ என்னவோ? அதனால் வேதத்தில் சொல்லி இருப்பதெல்லாம் நாம் கேட்கவேண்டும் என்று எங்கு இருக்கிறது? அதனால் வேதத்தில் சொல்லி இருக்கிறது நீ செய் என்று சொன்னால் எங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேங்கிறது.
நீங்கள் சொல்கிறீர்கள் வேதம் பெரியது என்று. எங்களுக்கு வேதம் பெரியது இல்லை என்கிற குதர்க்கத்தை மனதில் வைத்துக் கொண்டால் இந்த மாதிரி கர்ம மார்க்கத்தில் அவனைத் திருத்துவதற்கு வழி வருவதில்லை. நாம் என்ன சொல்கிறோம்? இங்கு பாரப்பா! வேதத்திலே சொல்லி இருக்கிறது என்று மட்டும் இல்லை. பகவானோ நாம் செய்த தர்மா தர்மங்களுக்கு தகுந்த பலனைக் கொடுப்பான் என்பது உண்மை, என்கிறோம்.
நாம் நல்ல கர்மாவைச் செய்தால் அதற்குத் தகுந்த மாதிரி பகவான் நமக்கு ஸத்பலத்தைக் கொடுப்பான். நாம் அஸத் கர்மாவை அதாவது கெட்ட கர்மாவைச் செய்தால் அதற்குத் தகுந்த மாதிரி துன்பத்தை பகவான் நமக்கு தருவான். அதனால் நாம் விதிநிஷேதங்களை அதிக்ரமிச்சால் நமக்கு வேண்டிய சுகத்தை பகவான் கொடுக்க மாட்டான் என்று சொல்கிறோம். அங்கே என்ன குதர்க்கம் சொல்கிறார்கள்? “வித்மரேனி புதிக்கரோவா தர்மா தர்ம ஸ்ரிபிரசனாம்” நீங்கள் சொல்கிறீர்கள், ஈஸ்வரன் வந்து நம் கர்மத்திற்கு தகுந்தாற் போல் பலத்தைக் கொடுப்பான் என்று. இத்தனை பேர் இருக்கிறோமே எல்லாவற்றையும் அவன் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்? கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறோம். நாம் ஒவ்வொருத்தனும் செய்த கார்யத்தை இவன் சரியாகச் செய்தான். இவன் தவறு செய்தான், இவன் தர்மத்தைச் செய்தான். அதனால் இவனுக்கு தர்மத்துக்கு தகுந்த பலன் கொடுக்கணும். இவனுக்கு அதர்மத்துக்குத் தகுந்த பலன் கொடுக்கணும் என்பதெல்லாம் அவன் ஞாபகம் வைத்துக் கொள்வானா என்பது எங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. என்னவோ நம் அதிர்ஷ்டத்துக்கு நம் எதிரில் அவன் வருவதில்லை என்றால் நாம் எவ்வளவோ தவறு செய்கிறோம். ஆனால் அவனுக்கு ஞாபகமே இல்லாமல் நமக்கு ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறான்.. அப்படி ஆகக் கூடாதா? அப்படி என்கிற குதர்க்கத்துக்கு வரணும். இல்லை அப்பா! யமன் என்பவன் ஒருவன் இருக்கவே இருக்கிறான். யார் என்ன தவறு செய்தாலும் நல்லது செய்தாலும் அவனிடம் போய் அவன் நீ செய்தது தப்பு. அதனால் உனக்கு இந்த சிக்ஷை என்பதை அவன் சொல்லப் போகிறான். யமன் கிட்ட போகாமல் யாருடைய கேஸும் பைஸல் ஆகவே ஆகாது.
ஒரு முறை எங்க மடத்திலே பெரிய டாக்டர் இருந்தார். அவர் சொன்னாராம், நாம் எல்லோருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. என்ன சம்பந்தம்? வேறு எந்த சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்ம இரண்டு பேரும் ஒரே யமன்கிட்ட போகப் போகிறோம் என்ற சம்பந்தம் இருக்கவே இருக்கிறது. “ஹக்ராஜ யமக்ராஜ்யத்வம்” நான் எந்த யமனிடம் போக வேண்டி இருக்கிறதோ அதே யமன் கிட்ட நீயும் போக வேண்டி வரும். அதுதான் நம் இருவருக்கும் சம்பந்தம் என்று ரொம்ப தமாஷாகச் சொன்னார். அதனால் யமதர்மராஜன், அவன் மட்டும் நீ செய்ததற்கு தகுந்த சிக்ஷைதான் கொடுப்பான் என்று சொன்னால் “அந்த கோவாம்த்ருடாத்வாது” அதெல்லாம் பொய்! யமனும் கிடையாது. என்னைப் பார்க்கிறதும் கிடையாது. நீங்கள் என்னவோ யமன் என்று ஒன்றைக் கல்பித்து விட்டு எங்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அங்கே ஒரு குதர்க்கம். அப்படி இல்லையப்பா! அப்படி எல்லாம் சொல்லாதே. நீ இந்த சரீரத்தை விட்டுப் போயாச்சு என்று சொன்னால் அங்கே போகத்தான் வேண்டும் யமன் கிட்ட. வேற மார்க்கமே இல்லை. அப்படியா? பொய் என்றாலும் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் போவேன் என்று என்ன நிச்சயம்? நான் என்றைக்கும் இப்படியே இருப்பேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நான் செத்தால் அல்லவா நீங்கள் சொல்வது எல்லாம்? எனக்கு என்னவோ நான் சாகவே மாட்டேன் என்று தோன்றுகிறது. அப்போது என்ன செய்வது? நாம் எப்போதும் இந்த சரீரத்தோடு இப்படியே இருக்கலாம். அப்போது யமன் ஒன்றும் பண்ணமுடியாது. இந்த மாதிரி எவ்வளவோ நாம் செய்கிற தப்பிதங்களை மறைப்பதற்கு நாம் செய்யும் தப்பிதங்களை சரி என்று சாதிப்பதற்கு இந்த மாதிரி எவ்வளவோ சமாதானங்களைக் கண்டுபிடித்து எப்போதுமே ஒரு சாஸ்த்ரோத்தமான வ்யவஸ்தையை கவனிக்காமல் சரீரத்தை மட்டும் வளர்த்துக்கொண்டு உட்கார்ந்து இருப்போம்.
ஆனால் நாம் இந்த மாதிரி பேசலாமா? இந்த மாதிரி குதர்க்கத்தைச் செய்யலாமா? அப்பேர்ப்பட்ட ஓர் உயர்ந்த ஸநாதன பரம்பரையில் வந்து எப்பேர்ப்பட்ட மஹான்களுடைய பரம்பரையில் வந்து இந்த மாதிரி வார்த்தைகள் நம்முடைய வாயிலிருந்து வரலாமா? இப்பேர்ப்பட்ட பாவனைகள் நம்முடைய மனசுகளில் வரலாமா? முதலில் என்ன சொன்னான் அவன்? “வேதாவாக்யே விதத்வசனா” வேதங்கள் ஏன் பொய்யாக இருக்கக் கூடாது என்று சொல்கிறான். வேதத்தைப் பற்றி நம் முன்னோர் என்ன சொல்லியிருக்கிறார்கள்? பகவத் பாத சங்கரர் தங்கள் அத்யத்திலே “பிரதீபவத் ஸர்வார்த்த பாகதத்வா ஸர்வக்ஞ கல்பஸ்ய வேதஸ்ய” என்று சொன்னார். எப்படி ஓர் இடத்திலே ஒரு தீபத்தை வைத்தால் அந்த தீபத்தின் வெளிச்சத்திலே அங்கு இருக்கிற ஒவ்வொரு பொருளும் ப்ரகாசிக்குமோ அதேபோல் வேதம் ஸர்வார்த்தங்களுக்கும் ப்ரகாசமானது. ஸர்வக்ஞ கல்பஸ்ய. எப்படி ஸர்வக்ஞனான ஒரு யதி எல்லாவற்றையும் சொல்லுவானோ- ஸர்வக்ஞன் என்ற பதத்திற்கு அதுதானே அர்த்தம்? ஸர்வம் என்றால் எல்லாம் தெரிந்தவன் ஸர்வக்ஞன். வேதமும் ஸர்வக்ஞகல்பம். அப்பேர்ப்பட்ட ஸர்வக்ஞ கல்பம் என்று சொன்னால் ஸர்வக்ஞன் மாதிரி என்று அர்த்தம். அப்படி இருக்கும்போது அப்பேர்ப்பட்ட வேதத்தை பொய் என்று ஒரே வார்த்தையில் தள்ளிவிட்டால் அதைவிட மூர்க்கத்தனம், அதைவிட அவிவேகம் இன்னொன்று இருக்குமா? நிஜமாக வேதம் சொல்வது பொய்யாக இருந்தால் வேதம் ப்ரமாணமே இல்லை என்று சொன்னால் சங்கரர் மாதிரி மஹான்கள் வேதத்துக்கு அவ்வளவு ப்ராமண்யத்தைக் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்களே, அப்போது அவர்கள் எல்லோரும் புத்தி இல்லாதவர்கள் என்று அர்த்தமா? அவர்கள் யாருக்கும் புத்தி இல்லை, நமக்கு புத்தி இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருந்தோமானால் முதலில் புத்தி இல்லாத ஆள் நான் தான் என்று ஆகிவிடும். அதனால் வேதத்து விஷயத்துல அது அப்ரமாணம் என்று சொன்னால் அது மிக மிக அபராதம். அதனுடைய மஹிமையை ப்ரதி ஒரு தார்தகிதனும் சொல்லுவான்.
மீதி அதிகாரங்களில் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் வேதம் விஷயம் வரும்போது எந்த சாஸ்த்ரகாரனைக் கேட்டாலும் அது விஷயத்திலே ப்ரச்னையே கிடையாது. மீமாம்சகாரர்கள் சொல்வார்கள், வேதம் அபோவவேவம். கார்கிகள் சொல்வாகள். வேதம் மித்ரபிரமிதம். இரண்டு பேருக்கும் ப்ராமாண்யம் கொடுக்கும்போது சமமாகத்தான் கொடுப்பார்கள். 
“வேதஸ்ய புருஷகர்த்தா நஹி ஆதுர்ஸாவிதஹா இந்த்ர விலோக்ய
நிர்மாண நிபுண பரமேஸ்வர:”
யாரும் உன் மாதிரி என் மாதிரி ஆட்கள் வேதத்தை எழுதி வைக்கவில்லை. த்ரைலோக்ய நிர்மாண நிபுண: மூன்று உலகங்களையும் அனாயாசமாக ஸ்ருஷ்டிக்கக்கூடிய அபாரமான சாமர்த்யம் உள்ள பரமேஸ்வரன் அந்த வேதத்தை உபதேசித்தான். அதனால் வேதம் தர்மா தர்ம வ்யவஸ்தையைச் சொல்லியிருக்கிறது. அந்த வேதமே பொய் ஆகலாம் என்ற வார்த்தை மட்டும் நம் மனத்தில் உள்ளது அந்த பாவனை வரக்கூடாது. அந்த வார்த்தையும் வாயிலே வரக் கூடாது. இந்த தர்மா தர்ம வ்யவஸ்தையை ஈஸ்வரன் ஒரு வேளை மறந்தாலும் மறக்கலாம். ஏன் ஒரு சமயம் ஞாபகம் இல்லாமலும் போகலாம். அப்படி இருந்தால் அவனை ஈஸ்வரன் என்று நாம் சொல்லவே மாட்டோம். இந்த மறதி என்பது ஈஸ்வரனுக்கும் இருந்தால் அவனை ஏன் நாம் ஈஸ்வரன் என்று நாம் பூஜிக்கணும்? அவனும் நம்ம மாதிரியே ஆகிவிட்டதே. ஈஸ்வரன் விஷயத்துலே சொல்வார்கள். எந்தவிதமான தோஷங்களும் இல்லாதவன் என்று. என்ன தோஷங்கள்? நமக்கு எல்லாம் சில தோஷங்கள் இருக்கிறது. அந்த தோஷம் ஒன்றும் அவனிடம் இல்லை. என்ன தோஷம் என்றால் கிரமம், ப்ரமாதம், விப்ரவித்த, கரணா அபாடவம் என்ன க்ரமம் என்று சொன்னால் ஒரு விஷயத்தை அது எப்படி இருக்கிறதோ அப்படித் தெரிந்து கொள்ளாமல் வேறு விதமாகத் தெரிந்து கொள்வது க்ரமம்.
சாதாரணமாக வேதாந்திகள் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அங்கே ஒரு கயிறு இருந்தால் அதைப் பாம்பு என்று நினைத்துக் கொண்டு விட்டான். அது ப்ரமாதம். அங்கு இருப்பது வேறு; இவன் நினைத்தது வேறு. இந்த தோஷம் நமக்கு வரலாம். ஈஸ்வரனுக்கு கிடையாது. இன்னொன்று ப்ரமாதம். ப்ரமாதம் என்று சொன்னால் தமிழில் ரொம்ப ப்ரமாதமாக இருக்கிறது என்று சொல்வோமே அந்த ப்ரமாதம் இல்லை. ப்ரமாதம் என்று சொன்னால் ஸம்ஸ்க்ருதத்திலே தவறு. விஷயம் தெரியும்; ஆனால் அதைச் சொல்லும்போது ஒன்று சொல்வதற்குப் பதிலாக இன்னொன்றைச் சொல்லி விடுவோம். நமக்கு எவ்வளவோ இப்படி நம் ஜீவிதத்திலே நடந்து கொண்டு இருக்கிறது. பின்பு அதை சொல்வதற்குத் தவறுதலாக ஆகி விட்டது. இதைச் சொல்வதற்கு பதிலாக வேறு சொல்லி விட்டேன். நமக்கு சாதாரணமான தோஷம் அது. ஈஸ்வரனுக்கும் அதுமாதிரி தோஷம் இருந்தால் அவன் ஈஸ்வரன் இல்லையே. அதனால் க்ரமம் என்பது தப்பான அறிவு. ப்ரமாதம் என்பது தவறு. இன்னொன்று விப்ரதித்த: விப்ரதித்த: என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஏமாற்றணும் என்கிற அபிப்ராயம்.
நமக்கு அந்த மாதிரி அபிப்ராயம் இருக்கும். அதனால் ஒன்றுக்கு பதிலாக இன்னொன்று தெரிந்து வேண்டுமென்றே சொல்லுவோம். அவனை தப்பான வழிக்குக் கொண்டு போகணும் என்கிற அபிப்ராயம். அதனால் அவன் எப்படி போகணும் என்று கேட்டால், இப்படி போகணும் என்று சொல்வதற்கு பதிலாக அப்படி போய்க்கோ என்று சொல்வோம். அவன் பாவம் அப்படி போய் கடைசியில் எங்கேயோ போவான். ‘ஓ! அந்தப் பெரியவரிடம் கேட்டேனே! அவர்தானே இப்படி போகச் சொன்னார்? இப்படி போனால் சரி என்று நினைத்துக் கொண்டு வந்தேன் ஆனால் எங்கெங்கோ வந்து விட்டேன், என்று சொல்வான். கடைசியில் விஷயம் என்னவென்று கேட்டால் இவருக்குத் தெரியும் ஆனாலும் அவனைக் கொஞ்சம் அழவைக்கணும், அலைய வைக்கணும் என்பதற்காக இப்படி போ என்று சொல்லிவிட்டார். அந்த தோஷம் மனுஷ்யனுக்கு இருக்கலாம். ஈஸ்வரனுக்குக் கிடையாது. விப்ரதித்த:
முன்பு ஒரு பண்டிதர் இருந்தாராம். அந்த பண்டிதர் வந்து பாவம் சின்னப் பையன்கள் ஸப்தங்கள் படிக்கும்போது “அகாரம் சொல்லுங்கோ ராம ஸப்த:” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கிடையாது ‘இ’ காரம்தான் சொல்லுவேன் என்று சொல்லிக் கொண்டு போனாராம். சும்மா இருக்காமல் அவன் ஒழுங்காக ‘அ’ காரரார்த்த ஸப்தம் சொல்லும்போது இவர் “அக”£ரம் சொல்லாதேடா “இ”காரம் சொல்லு என்று, இவர் பெரிய பண்டிதர் ஆச்சே அதனால் தான் தப்பாகச் சொல்கிறோமோ என்று அஹங்காரம் ஸகஜமாகிவிட்டது. அவனுடைய அசல் வாத்யார் “ஏண்டா இப்படி சொல்றே இல்லை?” என்று கேட்டதற்கு “அகாரம்தான் சொல்லிக் கொண்டு இருந்தேன். அந்தப் பெரிய சாஸ்திரிகள் வந்துவிட்டார். அவர் வந்து அகாரம் சொல்லாதே இகாரம் சொல்லு என்று சொன்னார்.” என்றான். அப்போ இவர் போய் அந்த சாஸ்திரிகளிடம் “என்ன அவன் ஒழுங்காகப் படித்துக் கொண்டிருந்த சமயத்திலே நீங்கள் போய் “இ’காரம் சொல்லு என்று சொன்னீர்களாமே!” என்றதற்கு “இல்லை தமாஷுக்கு சொன்னேன்.” என்றாராம். நீங்க தமாஷ் பண்ணுவது நமக்கு அப்யாஸம் இருக்கலாம். ஈஸ்வரன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டான். அதனால் அந்த “விப்ரதிப்த” என்பது அவனுக்குக் கிடையாது. அதேபோல் ‘கரணாபாதவம்’ என்று சொன்னால் இந்த்ரியங்கள். அஸாமர்த்தமாக இருக்கிறது என்று அர்த்தம். அதாவது இந்த்ரியங்களுக்கு ஸாமர்த்தம் இல்லாமல் போனால் கொஞ்சம் விபரீதமாக ஆகும். எப்படி ஆகும் என்றால் ஓர் இடத்தில் சொன்னார், ஒருவருக்கு சரியாகப் பேச வராது. உச்சாரணம் சரியாக இல்லை. அதனால் அங்கே என்ன ஆயிற்று என்றால் ஒரு பதத்தை உச்சாரணம் செய்வதற்கு பதிலாக இன்னொரு பதத்தை உச்சாரணம் பண்ணினார். என்ன அப்படி உச்சாரணம் பண்ணினால் அவ்வளவு வித்யாசம் வரும் என்கிறீர்களா? அர்த்தத்துலே, ஸம்ஸ்க்ருதத்திலே துளி வித்யாஸம் வந்தாலும் அர்த்தம் பஹு விபரீதமாகிவிடும். எப்படி என்றால் “வசன ஸ்வஜனைமாபொது ஸகஸம் சகலம் சகுர்த்தோ” என்றார்.
ஒருவர் வந்து பாவம் ஸம்ஸ்க்ருதத்திலே பேசணும் என்று ஆசைப்பட்டார். ஸகார, சகாரங்களுக்கு வித்யாஸம் தெரியவில்லை. அந்த வார்த்தை சுத்தம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சஜனாள் வந்தார்கள் என்பதற்கு பதிலாக ஸ்வெஜனாள் வந்தார்கள் என்று சொல்லிவிட்டால் தவறு. ஸ்வஜனாள் என்று சொன்னால் எனக்கு வேண்டிய ஆட்கள் என்று அர்த்தம். “ஸ்வெஜனங்கள்” என்று சொன்னால் பாவிகள் என்று அர்த்தம். இதுமாதிரி மாற்றி சொன்னால் என்ன செய்வது? ஜாஸ்தி வித்யாஸம் வரவில்லை. ஸகாரத்துக்கு பதிலாக சகாரம் போட்டு விட்டான். இவ்வளவு வைபரீத்யம் வந்துவிட்டது. ஸகலம் சகலம். ஸகலம் என்று சொன்னால் முழுசாக மொத்தம் என்று அர்த்தம். சகலம் என்று சொன்னால் உடைத்து இரண்டு ஆக்கியது என்று அர்த்தம். நீங்கள் ஸகலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக சகலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான். அவன் அதை உடைத்து விட்டான். “ஏன் ஐயா! இப்படி பண்ணினாய்?” என்று கேட்டதற்கு “நீங்கள்தானே சகலம் எடுத்துக்கொள் என்று சொன்னீர்கள்?” என்றானாம். அதுமாதிரி இன்னொன்று. ஒரு வைத்யரிடம் போய் இந்த “ஔஷதத்தை” எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு “ஸகுர்த்” எடுத்துக்கொள் என்பதற்கு பதிலாக “அசகுர்த்” எடுத்துக்கொள் என்று சொன்னாராம். “ஸகுர்த்” என்று சொன்னால் ஒரு தடவை. அதுவே “அசகுர்த்” என்று சொன்னால் அநேகம் தடவை. “ஸகுர்த்” என்பதற்கு பதிலாக இப்படிச் சொன்னால் அவனுக்கு என்ன தெரியும்? அந்த வந்த பேஷண்டுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியவில்லை. அவன் வேண்டுமென்று சொல்லவில்லை. இவனை அவமதிப்பதற்காகவும் சொல்லவில்லை. இவனுக்கு சரியாகப் பேச வரவில்லை. ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை சொல்லிவிட்டான். இது எல்லாம் எதனால் வந்தது ‘கரணாபாதத்தினாலே’ இந்த்ரிய அசாமர்த்தியத்தினாலே வந்தது. அதேபோல் அவன் சொல்வது இவனுக்குக் காதில் விழவில்லை. அப்போதும் விபரீதங்கள் அதிகம்.
ஒன்று நீங்கள் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு செவிடன் இருந்தான், அவனுக்கு ஒரு நண்பர். அந்த நண்பருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அவர் யோகக்ஷேமம் விசாரிக்கணும் என்று இவர் போனார். ஆனால் இவருக்கு செவிடு, கேட்காது. அதனால் ஆரம்பத்திலேயே தீர்மானம் பண்ணிக்கொண்டு விட்டார். நான் அவரைக் கேட்பேன். இன்னின்ன ஜவாப் சொல்லுவார் அதற்கு நான் இப்படி சொன்னால் சரி. நான் என்ன கேட்கலாம் முதலில்? “என்ன எப்படி இருக்கேள்?” என்று கேட்பேன். அவர் “பரவாயில்லை நன்றாக இருக்கிறேன்.” என்பார். “ரொம்ப ஸந்தோஷம்” என்று சொல்லிவிடுவேன். “என்ன மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்பேன். “ஏதோ சரியான மருந்துதான் எடுத்துக் கொள்கிறேன்” என்பார். “ரொம்ப நல்லது. அந்த மாதிரிதான் எடுத்துக்கணும்” என்று சொல்லலாம். பின்பு “யார் டாக்டர்?” என்று கேட்பேன். அவர் ஒரு பெரிய டாக்டரின் பெயர் சொல்லுவார். “ரொம்ப நல்லவர் அவர்கிட்டதான் காண்பிக்கணும்” என்று சொல்லுவேன். இப்படி நினைத்துக் கொண்டு போனார். அங்கே போனால் அவனுக்கு எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப நாளாக அந்த வியாதியை அனுபவித்து, அனுபவித்து போதும்போதும் என்று ஆகி விட்டது. “எப்படி இருக்கிறீர்கள்?” என்று இவன் கேட்டான். அதற்கு “அவன் எப்படி இருக்கேன், சாவதற்குத் தயாராக இருக்கேன்” என்று சொன்னாராம். அதற்கு இவன் “ரொம்ப ஸந்தோஷம்” என்று சொன்னானாம். “என்ன மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்டானாம். அதற்கு “அவர் மருந்தா! இனி ‘பாலிடால்’ எடுத்துக் கொள்வதுதான் பாக்கி” என்றாராம். அதற்கு இவன் “நல்ல மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னானாம். “யார் டாக்டர் என்று கேட்டான்?” அதற்கு “அவர் யமன்தான் வரணும்” என்றாராம். அதற்கு இவன் “ஓ நல்ல டாக்டர்” என்றானாம். காது கேட்காததனாலே எவ்வளவு அனர்த்தம் ஆகிவிட்டது? இந்த மாதிரி இந்த்ரியங்களுடைய அசாமர்த்தியத்தினாலே எவ்வளவோ தப்பிதங்கள் நடப்பதற்கு நமக்கு வழி உண்டு. ஈஸ்வரன் விஷயத்துலே இந்த மாதிரி எதற்கும் அவகாசம் இல்லை. அதனால் அவனை “நித்ய நிர்தோஷி” என்றைக்கும் எந்தவிதமான தோஷமும் இல்லாதவன் ஈஸ்வரன். அப்பேர்பட்ட ஈஸ்வரன் விஷயத்துலே அவனும் தர்மாதர்ம வ்யவஸ்தையை மறந்து போயிருக்கலாம். நம்ம விஷயமும் அவன் மறந்து போகலாம் என்று சொல்ல அவகாசமே இல்லை. அதனால் அந்த வார்த்தையையும் சொல்லாதீர்கள்.
அடுத்தது “அந்தகோவா வ்ருஷாஸ்யா” என்பது. யமன் இருப்பதே தெரியாமல் இருக்கலாம். இவ்வளவு ம்ருத்யு இதிகாச புராணங்கள் எல்லாமே இப்படி ம்ருதன் ஆனவனுக்கு யமன் ஸந்நிதியிலே அவனுடைய தர்மா தர்மத்துக்கு தகுந்தமாதிரி வ்யவஸ்தை நடக்கும் என்று சொல்கிறபோது அது எல்லாம் ஒரே வார்த்தையிலே பொய் என்று சொல்வது தவறு. கடைசியில் சொன்னான் “ம்ருத்யோ மார்த்யாமா:” “இல்லை. அதெல்லாம் ஸத்யமாக இருக்கட்டும் ஓய் நான் செத்தால்தானே இதெல்லாம். நான் சாகவே மாட்டேன்.” அப்படி என்று சொன்னால் அதைவிட முட்டாள்தனம் இன்னொன்று இருக்குமா? என்ன! தர்மராஜனிடம் யக்ஷன் கேட்டான். “மஹாபாரதத்திலே ஆச்சர்யமானது எது?” என்று கேட்டான். அப்போது தர்மராஜன் பதில் சொன்னான் என்றால்,
“அஹன் அஹனி பூதானி ப்ரதி விந்தி யமாலயம்”
சேஷாத் காரஞ் சந்தி ஆத்மரிஜந்தரத் பரம்”
தினந்தோறும் அநேகம் பேர் செத்துப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். அதில் நாம் பார்த்துக் கொண்டே இருந்தும் நாம் மட்டும் நினைத்துக் கொள்கிறோம், ‘நான் மட்டும் சிரஞ்சீவியாக இருப்பேன். நான் சாக மாட்டேன். நான் என்றைக்கும் இப்படியே இருப்பேன்.’ அப்படி என்று நான் நினைத்துக் கொள்கிறோம். இதைவிட ஆச்சர்யம் இன்னொன்று இல்லை. அப்போது ப்ரதி ஒருத்தனும் போக வேண்டியதுதான் என்று சொல்கிறீர்களா? இல்லை யாராவது இருப்பார்களா? அது கிடையவே கிடையாது. எப்பேர்ப்பட்ட மஹான்கள் எல்லாம் இன்று இல்லை. எப்பேர்ப்பட்ட மஹான்கள் எல்லாம் நம்முடைய இந்த நாட்டில் இருந்தார்கள்? அகஸ்தியர் பற்றிச் சொல்கிறோமே அவர் ஸமுத்ரத்தையே ஆசமனீயம் பண்ணினார் என்று சொல்கிறோம். விஸ்வாமித்திரர் பற்றிக் கேட்டிருப்போமே, அவருடைய மஹிமை எப்பேர்ப்பட்டது? அவர் ஒருத்தனிடம் யாகம் நடத்தினார். “நீ இப்போது சரீரமாக ஸ்வர்க்கத்துக்குப் போகலாம்” என்று சொல்லி, அவன் மேலே போனபோது தேவதைகள் ஒத்துக்கொள்ளவில்லை. “சரீரமாக யாரும் ஸ்வர்க்கத்துக்கு வரமுடியாது ஐயா!” என்று சொல்லி விட்டார்கள். விஸ்வாமித்திரர் தன்னோட தபோ பலத்தினாலே மேலே தள்ளிக் கொண்டு இருந்தார். தேவதைகள் அவனைக் கீழே தள்ளிக் கொண்டு இருந்தனர். அப்போது இவர் என்ன பண்ணினார் என்றால் “அந்த ஸ்வர்க்கத்தில் உனக்கு அவகாசம் இல்லாவிடில் இன்னொரு ஸ்வர்க்கம் உனக்காக ஸ்ருஷ்டி செய்கிறேன்.” ஸ்வர்க்கத்துக்கு “ப்ரதி ஸ்வர்க்கம்” ஸ்ருஷ்டிச்சார்.
அவர்கூட எங்கே? வஸிஷ்டர் இருந்தார். அவருடைய சாமர்த்தியம் எப்படிப்பட்டது? நாம் யூகிக்கக்கூட முடியாது. அவர்கிட்ட விஸ்வாமித்திரர் இந்த ப்ரும்மரிஷி ஆவதற்கு முன்னால் ராஜாவாக இருந்த சமயத்துலே வஸிஷ்டரிடம் இருந்த ஒரு ஹோமகுண்டத்தை அபேக்ஷித்து கேட்டார். வஸிஷ்டர் சொன்னார் “கொடுக்க முடியாது. இது ஹோமகுண்டம்.” என்று. “இது வேண்டும். நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன் நான் ராஜா சொல்றேன் கேட்க மாட்டாயா?” என்றாராம். “நீங்கள் ராஜா என்றால் ராஜா எப்படி இருக்கணுமோ அப்படி கம்பீரமாக இருப்பது நல்லது. நீங்கள் ராஜா என்று சொல்லி எல்லோரும் எல்லாவற்றையும் கொடுக்கணும் என்று பார்த்தால் அது சாத்யமாகாத கார்யம்” என்று சொல்லி விட்டார். அப்போது “பலாத்காரமாகக் கொண்டு போனால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க “உங்களுக்கு கொண்டு போகிற சக்தி இருந்தால் நான் ஏன் வேண்டாமென்று சொல்லப் போகிறேன்.” “அப்படியானால் ஒரு கை பார்க்கிறேன்.” “பார்த்துக்கொள்ளுங்கள்.” “என்னிடம் எவ்வளவு சைன்யம் இருக்கிறது தெரியுமா? தெரியும். இவ்வளவு சைன்யத்தோடு நான் வந்தால் என்ன பண்ணுவீர்கள்?” என்றார். “நான் இப்படியே உட்கார்ந்திருப்பேன்.” என்றார். அவர் அசந்து போய் விட்டாராம். என்னடா இது! இந்த மனுஷர் இப்படி ஜவாப் சொல்கிறார் என்று நினைத்து, “அப்படியானால் யுத்தம் பண்ணுகிறேன்.” என்றார். “உங்களுக்கு சக்தி இருந்தால் பண்ணுங்கோ. சரி அந்த ஸஸ்தங்கள் எல்லாம் ப்ரும்மகந்தத்துக்கு முன்னால் ஒன்றும் இல்லை” என்றாராம்.
ஒரு சமயத்தில் சரீரத்தை விட வேண்டிவரும்போது இந்த சாதாரண ஆட்களைப் பற்றி என்ன சொல்வது? 
“தத் பாவ்ருச்ச ப்ரபவத தனோ தேவ குபேர வர்க்கே
கால: கீடானி வல பலயாமாஸதான ஜயாத்ம”
அப்பேர்ப்பட்டவர்கள் புறப்பாடுகள் என்று யோசிக்கவும் முடியாது நாம். அவர்களையும்கூட உதயநேரத்தில் அந்த யமனானவன் ஒரு க்ஷணத்திலே எடுத்துக்கொண்டான் என்கிறபோது மீதிப்பேர்கள் விஷயத்துலே என்ன சொல்வது? அதனால் நான் நித்யனாக இருப்பேன் என்று நினைத்தால் அது மிகப் பிசகானது. அதனால் இப்பேர்ப்பட்ட சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு நாம் தர்மாதர்ம வ்யவஸ்தையை உல்லுங்கனும் செய்து யதீஷ்டமாக ஆசரத்தை செய்கிறோமே அது மிகவும் தவறானது. வேதம் ப்ரமாணம் ஈஸ்வரன் நாம் செய்த தர்மாதர்மங்களுக்குத் தகுந்த பலத்தைத் தருவான். நாம் என்றைக்காவது ஒருநாள் சரீரத்தை விடவேண்டியதுதான். அப்போது யமன் ஸந்நிதியிலே நம்முடைய திருக்கட்டை வெளிப்படுத்தத்தான் வேண்டும். அப்போது நாம் தர்மத்தைச் செய்திருந்தால் அதற்கு தகுந்த மாதிரி பலன். மஹாபாரதத்திலேயே கடைசியிலே தர்மராஜனை அந்த ஸர்க்காரோஹனை பர்வத்துலே தர்மராஜனுக்கு அந்த நரக துக்கத்தை ஒரு க்ஷணம் காட்டுவார்கள்.
வில்லூதனாதிகள் எல்லாம் ஸ்வர்க்க சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பார்களாம். தர்மராஜனுக்கு ரொம்ப ஆச்சர்யமாகிவிட்டது. என்ன இது? நான் என்னவோ எல்லாம் தர்மத்தைத்தான் பண்ணினேன். ஆனால் நரகதுக்கம் காட்டினான் இவனோ பிறந்த அன்றிலிருந்து அக்ரமத்தையே பண்ணிக்கொண்டு வந்தான், துரியோதனன் அவனுக்கு ஸ்வர்க்கத்தைக் காட்டினீர்கள். புரியவில்லையே என்று சொன்னான். “இல்லை நீங்கள் முதலில் எந்த தர்மத்தைச் செய்தீர்கள்? துளி அதர்மம் இடையில் நடந்து விட்டது. ரொம்பத் துளி. அந்த துரோணரை ஸம்ஹாரம் பண்ணக்கூடிய சமயத்துலே “அஸ்வத்தாமாஹல: குஞ்சர: என்று சொன்னீர்கள். ஆனாலும் துளி அதர்மம் நடந்ததுனாலே உங்களுக்கு சும்மா அது தாங்கக்கூடிய அதர்மம்தான். உங்களுக்கு நரக வாசல் இல்லை. அந்த நரகவாசிகளைப் பார்க்கிற அளவு மட்டும் உங்களுக்கு அதர்மம் நடந்துவிட்டது. அதேபோல் அவனோ எவ்வளவோ தவறுகள் பண்ணினான். அதிலே துளி தர்மத்தைச் செய்தான். அதனால் அந்த ஸ்வர்க்க சுகம் கொஞ்சமாக. ஆனால் இப்போது நரகத்துக்கு அனுப்பப் போகிறோம் என்று மஹாபாரதத்துலே சொல்வது உண்டு. அதனால் அந்த தர்மாதர்ம வ்யவஸ்தை சாஸ்த்ரத்துலே சொல்லப்பட்ட வ்யவஸ்தை மிகப் ப்ராமாணிகமானது. அதனால்தான் பகவான் பகவத் கீதையிலே அர்ஜுனனுக்கு எல்லாம் உபதேசம் பண்ணி ஒரு வார்த்தை சொன்னார்.
“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யா கார்ய வ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதானோக் தம்
கர்ம கர்து மிஹார்ஹஸி”
அதை மட்டும் ஞாபகத்திலே வைத்துக்கொள். “கார்யா கார்ய வ்யவஸ்திதௌ சாஸ்த்ரம் ப்ரமாணம்” இது கார்யம். அதாவது இது செய்ய வேண்டும். இது செய்யக்கூடாது. இந்த இரண்டு விஷயத்துலே சாஸ்த்ரம் ப்ரமாணம். சாஸ்த்ரம் என்று சொன்னால் முக்யமாக வேதத்துக்கு சொல்லுவோம். பின்பு அதை அனுசரித்து வந்து ஸ்ம்ருதி, தர்ம சாஸ்த்ரங்கள் எல்லாம். அப்படி பகவானும் பகவத் கீதையிலே உத்தரவு செய்தான். இந்த விஷயத்தை நாம் எப்போதும் மனத்திலே வைத்துக்கொண்டால் நம்மால் தவறு நடக்காது. இந்தப் பாபங்கள் நம் மனத்தில் இல்லாமல் போனால் வேதத்தை சொன்னார்கள். யார் கண்டது? ஈஸ்வரனை யார் கண்டார்கள்? இந்த மாதிரி குதர்க்கம் மனசுலே வந்தால்தான் நம்மால் தப்பு நடக்கும். இந்த குதர்க்கத்துக்கு இடம் இல்லை என்று சொன்னால் அந்த விஸ்வாசம் நம் மனத்தில் பரிபூர்ணமாக ஏற்பட்டால் அக்ருத்யங்களை நாம் செய்வதற்கு அவகாசம் வராது. அதனாலே எல்லோரும் இந்த விஸ்வாஸத்தை வைத்துக்கொண்டு அதர்மத்தை ஸ்ருஷ்டிக்காமல் தர்மத்தையே செய்து ஸ்ரேயஸை அடைய வேண்டும் என்பது சாஸ்த்ரத்தின் அபிப்ராயம். பகவான் எல்லோருக்கும் இந்த ஸத்ப்ரேரணையைத் தந்து அருள் செய்யட்டும் என்று பகவானைப் ப்ரார்த்தித்து இந்த பாஷணத்தை இங்கு முடிக்கிறேன்.
Co

Digest

பீஜிங் : சீனாவைச் சேர்ந்தவர் யேங். இரவு பணிக்கு சென்ற, இவரது கணவன், நள்ளிரவு, 2:00 மணியளவில் போன் செய்த போது, யேங் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், மறுநாள் காலை, யேங்கின் அலுவலகத்திற்கு வந்து, போனை எடுக்காததற்கான காரணத்தை கேட்டு அடித்தார். அடிதடி சண்டையில், மனைவி யின் மூக்கை கடித்து, விழுங்கிவிட்டார். சம்பவத்தை கண்ட சக ஊழியர்கள், யேங்கை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வதற்கு மூன்று மாதமாகும் என்றனர்.
---------
அக்பர் சக்கரவர்த்தி ஒருநாள் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இதைப்பற்றி பீர்பலிடம் கூறினார்.
அதற்கு பீர்பல், "மாறு வேடமணிந்து சென்றால் மக்கள் உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்துகொள்ளலாம்,'' என்று கூறினார்.

சக்கரவர்த்தியும், பீர்பல் கூறிய யோசனைப்படி பீர்பலுடன் மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்றார்.

இருவரும் மாறு வேடத்தில் இருந்ததால் ஒருவராலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

அப்போது கடும் வெயில். ஒரு விறகு வெட்டி சுமக்க முடியாத அளவுக்கு பாரத்தை சுமந்தவாறு வந்தான். அவனைப் பார்த்ததும் சக்கரவர்த்திக்கு இரக்கம் ஏற்பட்டது.

"ஐயோ பாவம், சாண் வயிற்றுக்காக இந்தக் கடும் வெயிலில் இவ்வாறு துன்பப்படுகிறானே!' என்று நினைத்தார்.

அவன் அருகே வந்ததும், "ஐயா பெரியவரே, சுமையை இறக்கி வைத்து விட்டு, சற்று இளைப்பாறிக் கொள்ளுங்கள்,'' என்றார் அக்பர்.

"இறக்கி வைப்பதற்கு ஆள் கிடைக்காததால்தான் இடுப்பொடிய சுமந்து செல்கிறேன்,'' என்றான் விறகுவெட்டி.

"நான் கை கொடுக்கிறேன். சுமையை இறக்கி விட்டு சிறிது நேரம் இளைப்பாறுங்கள்,'' என்று கூறிய அக்பர், விறகு வெட்டி தலைச்சுமையை இறக்குவதற்கு உதவி செய்தார்.

சுமையை இறக்கி வைத்து விட்டு இளைப்பாறிய விறகு வெட்டியிடம், பீர்பல் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

"ஐயா, பெரியவரே! நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாரே, உமக்குச் சேதி தெரியுமா?'' என்றார்.

இதைக் கேட்டதும் விறகு வெட்டி, "ஐயோ! நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாரா? ஏழைகளுக்கு உதவி செய்யும் உத்தமப்பிரபுவாயிற்றே! அப்படிப்பட்ட நல்ல மனிதரையா எமன் வாயில் போட்டுக் கொண்டான்?'' என்று கதறிக் கண்ணீர் வடித்தான்.

"என்ன செய்வது? என்றாவது ஒருநாள் அனைவரும் இறக்க வேண்டியதுதானே!'' என்று விறகு வெட்டியிடம் கூறினார் பீர்பல்.

"என்னைப் போன்ற பிறவிகள் வாழ்வதால் உலகத்துக்கு என்ன பிரயோசனம்? நம் அரசரைப் போன்றவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும். இனி யார் ஆட்சிக்கு வருவார்களோ? எப்படி பரிபாலனம் நடக்குமோ! கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று விறகுவெட்டி மீண்டும் சுமையை எடுத்து தலைமேல் வைத்தபடி செல்லலானான்.

"என்ன பீர்பல், உயிருடன் இருக்கும் போதே நான் இறந்து விட்டதாகக் கூறி விட்டாயே! இது என்ன விளையாட்டு?'' என்றார் அக்பர்.

"அப்படிக் கூறியதால்தானே உங்களைப் பற்றி அந்த விறகுவெட்டி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரியவந்தது,'' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, தயிர் விற்கும் பெண்ணொருத்தி தலைமேல் தயிர் பானையுடன் வந்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த அக்பர், "என்ன இப்படி நடந்து செல்கிறாளே! கொஞ்சமாவது அடக்க, ஒடுக்கம் இருக்க வேண்டாமோ! கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவளாயிருக்கிறாளே!'' என்று கேலியாகக் கூறினார் அக்பர்.

அவள் நெருங்கி வந்ததும் பீர்பல் அவளிடம், "நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாராமே... உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.

"இறந்து போனால் என்ன குடியா முழுகிப் போய்விட்டது? எல்லாரும் ஒருநாள் சாக வேண்டியது தானே!'' என்றாள் அந்தப் பெண்.

"அவர் இறந்துவிட்டால் அரசாட்சி எப்படி நடக்குமோ! யார் பட்டத்துக்கு வருவார்களோ?'' என்றார் பீர்பல்.

"இவருடைய தகப்பனார் செத்தார். இவர் பட்டத்துக்கு வந்தார். இவர் செத்தால் இவருடைய மகன் பட்டத்திற்கு வருவான். இந்த ஆக்ராவில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி புரிந்து மறைந்து விட்டார்கள். இவர்கள் எம்மாத்திரம்?'' என்றாள்.

"அப்படியானால் சக்கரவர்த்தி இறந்து விட்டதற்காக நீ மகிழ்ச்சியா கொள்கிறாய்?'' என்றார் பீர்பல்.

"ஆமாம். பேரரசர் இறந்துவிட்டால் அவரது ஈமச் சடங்குகள் விமரிசையாக நடக்கும். நிறையப் பேர் வெளி நாடுகளிலிருந்தெல்லாம் வருவர். தயிர், பால், வெண்ணெய், நெய் முதலியவை ஏராளமாகச் செலவாகும். அதனால் எங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்,'' என்று கூறிவிட்டுச் சென்றாள்.

இதைக் கேட்டதும் அக்பருக்கு அந்தப் பெண்ணின் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனைக் கண்ட பீர்பல், "அரசே, முதலில் வந்த விறகுவெட்டியிடம் அன்பாக நடந்து கொண்டீர்கள். அதற்குத் தக்கவாறு உங்கள் மனம் மகிழத்தக்க வகையில் பதில் கிடைத்தது. இந்தப் பெண்ணை கேலி பேசினீர்கள். அதற்குத் தகுந்தவாறு தான் பதிலும் இருக்கும்.

இதற்காக ஆத்திரப்பட்டு பயன் இல்லை. மேலும், எல்லாரும் ஒரே மாதிரியாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதும் புத்திசாலித்தனம் அல்ல. அவரவர் மனப் போக்குக்குத் தக்கவகையில் தான் எண்ணங்களும் இருக்கும். அந்தப் பெண்ணுக்கு பேரரசரை விட தனக்கு நடைபெறப்போகும் வியாபாரத்தில் தான் அதிக அக்கறை. எனவே, அவளுக்கு யார் இருந்தால் என்ன? யார் மாண்டால் என்ன? இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது,'' என்று கூறினார் பீர்பல்.

பீர்பல் சொல்வதும் சரிதான் என்று எண்ணிய அக்பர், அத்துடன் தங்கள் நகர் சோதனையை முடித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.
---------
                             image1.jpeg

பிள்ளையாருக்கு பர்த் டே இந்த 17 அன்று. குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த கடவுள் இந்த பிள்ளையாரப்பாதான்!



தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார்!

விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியதே கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் தான். சாணக்கிய மன்னன், இரண்டாம் புலிகேசியுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற பிறகு, நரசிம்ம பல்லவருடைய தளபதி பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்) வாதாபியில் இருந்து எடுத்து வந்த பிள்ளையார் தான் தமிழ் நாட்டிற்கு முதலில் வந்த பிள்ளையார்.

மன்னர் நரசிம்ம பல்லவரோ, ஒரு அற்புதமான குடைவரைக் கோயில் ஏற்படுத்தி, இந்தப் பிள்ளையாரை அங்கு குடி வைத்தார். அந்த இடம்தான் பிள்ளையார்பட்டி. 

பாசம், அங்குசம் இல்லாமல் இரண்டே இரண்டு கைகளுடன் வலக்கையில் லிங்கத்துடன் வலம் புரி துதிக்கை சகிதமாக வித்தியாசமான கோலத்தில் இந்தப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.



உருவமேன்மை!

பிள்ளையாரை பார்க்க, பார்க்க அல்ல, பார்த்த உடனே பிடிக்கும்.

அவரின் தோற்றமே அதற்கு காரணம். வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு, விநாயகரின் திருமேனியில் இருக்கிறது. விநாயகரின் கால்களும், வயிறும் பூதத்தின் உறுப்புகள், மார்பும், கைகளும், தேவர்களுக்கு உரியது.

நெற்றியும், புருவங்களும், சடைமுடியும் மனிதருக்கு உரிய உறுப்புகள் ஆகும். எனவே, மேற்சொன்ன அனைவரது ஆற்றல்களும் ஒருங்கே பெற்ற பேராற்றல் வாய்ந்தவர்.

வேடிக்கையும், வினோதமும் நிறைந்த இவரது தொப்பை அழகானது. வேறு எந்த தெய்வங்களுக்கும் இல்லாதது. சடைமுடியுடன், ஞான வடிவத்துடன் சற்றே குறும்புத்தனம் கலந்து சிரிக்கும் குழந்தையின் கண்கள். சில திருமேனிகளில் பக்தர்களின் தீவினைகளை எரித்து, அஞ்ஞான இருளகற்றும் பேரொளி கொண்ட நெற்றிக்கண்.

வலமாகவோ, இடமாகவோ சுழித்த அல்லது நேராக நீண்ட துதிக்கை, உயிர்களுக்கு கவசம் போன்ற திருக்காதுகள் என்று அழகு சொட்டச் சொட்ட நிற்பார் விநாயகர் பெருமான்.



அவ்வை அகவல்!

விநாயகர் பற்றி எத்தனையோ பாடல்கள், நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் மிக பிரசித்தி பெற்றது நமது அவ்வையார் எழுதிய, 'விநாயகர் அகவல்' தான். இன்றும் கோடான கோடி பக்தர்களால், 'விநாயகர் சதுர்த்தி' அன்று பாராயணம் செய்யப்படுகிறது.



வித்தியாசமான விருந்து!

குதூகலமான தெய்வத்திற்கும், அவரை தொழும் குழந்தைகளுக்கும் ஒரு புதுமையான கொழுக்கட்டை.

இது 1 பிரட் கொழுக்கட்டை செய்முறை நேரம்:

தேவையானவை: மில்க் பிரட் - 1 பாக்கெட், தேங்காய்த் துருவல் - 1 கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் -5, நெய்-1ஸ்பூன், வெண்ணெய்-1 கரண்டி.

செய்முறை: பிரட்டை சுற்றியுள்ள சிவந்த பகுதியை நீக்கி விட்டு பிரட் துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1 ஸ்பூன் நெய்யில் வெல்லம், பொடித்த ஏலக்காய் தூள், தேங்காய்த் துருவலைக் கிளறி வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானால், சிறிதளவு நீர் சேர்த்து கிளறலாம். பின் பிரட் ஸ்லைசை நீரில் நனைத்து பிழிந்து ஒவ்வொரு ஸ்லைசிலும் ஒரு ஸ்பூன் பூரணத்தை நடுவில் வைத்து அழுத்தி மூட வேண்டும். விரிசல் இல்லாமல் அழுத்தி மூட வேண்டும். பூரணம் வைத்த பிரட் ஸ்லைசை ஆவியில் வேக வைத்து எடுத்து அதன் மீது சுடச்சுட வெண்ணெயை தடவி ஒன்றின் மீது ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக வைத்து ஆற விட வேண்டும். சுவையான பிரட் கொழுக்கட்டை இப்போது தயார்!

Saturday, September 5, 2015

Friday, September 4, 2015

அனுமன் மகிமைக்கு பெரும் சான்றாக விளங்குவது "அனுமன் சாலீசா' என்னும் மந்திரமாகும். அடிப்படையில் அனுமன் ஒரு தெய்வீகப் பிறவி. ராம- லட்சுமணர்கள் பிறந்த அதே காலகட்டத்தில் புத்திர காமோஷ்டி யாகத்தின் பயனாகவும், அனுமனின் தாயான அஞ்சனை கும்பகத்தில் மூச்சை நிறுத்தி யோகத் தவமிருந்த நிலையிலும் கருத்தரிக்கப் பெற்றவன்.
அனுமனின் உயிர்மூலத்தில் சிவசக்தியின் ஸ்கலிதமும், வாயு பகவானின் உயிர்மூச்சும் இருப்பது அடுத்த விசேஷம்.
இப்படிப்பட்டவன் நட்சத்திரங்களில் "மூலம்' என்னும் நட்சத்திரத்தில் அவதரித்தவன். பிரம்ம பத்தினி சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் உருக்கொண்டவளாவாள்!
இந்த உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உயிர்க்காவலாக விளங்குவது அறிவே. ஓரறிவு கொண்ட ஒரு சிலந்திகூட வலைபின்னி, அதில் தனக்கான உணவை விழவைத்து பிறகுதான் அதை உண்டு ஜீவிக்கப் பார்க்கிறது. எனவே ஓரறிவில் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரையில் அவர்களுக்குக் காவலாக இருப்பது அறிவே! அந்த அறிவின் விரிவில் வருவதே கல்வி, ஞானம் போன்றவை. இந்தக் கல்வியும் ஞானமும் சப்தமாகிய மொழியால் அமைந்தவை. இந்த மொழிக்கு மூலமாக விளங்குபவளே சரஸ்வதி. இந்த மூலத்தில் முளைத்த அனுமனும் பெரும் கல்வி, ஞானம் இவற்றை அருளும் ஆற்றல் படைத்தவன். அதற்குக் காரணம் அவன் புலன்களை அடக்கி தியானிக்க முடிந்தவனாக இருப்பதுதான்.
தியானம் எல்லாருக்கும் வசப்பட்டு விடாது. அதற்கு பெரும் மனவலிமை வேண்டும். அடுத்து தியானமே அறிவாகிய மனதிற்கு பெரும் மருந்தாகவும் திகழ்கிறது. இந்த உண்மை நமக்குத் தெரிந்திட நமக்கு நல்ல விதியமைப்பு இருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மனதை அடக்கமுடியாமல் அதன் பின்னே செல்பவர்களாகவே நாம் இருப்போம்.
மனதை அடக்க முனைபவர்களுக்கு மகத்தான மந்திரமாக விளங்குவது ராம நாமம்! அனுமன் அந்த ராம நாமத்தைக் கூறியே பெரும் தியான சுந்தரனாகத் திகழ்கிறான்.
இப்படித் திகழ்பவனை நாம் நமக்கான இஷ்ட தெய்வமாக ஆக்கிக்கொண்டு சுலபமாக முக்தியை அடைந்துவிட முடியும். இவன் பக்திக்கு உதாரணமாகத் திகழ்பவன். அதனாலேயே இவன்பால் பக்தி கொண்டவர்க்கு இவன் எளிதில் வசப்பட்டுவிடுகிறான்.
இவனை உபாசனா மூர்த்தியாகக் கருதி பலர் இவனது தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; இவனை உபாசிப்பவர்கள் இடும் கட்டளையை இவன் க்ஷணத்தில் செய்து முடிப்பவனும்கூட! இப்படிப்பட்ட அனுமனை உபாசிக்க நிறைய மந்திரங்கள் உள்ளன. அதில் உன்னதமாய்த் திகழ்வதுதான் அனுமன் சாலீசா!
இதை முதியவர்களைவிட இளம்பிள்ளைகள் எளிதில் மனப்பாடம் செய்துவிட முடியும். பிள்ளைகள் வரையில் அதிகபட்சம் ஒன்பது முறை இதைச் சொல்லி முடிப்பதற்குள் இது மனப்பாடமாகிவிடும்.
இந்த அனுமன் சாலீசாவை எழுதியவர் இந்தி மொழியில் "ராமசரித மானஸம்' என்னும் நூலை இயற்றிய துளசிதாசர் ஆவார்.
இதில் ஒரு ஆச்சரியப்படும் விஷயமும் உள்ளது.
துளசிதாசர் ராமசரித மானஸம் எழுதக் காரணமே அனுமன்தான். துளசிதாசர்முன் தோன்றி அவருக்கு கவியாற்றலை அனுமன் அளித்திட, அதன்பின் பிறந்ததுதான் ராமசரித மானஸம்! இதனால் துளசிதாசர் தன் குருவாய்க் குறிப்பிடுவது அனுமனைத்தான். "அனுமனே என்னுள் இருந்து கொண்டு என்னை இயக்கி ராமசரிதையை எழுத வைத்தான்' என்னும் துளசிதாசர், மிகுந்த நெகிழ்ச்சியோடு எழுதியதுதான் அனுமன் சாலீசா!
திருக்குறள்போல நாற்பது ஈரடிகளில் அமைந்துள்ளது இது!
இந்த அனுமன் சாலீசாவுக்குப் பின்னே  பெரும் வெற்றிக்கதை ஒன்று உண்டு.
நமக்கு எப்போதுமே பெரும் தலைவலியாக இருந்துவரும் ஒரு நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான்தான். 1965-ல் பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்யுத்தம் ஏற்பட்டது.
நமது  பாரத நாடு சுதந்திரம் பெற்று அப்போதுதான் ஓரளவு நிமிர ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் இந்தப் போர் ஏற்படவும், அதனால் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் நம் நாட்டுக்குள் கட்டுப்படுத்த முடியாதபடி விலைவாசி உயர்வும் ஏற்படத் தொடங்கியது.
இந்த நிலை தொடர்ந்தால் நம் பாரத நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன் இருந்த மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிடும் ஒரு ஆபத்தும் ஏற்பட்டுவிட்டது.
ஒன்று யுத்தம் மிக விரைவாக நடந்து முடியவேண்டும்- அதோடு யுத்தத்தில் பாரதம் கட்டாயம் வெற்றியும் பெற்றாகவேண்டும். இது நடக்காத பட்சத்தில் நம் நாட்டைக் காப்பாற்ற கடவுளால்கூட முடியாது என்று பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
அப்போது ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும் கேட்டார்.
அது என்ன தெரியுமா?
"எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில்... எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில்.. சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப்படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின்மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா... இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவதுபோல தெய்வமே ஒரு கற்பனையா?'
என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை.
எப்பொழுதும் காய்த்த மரமே கல்லடி படும்... அதிலும் இந்த பாரத தேசத்தை ஞானத்துறவி விவேகானந்தர், "இந்த உலகம் என்பது ஒரு வீடானால் அதில் என் பாரத தேசம் ஒரு புனிதமான பூஜையறையைப் போன்றது' என்றார்.
இந்தப் பூஜையறைக்குள் அருள் இருப்பதுபோலவே அதை சரியாகக் கொண்டாடாவிட்டால் இருள் வந்து சேர்ந்துவிடும். இருள் வந்தால்தான் அருள் ஒளியின் தன்மையை உணரமுடியும்.
நிழலருமை வெய்யிலில் அல்லவா தெரியும்?
இப்படிப்பட்ட சிந்தனைகளால் பெரியவர் முகத்தில் மந்தகாசப் புன்னகை தோன்றியதோ என்னவோ? மிகுந்த வருத்தமுடன் கேள்வி கேட்டவருக்கு அவர் வார்த்தைகளில் பதில் கூறவில்லை. அவரிடம், ""உங்களுக்கு "அனுமன் சாலீசா' தெரியுமா?'' என்றுதான் கேட்டார். அவரும் ""கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்றார்.
""அனுமன் ஒரு மாவீரன்... தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்'' என்ற மகாபெரியவர், தனது சங்கரமட அமைப்பு மூலமும் அன்பர்கள் உதவியோடும் "அனுமன் சாலீசா'வை லட்சக்கணக்கில் அச்சிட்டார்... அச்சிட்டதை போர்முனைக்கு அனுப்பி ஜவான்கள் கையில் கிடைக்கும்படிச் செய்தார்.
"இதை பாராயணம் செய்யுங்கள். புதிய பலம் தோன்றும். செய்யத் தெரியாதவர்கள் இந்தஅனுமனே உடனிருப்பதாகக் கருதி  சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். யுத்த களத்தில் உங்களுக்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது' என்கிற தகவலையும் அனுப்பினார்.
மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட வீண்போகவில்லை. அதன்பின் மிக விரைவாக பாகிஸ்தானை ஓடஓட விரட்டியடித்தது பாரதம்.
அதைத் தொடர்ந்து நடந்த பங்களாதேஷ் யுத்தத்திலும் அனுமன் சாலீசா பல ஜவான்களிடம் பெரும்பங்கு வகித்தது.
இந்த அனுமன் சாலீசாவை லட்சம் முறை பாராயணம் செய்த பலர் இந்த மண்ணில் உண்டு. அவர்களுக்கெல்லாம் அனுமனின் தரிசனமும் பல வடிவத்தில் கிடைத்திருக்கிறது.
அப்படி ஒரு அனுமன் உபாசகர் சென்னைக்கு அருகில் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் இருந்தார். சாலீசா இவருக்கு தூர திருஷ்டியை வழங்கியது. சென்னையில் ஒரு பெரும் தொழிலதிபர். இன்றும் தொழிற்துறையில் பெரும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
அவர் தொழில் தொடங்கிய தொடக்க நாட்களில், தொழிலகத்தை விரிவுபடுத்த டெல்லிக்குச் சென்று அதற்கு அனுமதிபெற வேண்டியிருந்தது. ஆனால் டெல்லியில்அனுமதியை அவ்வளவு சுலபத்தில் தரவில்லை. இப்படி இருந்தால் எப்படி தொழில் முனைவது என்று அவருக்குள் ஒரு ஆயாசம். உண்மையில் டெல்லியில் ஒரு அதிகாரிதான் தடையாக இருந்தார். அதற்குப் பல காரணங்களும் இருந்தன.
இந்த நிலையில் இந்தத் தொழிலதிபர் அனுமன் உபாசகரையும் சென்று தரிசித்திருக்கிறார்.
வாயைத் திறந்து தனது பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைகூட உபாசகரிடம் கூறவில்லை. உபாசகரின் தூரதிருஷ்டியே அவ்வளவையும் அறிந்துகொண்டது. அப்போது அவர் திருஷ்டியில் டெல்லியில் தடையாக இருந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு வந்து அவர் அந்த சீட்டிலேயே இல்லை என்பதும் தெரிந்தது.
அதை அப்படியே அந்த தொழிலதிபரிடம் கூறினார்.
""உனக்கான தொழில் தடை விலகிவிட்டதே. நாளைக்கே லைசென்ஸ் கிடைக்கும். உன் தொழிலும் அனுமன் அருளால் நன்றாக நடக்கும்'' என்றார். தொழிலதிபர் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் மறுநாள் நடக்கவும் ஆடிப்போனார்.... உபாசகரின் தூர திருஷ்டியை எண்ணி வியந்ததோடு அனுமனின் கருணையையும் எண்ணி சிலிர்த்துப் போனார்.
அனுமன் உபாசகர்களுக்கு அப்படியொரு சக்தி.
ஒரு உபாசகரின் வாழ்வில் இன்னொரு சிலிர்ப்பூட்டும் சம்பவமும் நடந்தது. சென்னைக்கு அருகில் உள்ள திருநீர்மலைக்கு இவர் தரிசனத்துக்காகச் சென்றபோது ராமஜெயம் அம்மாள் என்னும் ஒரு பெண்மணியும் கோவிலுக்கு வந்திருந்தார்.
உண்மையில் அந்தப் பெண்மணிக்கு வேறு பெயர். ராமபக்தியோடு தினமும் ராமஜெயம் எழுதுவதோடு மற்றவர்களையும் எழுதச் சொல்வார் அந்தப் பெண்மணி. அதனால் அந்தப் பெண்மணிக்கு "ராமஜெயம் அம்மாள்' என்றே பெயர் வந்துவிட்டது.
அந்தப் பெண்மணி தனிமையில் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது மலைப்படிகளிலும் அவ்வளவாக யாருமில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் அந்தப் பெண்மணியின்  கழுத்தைப் பார்த்தான். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு பவுனில் தடிமனான தாலிச்சங்கிலி அந்த அம்மாளின் கழுத்தில் மின்னுவதைப் பார்த்து விட்டான். அதை அபகரிக்கும்  எண்ணத்தோடு மெல்ல அந்த அம்மாவை பின்தொடரத் தொடங்கினான். அதேசமயம் மேலிருந்து உபாசகரும் இறங்கத் தொடங்கியிருந்தார். உபாசகர் வருவதை கவனிக்காமல் அந்தப் பெண்மணியை வேகமாக நெருங்கியவன், சங்கிலியை அறுத்துக்கொண்டு கீழிறங்கி ஓடத் தொடங்கினான். அந்தப் பெண்மணி பதறிட உபாசகரும் திகைத்துப்போய் அனுமனைத்தான் அடுத்த நொடி நினைத்தார்....

Sent from

King of herbals

mooligaigalin3புதர்மண்டி, பொதுமக்களின் திறந்தவெளி  கழிப்பிடமாக இருந்த ஒருஇடத்தை சீரமைத்து, 1,000க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகளை வளர்த்துள்ளார் சித்தமருத்துவர் ஒருவர்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், பாபநாசசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தைச் சுற்றி, புதர்கள்மண்டியும், பொதுமக்களின் கழிப்பிடமாகவும், துர்நாற்றம் வீசக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. இன்று அதை அடியோடு மாற்றியமைத்து, மூலிகை மணம் வீசிக்கொண்டிருக்கும்படியாக, 1.5ஏக்கர் பரப்பளவில் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளார் சித்தமருத்துவரும், உலகத் தமிழ் மருத்துவக்கழகத் தலைவருமான மைக்கேல் ஜெயராஜ். தமிழ் மருத்துவத்தின் நிறுவனர்களான சித்தர் பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்’ என இதற்குப் பெயரிட்டுள்ளார். இத்தோட்டத்தை உருவாக்க மைக்கேல் ஜெயராஜ் எடுத்த முயற்சிகளும், பிரயாசங்களும் நம்மை வியக்க வைக்கின்றன.
mooligaigalin1

”இது காட்டு உருத்திராட்சம்,நெஞ்சுசளியை அகற்றிப் போடும். இது சீமையத்தி, இருதயத்திற்கு நல்லது. இது செவ்வரளி, தொழுநோயை குணமாக்கும். இது சிவப்பு அம்மன் பச்சரிசி, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இது இலுப்பை, நீரிழிவு நோயை குணமாக்கும்…’’ இதைப் போல் மைக்கேல் ஜெயராஜ் நம்மிடம் விளக்கிய மூலிகைகள் ஆயிரக்கணக்கானவை. அரியவகை மூலிகைகளின் பெயர்களையும் அதன் மருத்துவப் பயன்களையும் அங்குப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான மூலிகைகளின் பெயர்கள்நாம் இதுவரை கேள்விப்பட்டிராதவை.   எந்த சீதோஷ்ண நிலையில் வளரும் தாவரங்களாக இருந்தாலும், தனது தோட்டத்தில் செழிப்பாக வளரவைத்துள்ளார் இவர்.  அதிகப் படியான மழையளவு பெறும் வனத்தில் மட்டுமே வளரக்கூடிய மலைப்பூவரசு, காட்டுஅழிஞ்சில்,  கல்வாழை, மலைசவுக்கு போன்ற பல்வேறு வகையான அரிய மரங்கள், தாவரங்கள் இவரது தோட்டத்தில் செழித்து வளர்ந்துள்ளன.
”பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் வயல் வெளிகளில் 20 ஆண்டுகளாக தேடித்தேடி சேகரித்த மூலிகைக் கன்றுகளைக் கொண்டு, சுமார் 3 வருட உழைப்பால் இம்மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி முடித்தேன்.
mooligaigalin2தேவதாரு, 

கற்பூரம், அகில், நீர்க்கடம்பு என 300 க்கும் மேற்பட்ட மரங்களும், சீந்தில், கோவை சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான் என 100க்கும் மேற்பட்ட கொடிகளும், நீலக்கொடுவேலி, செம்பரத்தை வெள்ளை என 300 க்கும் மேற்பட்ட புதர்தாவரங்களும், மஞ்சள்கரிசாலை, கொட்டைகரந்தை, யானைநெருஞ்சில் என 250 க்கும் மேற்பட்ட ஒருபருவத் தாவரங்களும் கருமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என 50க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளும், பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் உள்ளன. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, அரபுநாட்டை பிறப்பிடமாக கொண்டது. நம் மண்ணிற்குரிய குடம்புளி,பிணர்புளி, ராஜபுளி, புளிச்சங்காய் போன்ற புளிவகை மரங்களை இங்கு வளர்த்து வருகிறேன். இதற்கென தானியங்கி நீர்பாய்ச்சும் கருவிகளும் வைத்துள்ளேன். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.
இன்றைக்கு தமிழ்மொழி பல வழிகளில் அழிந்து வருகிறது. ஆனால் மூலிகைகளின் பெயர்களில் தான், எந்த மொழிக்கலப்பும் இல்லாமல் தமிழ்வாழ்ந்து வருகிறது. ‘வெயில் நுழைவறியா குயில் நுழைபொதும்பர்’ என்ற சங்கக்காலப்பாடலின் படி, வெயில் நுழைய முடியாத அளவிற்கு பசுமையான அடர்த்தியை இந்த இடத்தில் உருவாக்குவதுதான் என்கனவு. தற்போது, 1000க்கும் மேற்பட்டமரங்கள், தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. இப்பொழில் மூலம் சுத்தமான நறுமணக் காற்று கிடைக்கிறது. அரியவகை பறவையினங்களை காலை, மாலை வேளைகளில் இங்கு காணமுடிகிறது. ஏராளமான வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. பாபநாச மக்கள் காலையில் நடைப்பயிற்சிக்காக இங்கு வந்துசெல்கிறார்கள். இதன் மூலம் அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு கிடைக்கிறது. மூலிகைத் தோட்டத்தை சுற்றி நடப்பதற்கு வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலமாற்றத்தின் கோலம், இன்று மூலிகைகளின் பெயர்கள் கூட பலரும் அறியாநிலை உள்ளது. நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. மூலிகை வளங்களையும்,அவற்றின் பயனையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலை உருவாக்கியுள்ளேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள் எங்கள் மூலிகைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க வரலாம். மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். பணம்எதுவும் தேவையில்லை” என்கிறார், மைக்கேல் ஜெயராஜ்.
பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் மூலிகைகள் வளர்கிறது என்பதைவிட மூலிகைகள் வாழ்கிறது என்றே சொல்லலாம்.
Courtesy:siraguak.com