Bhoo thatha's Blogspot

Search my older Blog

Showing posts with label vaishnavam. Show all posts
Showing posts with label vaishnavam. Show all posts

Sunday, October 9, 2011

manavaala maamunigal--vaishnavam


மகான்கள் சித்தியடைந்த உடனே அவங்களோட திருமேனியைப் பள்ளிப்படுத்தவாங்க. ஸ்ரீராகவேந்திரரோட பிருந்தாவனம், மந்திராலயத்தில் இருக்கு.
. அதேமாதிரி, வைணவ மரபுல அமைஞ்ச சன்னதிகளை திருவரசுன்னு சொல்றது.
பெரியாழ்வாரோட திருவரசு திருமாலிருஞ்சோலை என்கிற அழகர் கோவில்ல இருக்கு.
திருமங்கையாழ்வாருக்கு திருக்குறுங்குடில திருவரசு அமைஞ்சிருக்கு
. இப்ப, நாம் மணவாள மாமுனிகளோட திருவரசை ஸ்ரீரங்கத்துல இருக்கு.'
.
"பெரிய ஜீயர், யதீந்திர பிரவணர், வர வர முனி இப்படிப் பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.

 உபதேச ரத்தின மாலை, ஆர்த்தி பிரபந்தம்னு பல நூல்களை இவர் தந்திருக்கார்.

 ஸ்ரீமத் ராமானுஜர் காலத்துக்குப் பின்னால, நிர்வாகச் சீர்குலைவுக்க ஆளாகியிருந்தது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில்.

 அதைச் சீரமைச்சவர் இந்த மணவாள மாமுனிகள்தான்.

இவரோட திருவாய்மொழி விளக்கத்தை, ஒரு வருஷ காலம், நம் பெருமாள் எந்த விழாவும் கொண்டாடாம் பொருந்தி இருந்து கேட்டாராம்.'
" ராமானுஜர் காஞ்சிபுரத்தல இருந்து திருப்பதிக்குப் போனார். அங்க இருந்த திருமலை நம்பிகள்கிட்டே, எனக்கு ராமாயணம் சொல்லணும்னு கேட்டார். அப்பறம் வான்னார் நம்பிகள். ஒரு தடவை, ரெண்டு தடவை இல்லை. 18 தடவை. பதினெட்டாவது முறையும் அதே பதில்தான். சரின்னு ராமானுஜர் முகம் சுளிக்காம கிளம்பினார். அவரைக் கூப்பிட்டு ராமாயணத்தைச் சொன்னார் திருமலை நம்பி.'


" அதையே மகான்கள் சொன்னா, அதுல இருக்கற சூட்சுமங்கள் புரியும்.'
"உதாரணமா, பிரம்மாஸ்திரத்தை இந்திரஜித் மேல விடாதே. அது உலகத்தையே அழிச்சிடும்னு லஷ்மணனுக்கு எச்சரிக்கை செய்தார் ராமன். ஆனா, அவர் ராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டுதான் வீழ்த்தினார். அப்ப ஏன் உலகம் அழியலை?'
"ஆமா, ஏன் அழியலை? லாஜிக் இடிக்குதே,' .
"இந்த லாஜிக்கை யோசிச்சவன் கம்பன். அவன் சொன்னான்; அக்கணத்தில் அயன்படை ஆண்தகை சக்கரப் படையொடும் தழீஇச் சென்றுனு. அஸ்திரத்தைச் சுத்தி, வளையம் மாதிரி சுதர்சன சக்கரம் போச்சு. அதனால், பிரம்மாஸ்திரம் வேற யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாம், ராவணனை மட்டம் தாக்கியது; வீழ்த்தியது. வெறுமனே ராமாயணத்தைப் படிச்சா, இந்த விஷயம் புரியுமான்னா புரியாது. யாராவது படிச்சுச் சொல்லணு

ஸ்ரீரங்கம் பெருமாளே, விழாக்கூட கொண்டாடாம, திருவாய்மொழி விளக்கத்தைக் கேட்டார்.'
"
"இதைக் கேட்கணும்; தெரிஞ்சுக்கணும்னு மனசுல ஒரு உத்வேகம் இருக்கணும். அப்படி இருந்தாத்தான். கவனம் முழுக்க அதுலயே இருக்கும். இல்லேன்னா, மனசும் புத்தியும் எங்கயோ இருக்கும் உடம்பு மட்டும் உட்கார்ந்து இருக்கும். அப்படிக் கேக்கறதாலயோ, அபபடிப் பட்டவர்களுக்குச் சொல்வதாலேயோ எந்தப் பயனுமில்ல. அதனாலதான், பொருந்தி உட்கார்ந்து கேக்கணும்னு சொல்றது.'
"COURTESY;DINAMALAR/KALKIOCT7,2011


Saturday, October 8, 2011

vaishnavam

Dear Arangan Adiyars,
Please visit http://thiruvarangam.com/events.html for Namperumal Vijayadhasami Purappadu pics..

Adiyen

Friday, October 7, 2011

vaishnavam


Read  Srivaishnavism Weekly Magazine issue dated 09-10-2011 & Thiru Adanur under Vaaram oru Kavithai  please open the attachments and  send your comments to : poigaiadaian1@hotmail.com
Also  make use of  the   “ FREE MATRIMONIAL “ Page  in our SRIVAISHNAVISM,  , by sending the messages about the boy / girl ( Gothram ; Star ; Height ; Qualification ; Job etc, ),Your expectations with your contact Address / Phone number to : poigaiadian1@hotmail.com
Dasan,       
Poigaiadian,
Editor.
__._,_.___
Attachment(s) from Parthasarathy Srinivasan
2 of 2 File(s)

urdhvapundram-religion

Kasturi Thilakam Lalata Palake..... '
Lord Krishna has musk tilak on the forehead.

A) Thiruman or Urdhva Pundram:

1) Thiruman as Kavacham:

The Vaishnavite Paribhasha (colloquial) for wearing Thiruman (Auspicious Clay) is Thiruman Kappu Saatal. The key word here seems to be Kaapu or Protection. That protection is achieved thru the Lord's weapons celebrated in Panchaayudha Sthotram. It is like Dig Bhandhanam before Mantra recitation, the request for protection of the limbs of body and protection from above, behind, sides etc.

Thiruman Kappu can be seen as a Kavacham. This confers protection to Vaishanavaas by wearing and thus invoking the weapons of the power of the Lord. This kavacham gives protection from the three kinds of afflictions of life (Kama, Krodha and Mathamacharyam).

2) Scripts on Thiruman placement:

Urdhva Pundram is associated with Urdhva Rethas celebrated in the Vedic Passage, Purushasuktam, Verse 13:
"Urdhva Retham virupaksham Viswaroopaya Namah"

Urdhva Pundaram is also symbolic of Sattvika Guna by Lord Krishna In Bhagavat Gita, 14.18:
" Urdhvam Gacchanti Sattvastha'.
urdhvam--upwards; gacchanti--go; sattva-sthah--one who is situated in the mode of goodness

Swami Desilkan elaborated on this in ‘Saccharitra Raksha’ and in ‘Panniru Thirunaamam’

Vishnu Dharmotram, Paarameshtya Samhita and Brahmaraatra Samhita give detailed procedure for wearing Thiruman. Index finger or ring finger is to be used. Middle finger should not be used.

The Thiruman wearing is two white lines and the red or yellow line at the centre, housing the Divine couple, who are never separated. The two white lines are like temple for them. Lord Himself says that he and His consort love to reside in the temple created by the two broad white lines of Thiruman. Narrow crowding of the two lines is not desirable.

3) Procedure:

There are number of mantras to create the paste of clay with water in one’s palm. Nrusimha Beejam is to be drawn at the center after completing the preparation of the paste. The Veda Mantras for the preparatory rituals are seven in number. Panchopanishad Mantra, Ashtaaksharam, Vishnu Shadakshara Mantram, Dwaadasaaksharam, Dwayam (Mantra ratnam), Vishnu Gayatri are to be included in the appropriate phases of the Pundram wearing ceremony. In between the twelve Names of the Lord Mahavishnu (Kesavaya Namah , Narayanaya Namah, Madhavaya Namah ......) are to be recited at the time of the decoration of the individual parts of the body.

The twelve names of Goddess Sri Mahalakshmi are to be recited during Srisurnam placing.

They are: Sriyayai namah, Amrutothbhavaayayai Namah, Kamalaayayai Namah,Chandra Sodharyayai namah, Vishnupatnyayai namah, Vaishnavyayai namah, Varaarohayayai namah,Harivallabhyayai Namah , Saarnginyayai namah, Devadevikaayayai namah, Surasundaryayai namah. Maha Lakshmyayai Namah, Sarvaabhishtapalapradhaayayai namah.

Guru vandanaams are also included then.

4) Reference book, Personal Collection:

"Sri Vaishanava Sadaachara Nirnayam" by Vidwan Villivalam Krishnamacharya, present 44Th Jeeyar of Ahobila Mutt, Pages 158 to 180, Year of publication1990 , Total Pages 946.



courtesy;sri cs rajagopalan

Thursday, December 3, 2009

vaishnavam

பாண்டிச்சேரியில் வரலாற்று புகழ்மிக்க கோயில்களில் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். பிரசித்த பெற்ற இத்திருத்தலம் புண்ணியம் சேர்ப்பதில் காசியைவிட வீசம் அதிகம் என்று புகழப்படுகிற. அகத்திய முனிவர் இத்திருக்காஞ்சியில் இக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்வதாக வரலாறு சொல்கிறது. இறைவன் பெயர் கங்கைவராக நதீஸ்வரர். அம்மன் பெயர்கள் (இரு அம்மன்கள்) மீனாட்சி, காமாட்சி.
இத்தலத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் மாசி மக விழாவில் நீத்தார் நினைவுக் கடன் செய்வது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அந்த நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும். எத்தகைய பாவ உயிர்களும் நேரே மோட்சத்துக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. மாசி மகத் திருநாளில் இந்த நதியில் மூழ்கியவர்கள் பாவங்கள் களையப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தணன் ஒருவன் மரணமடைந்த தன் தந்தையின் அஸ்தியை ஒரு பானையில் இட்டு அதை தலையில் சுமந்து கொண்டு காசிக்குப் பயணமானான். அங்கு சென்று கங்கையில் அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பது தான் அவனின் எண்ணம். போகும்போது நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துச் சென்றான். பல நாட்கள் பயணம் செய்தான், வழியில் திருக்காஞ்சி சங்கராபாணி ஆற்றில் நீராடினான். அப்போது அஸ்தி கலசத்தை நண்பனிடம் தந்தான். நண்பன் அதைத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடிவிட்டான். நீராடித் திரும்பிய அந்தணனிடம் தந்துவிட்டான். பின் பல நூறு மைல்கள் பயணம் செய்து இருவரும் காசியை அடைந்தனர்.
அங்கு அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அந்தணன் பானையை திறந்த போது அதைப் பார்த்த நண்பன் திடுக்கிட்டான். தான் திருக்காஞ்சியில் திறந்து பார்த்தபோது அஸ்தி பானையில் பூக்குவியல் இருந்ததாகவும், இப்போது அது சாம்பலாகவும் இருப்பதை நண்பன் கூறினான்.
இதனைக் கேட்ட அந்தணன் “வா, நாம் திரும்பி திருக்காஞ்சி சென்று இதனை சோதித்துப் பார்ப்போம்” என்று கூற, இருவரும். திருக்காஞ்சி அடைந்ததும் அஸ்தி திரும்ப பூக்குவியலானது. உடனே அந்தணன் வியந்து அதை சங்கராபரணி ஆற்றில் கரைத்து தகப்பனுக்கு நல்முறையில் தர்ப்பணம் செய்தான். இதன் காரணமாகத்தான் திருக்காஞ்சி தலம் காஞ்சியை விட வீசம் அதிகம் எனப் புகழ் பெற்றது என புராணம் கூறுகிறது. அது முதல் திருக்காஞ்சியில் நீத்தார் கடன் செய்யும் நிகழ்ச்சி ஒரு புனித நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் மகத்தன்று நடக்கிறது. மகத்துக்கு 10 நாட்கள் முன்பு ஆலயத்தில் கொடியேற்றி திருவிழா தொடங்குகிறது. விழா பத்து நாட்கள் நடக்கும்.
ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் மகா தீர்த்த வாரியும் நடக்கும். இந்த 10 நாட்களும் சுவாமி திருவீதி உலா வருவார். மகத்தன்று சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்த வாரி நடைபெறும் போது 32 ஆலய சுவாமிகள் ஆற்றங்கரைக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தீர்த்தவாரி முடிந்ததும் இரவுக்குள் அவரவர் ஆலயத்திற்குச் சென்று விடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து சுவாமிகளையும் தரிசித்து மகிழ்வுடன் செல்வார்கள். திருக்காஞ்சி வில்லியனூரிலிருந்து தென்கிழக்கில் அமைந்துள்ளது.

மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது. புதிதாகப் படிக்க விரும்புகிறவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிப்பது சிறப்பானது. மகா விஷ்ணுவராக அவதாரம் எடுத்த நாளும் அதுதான்.
அன்று மகா மகக் குளத்திலோ வேறு புண்ணிய தீர்த்தத்திலோ குளித்தால் பிதுர் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். மாசி நீராடல் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு மாக புராணம் படிக்கலாம். அல்லது பிறர் படிப்பதை கேட்கலாம்.
சாபத்தால் கழுதையான இந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரையில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அன்று நெல்லி மரத்தடியில், துளசிச் செடியின் கீழ் உள்ள மண்ணை உடலில் பூசிக் கொண்டு திருமாலை நினைத்தபடி நீராடினால் சகல பாவங்களும் விலகி விடும்.
மக நட்சத்திரத்தன்று ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும்.
முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மகா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.
இது முருகனுக்கு உகந்த நாள். அன்று முழுவதும் விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை. அன்று ஏழைக்கு அன்னதானம் செய்யும் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.
மக நட்சத்திரக் கடவுள் குரு பகவான். இருவருக்கு மஞ்சள் உடை அணிவித்து மஞ்சள் மலரால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும். அன்று தான் முருகன் சிவனுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தார். இரண்யாட்சகனை சம்ஹரித்து பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் மாசி மகம்.
கர்ணணைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி அந்த பாவம் நீங்க உரோமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். முனிவர் மாசி மக நாளில் ஏழு கடலில் நீராடினால் இந்தப் பாவம் விலகும் என்று கூறினார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல் நீராடல் என நினைத்தபோது ஒரு அசரீரி “திருநல்லூர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் ஏழு கடலை நினைத்து கொண்டு மாசி மகத்தில் நீராடினால் உனக்கு பாப விமோசனம் கிட்டும்” என்று கூறியது. குந்திதேவியும் அப்படியே செய்து பாப விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘சப்த சாகரத் தீர்த்தம்’ என்பதாகும். நாமும் அதில் மாசி மக நாளில் நீராடினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும்.
திருவண்ணாமலை ஆலய கோபுரம் கட்டிய மன்னன் வல்லாள மகாராஜா. இம் மன்னனுக்கு பிள்ளை இல்லை. எனவே ஆண்டுதோறும் மகாமகத்தன்று அண்ணாமலையாரே பிள்ளையாக எழுந்தருளி ஆண்டுதோறும் பள்ளி கொண்டாபட்டுக்குச் சென்று தீர்த்தவாரி கொடுத்து நீர்த்தார் கடன் செய்தார். தற்போதும் இது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலய அகோர சிவன் ஐந்து முகங்களுடன் பஞ்சமூர்த்தியாக காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும். மயிலை கபாலீஸ்வரர் கடலுக்குச் சென்று தீர்த்த வாரி வழங்குவார். இவ்வாலயத்தில் தான் சம்பந்தர் பூம்பாலையின் அஸ்தியை பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
தென்காசி விசுவநாதர் ஆலயத் தேர்த் திருவிழா மாசி மக பிரம்மோற்சவத்தில் நடக்கும் தேர் விழா முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது. பூண்டி முருகர் ஆலயத்தில் மாசி மக தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநெல்வேலியில் அன்று நடக்கும் தெப்ப விழாவிற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.அது போல் திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள். நாமும் மகத்தன்று தீர்த்தவாரியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பாவம் போக்கி அருள் பெறுவோம்.

vaishnavam

கண் பார்வை தந்தருளும்  ஸ்ரீ எம்பார்


ஸ்ரீ வைஷ்ணவ மரபில், ஆசாரியனுக்கு மிக விசேஷமான ஸ்தானம் அளித்து, அவரின் ஆணைப்படி தொண்டு புரிதல் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது. இவர்கள் தனது மேன்மையை கருத்தில் கொள்ளாது எப்போதும், ஆசாரியனின் புகழைப் பரப்புவதும், அவர்பால் தொண்டு செய்வதே தான் பெற்ற இன்பம் எனவும் கருதுவர்.
ஆசாரியனின் உபதேசங்களையும், அவரது திருநாமத்தின் மஹிமையையும் நினைத்து நினைத்தும், அவர் காட்டிய நல்வழியில் செல்வர். மேலும் ஆசாரியன் ஒருவர் தான் நற்கதிக்கு வழிகாட்டி என்றும், வீடுபேறு பெற உறுதுணையாக இருப்பார் என்பதுவும், அவர்களது கருத்தாகும். இந்த வகையில், ஜகத்குருவான இராமானுசரின் சிஷ்யராகவும், அவரது நிழலாகவும் இருந்தவர் ‘எம்பார்’ என்னும்
ஸ்ரீவைணவர். இவருக்கு அவரது தாய் பெரிய பிராட்டியார், தந்தை கமல நயன பட்டர் இட்ட பெயர் கோவிந்த பெருமாள் என்பதாகும்.
இவர் மதுரமங்கலம் என்னும் ஊரில் அவதரித்தார். இது ஸ்ரீபெரும்பூதூருக்கு 16 கி.மீ. தூரத்தில் மிகவும் பசுமையும், எழிலும், தோட்டம் துறவுகள் உள்ள இடமாகும்.
எம்பார் தை மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். முதன் முதலில் இவரை புருஷா காரமாக (நல்வழிப்படுத்தி திருமாலை அடைய வழி வகுத்து அளித்தல்) இருந்து நல்வழியில் நடத்தியும், வழிகாட்டியும் கொடுத்தவர் ‘பெரிய திருமலை நம்பிகள்’ ஆவார்.
எம்பார் முதலில் சைவ சித்தாந்தத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தால். அவரை இராமானுசர் திருத்தி பணி கொண்டு, தன் சீடராய் ஏற்று வைணவ சித்தாந்தத்தை போதித்து அருளினார் என்பர். இவர் அனுதினமும் திரு ஆராதனம் (பூஜை செய்தல்) செய்த பெருமாள் ‘அழகிய சிங்கர்’ என்கிற நரஸிம்மரே ஆவார்.
இவர் பெரிய திருமலை நம்பிகள் என்கிற ஆசாரிய புருஷருடன் வாழ்ந்து, அவர்காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பல தொண்டுகள் ஆற்றி வந்தாராம். அவரிடம் எல்லாவித வடமொழி ஸாஸ்திரங்களையும், தமிழ் மறையான நாலாயிர திவ்யப்ர பந்தத்தையும் கற்று அறிந்தார்.
பிறகு இவர் பெரிய திருமலை நம்பிகளின் மூலம் இராமானுஜரை ஆஸ்ரயித்தார் (அவரையும் அவரது சித்தாந்தங்களையும் ஏற்று நடத்தல் என்பதாகும்).
இவர் இயற்கையில் மிகவும் இரக்கக் குணம் படைத்தவர். அதற்கு உதாரணமாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சியைச் சொல்லலாம்.
ஒரு சமயம் நந்தவனத்தில் ஆசாரியனுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு துன்பப்படுவதைக் கண்டு, இவர் அதன் நாவில் இருந்த முள்ளை எடுத்து காப்பாற்றினாராம். என்னே, அவரது கருணை! இதையறிந்த இராமானுசர் அவரது செய்கையை பாராட்டி, அவர் பிராணிகளிடம் வைத்துள்ள கருணையைக் கண்டு உளம் மகிழ்ந்தாராம்.
இராமானுசர் திரு அரங்கத்தில் இராமாயண கால«க்ஷபங்கள் செய்து வந்தாராம். அதை முடித்துக் கொண்டு திருமலை நம்பியிடம் விடை பெற வேண்டி கோரினார். அவ்வமயம் அவர் “இத்தனை தூரம் வந்து எங்களுக்கு இராமாயணத்தின் சிறப்பை நன்முறையில் எடுத்து உரைத்த உமக்கு, நான் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” எனக் குறைபட்டாராம். ஆயின் இராமானுஜர், “அப்படியாயின், திருத்தி பணி கொண்ட கோவிந்த பெருமாளை (எம்பார்) எமக்குத் தந்தருளும்” என்றாராம்.
இதைக் கேட்ட திருமலை நம்பிகள் மிகவும் ஆனந்தம் அடைந்து, கோவிந்த பெருமாளை அழைத்து, “நம்மைப் போல் இவரை நினைத்து இருப்பீராக” எனச் சொல்லி, தாரை வார்த்து, தத்தம் பண்ணி இராமானுசருடன் அனுப்பி வைத்தாராம்.
இராமானுசர் கோவிந்த பெருமாளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு சோளசிம்மபுரம் என்கிற கடிகாசலத்தில் உள்ள அக்காரகனி (யோக நரசிம்மர்) என்கிற நரசிம்மரையும், திருப்பக்குழியில் கோயில் கொண்டு அருள்புரியும், விஜயராகவப் பெருமானையும் மங்களாசஸனம் (போற்றிப் பாடுதல்) செய்துவிட்டு காஞ்சிபுரம் வந்து, திருக்கச்சிநம்பியிடம் சேர்ந்தாராம்.
காஞ்சிபுரத்தில், இராமானுஜர் யாதவப் ப்ராகாசரின் குருகுலத்தில் இருந்த போது, இவரின் அறிவாற்றலையும் அணுகும் முறையையும், கண்டு பொறாமை கொண்டவர்கள் இவரைத் தீர்த்துக் கட்ட (கொல்ல) வேண்டிய முயற்சியில் இறங்கினார்களாம். இதை அறிந்த கோவிந்தப் பெருமாள் இந்த முயற்சியை முறியடித்து இராமானுசரைக் காப்பாற்றினாராம். அவர் எப்பொழுதும் இராமானுஜருடன் இருந்து வந்தமையால் இவர் இராமானுசரின் நிழல் எனப் போற்றப்பட்டார்.
ஒரு சமயம் தன்பால் உள்ள ஞானம், பக்தி வைராக்யத்தை தனக்குத் தானே போற்றிக் கொண்டாராம். இதை அறிந்த சிலர், ‘ஆணவம் கூடாது, தாழ்மை அன்றோ பகவத் பாகவதர்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார்களாம். அதற்கு கோவிந்தப்பெருமாள், “இந்த குணங்களை எல்லாம் தோற்றுவித்தவர் எனது ஆசாரியன் ஸ்ரீ இராமானுசர் என்னும் லோககுரு. ஆகையால், இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவருக்கே” என்றாராம். இதையறிந்த இராமானுஜர் வியந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். என்னே ஆசாரிய பக்தி!
ஒரு சமயம் கோவிந்தப்பெருமாள் ஓர் ஆடல் அழகி வீட்டில் இராமானுசரை பற்றிய குணவிசேஷ தாலாட்டுப் பாடலைக்கேட்டு அவளுடைய வீட்டு வாயிலில் மெய் மறந்து நின்று இருந்தாராம்.
இதை அறிந்த ராமானுஜர், அவரைக் கண்டித்தபோது “தேவரின் குணங்களைப் போற்றிய தாலாட்டு பாடல் என்னை ஈர்த்தது, மேலும் அனுபவிக்கச் செய்தது” என்று பணிவன்புடன் நடந்ததை விரிவாக விளக்கினாராம். இதன்மூலம் அவரது ஆழ்ந்த ஆசாரிய பக்தியை வெளிக்காட்டினார் எனலாம்.
இவருக்குத் திருமணமாயிருந்தும் இல்லறத்தில் சிறிதும் நாட்டமில்லை. ஆயின் எப்போதும் ஆசாரியனுக்குப் பணி செய்வதே தன் கடன் என இருந்தாராம். இவரது தாயாரின் ஆணைப்படி தனது மனைவியை தனியாகச் சந்தித்து, அந்தர்மியான பகவானின் குண விசேஷங்களை எடுத்து உரைத்தும், ஆசாரியனுக்கு செய்யும் பணி ஒன்றுதான் மறுவீடு (மோஷம்) அளிக்கும் எனவும் கூறி மனைவியை அனுப்பி வைத்தார் என்பர்.
இந்த வைராக்கியத்தை அறிந்த இராமானுஜர் இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடி கோவிந்தப் பெருமாளுக்கு ஸந்யாஸ தீ¬க்ஷ கொடுத்து அவரது பெயரை சுருக்கி எம்பார் என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்று முதல் கோவிந்தப் பெருமாள், எம்பார் என அழைக்கப்பட்டார். எம்பார் அவதார ஸ்தலமான மதுர மங்கலத்தில் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமானும், கமலவல்லித் தாயாரும் கோயில் கொண்டு அருள் புரிகிறார்கள்.
இவர் அருளிய பிரபந்தங்கள் ‘விஜ்யான ஸ்துதி’ என்பதாகும். இவர் சதாசர்வ காலமும் ஆசாரியனே சர்வம், என்றும் எம்பெருமானின் (திருமால்) லீலா விபுதிகளே வாழ்க்கை என வாழ்ந்து காட்டியவராவார். இவரது (எம்பார்) அருளால் கண்பார்வை கோளாறுகள் நிவர்த்திக்கப்படுவதால் இத்தலத்துக்கு அடியார்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கண்பார்வை பெற இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
அப்ஜபாணி பதம் அம்புஜநேத்ரம்
நேத்ர ஸாத்குரு கரீஸ! ஸதா!! மே!
பொருள்: பேரழகான எம்பெருமானே, பேரழகனான உன் வடிவழகை எப்போதும் என் கண்களுக்குத் தெரியும்படி அருள்புரிவாயாக என்பது மேற்படி ஸ்லோகத்துக்கு அர்த்தமாகும்.
அவரது அவதார ஸ்தலமான மதுரமங்கலத்தில் தை மாதம் 10 நாட்கள் (7.02.09) புனர்பூசம் வரை திருவிழா நடக்கிறது.

Wednesday, December 2, 2009

vaishnavam

உள்ளம் கவர் கள்வன்!


''என்னுடைய மூன்று நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால், தங்களை திருமணம் செய்து கொள்வதில் குறையேதும் இல்லை. என்ன... நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?'' - குமுதவல்லி இப்படிக் கேட்டதும் உடன் வந்த அனைவரும் ஆவேசமானார்கள்; உடைவாள் மீது கையை வைத்தனர்; எந்த நேரமும் அவளைக் கொன்று போடத் தயாராக நின்றனர்.
திருஆலி தேசத்து மன்னன் நீலனுக்கு, அந்த தேசத்தின் சாதாரண பிரஜை ஒருத்தி நிபந்தனை விதித்தால், சேனைகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்? சோழ மன்னனின் கீழ் சிற்றரசனாக ஆட்சி செலுத்தினாலும் மன்னன் மன்னன்தானே?!
ஆனாலும்... புன்னகை மாறாமல், நிபந்தனையை விவரிக்கும்படி கேட்டான் மன்னன். திருநாங்கூரில் வீதியுலா வரும் போது, இவளைப் பார்த்ததுமே மனதைப் பறிகொடுத்ததால்தான் இத்தனையும்!
''ரௌத்திரத்தைத் துறந்து அந்தணனைப்போல் அன்பும் கருணையும் கொண்டு வேதம் பயில வேண்டும்; ஸ்ரீவைஷ்ணவனாக, பெருமாளின் அடியவனாக, பஞ்ச சம்ஸ்காரம் செய்ய வேண்டும்; இல்லையென்று சொல்லாமல் அடியவர்களுக்கு அனுதினமும் அன்னதானம் இட வேண்டும்'' என்றாள். மன்னனும் சம்மதித்தான்!
தனது சத்திரிய குணங்களில் இருந்து மெள்ள மெள்ள விலகினான்; வேதங்களையும் மந்திரங்களையும் பயில... சக மனிதர்கள் மீதான வாஞ்சை மனதுள் பொங்கிப் பிரவாகித்தது. திருநறையூர் (கும்பகோணம் அருகேயுள்ளது) சென்று, திருமாலவன் சந்நிதியில்... அங்கே இருந்த தீபத்தால், தோள்களில் சங்கு - சக்கர இலச்சினையும் பொறித்துக் கொண்டான்! முகத்தில் சாந்தம்; மனதுள் பேரன்பு; தோள்களில் சங்கு - சக்கரம்; நெற்றியிலும் மார்பிலும் உடலிலுமாக பெருமாளின் திருச்சின்னங்கள்... என வந்த திருஆலி தேசத்து மன்னனைக் கரம்பிடித்தாள் குமுதவல்லி! பிறகு இருவருமாகச் சேர்ந்து, அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர்.
யுத்தம், வரி என அரசுக் காரியங்களில் இருந்த கவனம் நழுவி, பெருமாளின் தீவிர பக்தனானான் மன்னன். அடியவர்க்கு அன்னமிடுவதையே பெரும்பேறாகக் கருதி செயல்பட்டவனுக்கு வந்தது சோதனை! கஜானாவில் இருந்த செல்வங்கள் அனைத்தும் கரைந்தன; இனி அன்னமிட பணம் இல்லை எனும் நிலை! நீலன் கலங்கினான்; தவித்தான்; துடித்தான்; துவண்டான்; 'எப்படியேனும் அன்னமிட்டே ஆக வேண்டும்' என எண்ணினான்! இதனை அறியாமலா இருப்பார் பெருமாள்?!

'அருகேயுள்ள வேதராஜபுரத்துக்கு புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதி வந்திருக்கிறார்களாம்; பொன்னும் பொருளும் ஏராளமாக வைத்திருக்கிறார்களாம்!' - யாரோ சொல்ல... உற்சாகமானான் நீலன். ஆம்... ஆபரணங்களை அபகரித்து வந்து, பெருமாளின் அடியவர்களுக்கு அன்னமிட முடிவு செய்தான்.
அவர்களை நடு வழியில் மறித்தான்; ஆபரணங்களைத் தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டினான். நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். அந்தக் காலத்தில் ஆண்கள் மெட்டி அணிவது வழக்கம். ஆகவே, மெட்டியையும் கேட்டான் நீலன். 'நீயே கழற்றிக் கொள்' என்றான் பெண்ணின் கணவன். கழற்ற பிரயத்தனம் செய்தான் நீலன்; இறுதியில் தனது பற்களைக் கொண்டே கழற்ற முனைந்தான்; முடியவில்லை.
''என்னப்பா மந்திரம் போட்டாய்? கழற்றவே முடியலியே...'' என்றான் நீலன். உடனே அவன், 'ஆமாம்.. மந்திரம்தான்! காதைக் கொடு சொல்கிறேன்' என்று சொல்ல... நீலனும் செவி கொடுக்க... வந்தவன், 'ஓம் நமோ நாராயணாய' எனும் திருமந்திரத்தை உச்சரிக்க... அவ்வளவுதான்! உடல் முழுவதும் சிலிர்ப்பு பரவியது நீலனுக்குள்! உதறிப் போட்டது உடல்; கண்களிலும் முகத்திலும் தேஜஸ் கூடியது; நிமிர்ந்து பார்த்தவன் இன்னும் பிரமித்தான்.
ஆமாம்! தன் உள்ளம் கவர்ந்த கள்வனாம் நீலனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்த நாராயணன், தேவியுடன் திருக்காட்சி தந்தார்!
நாராயண மந்திரத்தை எவரேனும் ஆச்சார்யர் போதிக்கலாம்; ஆனால் நாராயணரே போதித்து அருளினால்...? எவருக்கும் கிடைக்காத பாக்கியம் நீலனுக்குக் கிடைத்தது. அன்று முதல் நீலன், ஆழ்வார் ஆனார்; திருமங்கையாழ்வார் என போற்றப்பட்டார்! இவருக்கு பெருமாள் காட்சியளித்து, எட்டெழுத்து மந்திரம் உபதேசித்த தலம்- திருநகரி!

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ளது திருநகரி. திருமங்கையாழ்வார் அவதரித்ததும் இங்குதான் (திருக்குறைய லூரில் அவதரித்ததாகவும் சொல்வர்; 'மண்ணியில்நீர் தேங்கும் குறையலூர் சீர்கலியன் தோன்றிய ஊர்...' என்று மணவாள மாமுனிகள் உபதேசரத்ன மாலையில் குறிப்பிடுகிறார்). இருந்தாலும், இவர் வாழ்ந்தது திருநகரியில்தான்.
ஒன்பது நிலை ராஜகோபுரம், ஏழு நிலை மற்றும் மூன்று நிலை கோபுரங்களும் கொண்டு, அழகுறத் திகழும் ஸ்ரீவேதராஜபெருமாள் ஆலயத்தையும், அமர்ந்த கோலத்தில் எழுந்தருளும் வேதராஜரையும் தரிசித்தால், இந்தத் தலத்தை விட்டுச் செல்ல யாருக்குத்தான் மனம் வரும்?
நான்கு யுகங்களைக் கடந்து காட்சி தரும் தலம்; சோழ தேசத்து
40 திருப்பதிகளில் 18-வது தலம்; பஞ்ச நரசிம்ம க்ஷேத்திர ஆலயங்களில் ஒன்று; குலசேகர ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்து அருளிய கோயில் என பெருமைகள் பல கொண்ட பிரமாண்ட ஆலயம்!
உள்ளே, இரண்டு துவஜஸ்தம்பங்கள்; ஒன்று ஸ்ரீவேதராஜ பெருமாளுக்கு; இன்னொன்று... திருமங்கையாழ்வாருக்கு! இன்னொரு விஷயம்... வேதராஜ பெருமாளுக்கு அருகிலேயே சந்நிதி கொண்டுள்ளார் திருமங்கையாழ்வார். உற்ஸவரின் திருநாமம் ஸ்ரீகல்யாணரங்கநாதர். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.
எந்த ஊரிலும் இல்லாத இன்னொரு விசேஷம்... ஊரைச் சுற்றி சுமார் 4 கி.மீ. தொலைவுகளில் 11 திவ்வியதேச ஆலயங்கள் உள்ளன. திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய்கோயில், மணிமாடக்கோயில், வைகுந்த விண்ணகரம், திருத்தேவனார்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய இந்தத் தலங்களை, திருநாங்கூர் திருத்தலங்கள் என்பர். இவற்றுள், திருநகரி தலமும் ஒன்று!
மேற்குப் பார்த்த ஆலயம்; ஸ்ரீவேதராஜபெருமாளும் மேற்கு பார்த்தபடியே காட்சி தருகிறார். உள்ளே நுழைந்ததும் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் ஒரு பக்கமும்... ஸ்ரீஆண்டாள் இன்னொரு பக்கமும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். உடையவர் மண்டபம், திருவந்திக்காப்பு மண்டபம், உத்ஸவ மண்டபம் என விஸ்தாரமான ஆலயத்தில், விழா வைபவங்களுக்கு குறைவே இல்லை.
ஸ்ரீராமாநுஜர், எம்பார், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனிச் சந்நிதி உண்டு. இவர்களின் திருநட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. குறிப்பாக, திருமங்கையாழ்வாரின் திருஅவதார நாளன்று, வெகு விமரிசையாக சிறப்பு அலங்காரம், வீதியுலா, உத்ஸவம் என திருநகரியே அமர்க்களப்படும்!
இந்த நாளில், திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாடி, பெருமாளைப் பணிவோம்! எல்லா நலனும் பெறுவோம்! 


நன்றி; சக்தி விகடன்



Saturday, November 28, 2009

vaishnavam----acharyargal

                                                             நம் பிள்ளை      
ஸ்ரீவசநபூஷணம், ஆசாரியா ஹ்ருதயம் முதலிய நூல்கள் உதயம்
பிள்ளைலோகாசாரியர் தம் முன்னவர்கள் உபதேசித்துள்ளதும் தாங்களே அனுஷ்டித்து வந்ததும் ஆன நூல்களை அனுசரித்து 18 ரகஸ்ய க்ரந்தங்களாக (முக்கிய நூல்களாக) ஆக்கி அருளினார். அவற்றுள் ஸ்ரீவசநபூஷணம் என்னும் நூல், முன்னோர் மொழிந்த வசனங்கள் என்பதால் அப்பெயர் பெற்றது.
அதில் மற்றவர்களுக்குச் சாஸ்த்ர விரோதம் போல் தோன்றும் பல அனுஷ்டானங்களை பெரியவர்களின் உபதேசங்களாலும் அவர்கள் அனுஷ்டித்த வழிபாடுகளாலும் நிரூபித்தார்கள். அவற்றுக்கும் சாஸ்திரங்களுக்கும் விரோதமில்லாமையைக் காட்டினார்கள். பிரபந்தங்களுக்கு இவற்றையே தாம் முடிந்த முடிவாகக் கொள்ள வேண்டும் என்றும் உபதேசித்தார்.
இந்த ஸ்ரீவசநபூஷண நூலைப் பற்றி தூப்புல் பிள்ளை என்பார், (வேதாந்த தேசிகர்) சாஸ்திர விரோதமானது என்று கூற நேர்ந்தது. அதைக் கேட்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அவரோடு அதற்காக விவாதம் செய்தார். தூப்புல் பிள்ளை அப்படியும் மனம் இசையாமல் இருந்துவிட்டார். ஆனாலும் நம்பெருமாள் வெளி ஊர்வலமாகப் புறப்படும் போது இருவரும் சேர்ந்து ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டார்கள்.
அதாவது நாயனார் கூறுவதைப் பெருமாள் ஏற்றுக்கொண்டால் தூப்புல்பிள்ளை பன்னிரண்டு வருஷங்கள் நம்பெருமாள் சேவையை இழந்து ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே போய்விட வேண்டும்.
நம்பெருமாளும் தமது மாலை ஒன்றை நழுவவிட்டு அதை நாயனாருக்கு அணிவிக்கச் செய்து அதன் மூலம் தம் இசைவைத் தெரிவித்துவிட்டார். இவ்விதத்தில் பெருமாள் ஆசார்ய ஹ்ருதய நூலை அங்கீகரித்துவிட்டார். பிறகு தூப்புல்பிள்ளையும் தாம் உறுதி செய்து கொண்டபடி ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறினார்.
தூப்புல் பிள்ளை கண்ட கனவு
பிறகு பெரியவாச்சான்பிள்ளை பெரிய பெருமாளைச் சேவித்து விண்ணப்பம் செய்தார்.
“பெருமாளே! தாங்கள் பரந்த கருணையுள்ளங் கொண்டு பக்தர்களின் சிறந்த வாழ்வுக்காக பல நூல்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அவற்றை நாதமுனிகள் என்பாருக்கு ஆழ்வாரைக் கொண்டு நேராகவே உபதேசம் செய்ய வைத்தீர்கள்.
இவ்விதம் வைணவத்தை பரம்பரையாக இன்றளவும் நடத்திக் கொண்டு வருகிறீர்கள். இந்தத் தரிசனத்துக்கு எதிராக தூப்புல் பிள்ளை என்கிறவர் தாம் செய்த உபாசனையால் பெற்ற ஞானத்தால் கர்வம் கொண்டுவிட்டார். அதனால் வேறான கருத்துகளைக் கூறி வருகிறார். அவரைத் தாங்கள் திருத்தி, மற்றவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
பெருமாளும் அதற்கு இசைந்தது போலத் தூப்புல் பிள்ளைக்கு ஒரு கனவு உண்டாகும்படி செய்தருளினார். அந்தக்கனவில் ஸ்ரீரங்க நகரத்திலே தோரணங்கள் கட்டுவது, திருவீதிகளெல்லாம் நீர் தெளித்துக் கோலங்களிடுவது முதலான அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதற்கு என்ன காரணம் என்று தூப்புல்பிள்ளை தம் கனவிலேயே யோசித்தார். மேலே இன்னும் கனவு தொடர்ந்தது.
வைஷ்ணவர்களும் ஜீயர்களும் பெரியவாச்சான் பிள்ளையைப் பல்லக்கிலேற்றிச் செல்ல வழியிலுள்ளார், தூபமெடுப்பார், பூமழை சொரிவார், ஆரத்தி எடுப்பார், அவருக்கு வாழ்த்தொலி தெரிவிப்பார் யாவருமே வழிநடத்தினார்கள்.
தூப்புல்பிள்ளை தம் கனவிலேயே திடுக்கிட்டார். ஏனெனில் அது போல் செய்வது எல்லாம் இறந்து விட்டவர்களுக்குக் கடைசியாகச் செய்யப்படும் மரியாதை.
ஆனால் பெரியவாச்சான்பிள்ளை இன்னும் உயிரோடு இருக்க, அவருக்கு இது மாதிரி நடப்பது எல்லாம் ஏன் என்று கனவிலேயே யோசித்தார் தூப்புல்பிள்ளை.
அப்படி அந்தக் கடைசி ஊர்வலம் பெரிய பெருமாள் கோபுரம் வந்ததும் பெருமாளும் நாச்சி மாருடம் கூடி பெரியவாச்சான் பிள்ளையை அழைத்துக் கொண்டு போனார்கள். மற்ற பெரியவர்களெல்லாரும் கோவிலுள்ளே புகுந்தார்கள். எல்லாரையும் உள்ளே விட்ட வாயில் காப்போர் தூப்புல் பிள்ளையை உள்ளே போக விடாமல் தடுத்துவிட்டனர்.
“ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று அவர்களைத் தூப்புல்பிள்ளை காரணம் கேட்டார். அவர்களும் “பெரிய பெருமாளின் வைணவ மார்க்கத்தில் நீர் அபசாரப்பட்டீராகையாலே உம் மேல் பெருமாள் மனம் கலங்கியுள்ளாராகையாலே உள்ளே புகுவதற்கு உமக்கு உத்தரவில்லை; அதனால் வெளியே போம்” என்று தள்ளி விட்டனர்.
பெரியவாச்சான் பிள்ளையுடன் தூப்புல்பிள்ளை விவாதம்
இவ்வாறு தாம் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்டு தூப்புல் பிள்ளை அவர்கள் காலை விடிந்ததும் நோய்வாய்ப்பட்டிருந்த பெரியவாச்சான் பிள்ளையிடன் சென்றார். தண்டனிட்டு உடல்நிலை பற்றி விசாரித்தார். அவரைக் குளிர நோக்கிப் பெரியவாச்சான் பிள்ளையும்,
“நமக்கு பெருமாளான பகவானின் வெறும் விளையாட்டாகக் கருதப்படும் இந்த உலகத்தை விடக்கூடிய நேரம் வந்துவிட்டது. இனி வைகுந்தம் போவதாக இருக்கிறோம்.” என்று கூறினார். தூப்புல்பிள்ளையும், அதைக் கேட்டதும் “தாங்கள் திருநாட்டுக்கு (வைகுந்தத்திற்கு) எழுந்தருளுவதாக நேற்று இரவு கனாக் கண்டேன்” என்றார். தாம் கண்ட கனவு முழுவதையும் விவரித்தார். “அப்படியா!” என்று மனம் உவந்த பெரியவாச்சான் பிள்ளையும் தூப்புல் பிள்ளையை அணைத்துக் கொண்டார்.
பிறகு வாயில் காப்பாளரால் தாம் உள்ளே போக முடியாமல் தள்ளப்பட்டதைப் பற்றி தூப்புல்பிள்ளை அவரிடம் கலக்கத்துடன் கூறினார்.
“இனி இதற்கு அடியேன் செய்யவேண்டுவது யாது?” என்று கேட்டார். அவருடைய நிலை கண்டு மனமிரங்கினார், பெரிய வாச்சான்பிள்ளை. கருணையோடு அவரை பார்த்தார்.
“தூப்புல் பிள்ளை! நாம் ஒன்று சொல்கிறோம் கேட்பீரா?” என்று கேட்டார். “அப்படியே செய்கிறேன்” என்று தூப்புல்பிள்ளை சொன்னார்.
“தாங்கள் வைணவத்தின் இதர ஆசாரியார்கள், பக்தர்கள் ஆகியோருடன் சேரவில்லை. தாங்கள் கல்வியை (வித்யையை) அடைவதற்கு ஹயக்ரீவரை உபாசனை செய்து அருள் பெற்றீர்கள். அதனால் வித்யையின் பெருமையை அடைந்தீர். அந்த வித்தைக்குப் பயனால் தாங்கள் மற்றவர்களது வழிபாடு, அனுஷ்டானங்கள் ஆகியவற்றைத் தாங்கள் வெல்வதற்கு முயலக்கூடாது.
முன்னோர்களின் சம்பிரதாய முடிவான அர்த்தங்களைக் கண்டித்துப் பேசக்கூடாது. அதற்காக புதுப்புது அர்த்தங்களை உண்டாக்கி அதைப் பரவ செய்தீர். அது பெரும் அபசாரம். ஆகையாலே பெருமாள் திருவுள்ளமே கலங்கிற்று. அதனால் தாங்களாக சிருஷ்டித்த அர்த்தங்களைப் பரப்பாமல் நம் ஆசாரிய முன்னோர்கள் கூறிய அர்த்த நெறியில் நில்லும்” என்று அருளினார்.
அதற்குத் தூப்புல்பிள்ளை, “அடியேன் அப்படியா செய்தேன்? ஸ்ரீபாஷ்யத்தைச் சொல்லிக் கொண்டும், அதற்குத் தக்கபடி சில நூல்களை எழுதி வெளியிட்டும் வந்தேன்.” என்று பதில் சொன்னார்.
பெரியவாச்சான்பிள்ளையும், “அதையன்று நான் குறிப்பிட்டது. இராமானுஜர் எழுதியுள்ள ஸ்ரீபாஷ்ய விஷயத்திலும் கூட நீர் சும்மா இருந்தீரா? அதில் சில குற்றங்களுண்டென்று எழுதினீர்கள். அப்போது எம்பெருமானாரான இராமானுஜரே உம் கனவில் தோன்றி உம்மைக் கோபித்துக் கொண்டார். பிறகு தான் நீர் திருந்திப் பயபக்தியுடன் பிழை பொறுத்தருள வேண்டினீர்கள். பின்னர் இராமானுஜருக்கு உகந்ததாக “யதிராஜ ஸப்ததி” என்கிற நூலை எழுதினீர்கள். ஸ்ரீபாஷ்யத்தைப் பிரசாரம் செய்தீர்கள்.
இவற்றையெல்லாம் பற்றிக்கூட நாம் சொல்லவில்லை. நம்மாழ்வார் நாதமுனிகளுக்குத் திவ்ய ப்ரபந்த விஷயமாகவும் விசேஷ அர்த்தங்கள் பல கூறியுள்ளார். அந்த அர்த்தங்களைக் கண்டித்து எழுதினீர். இது தவிர வேறே சில அர்த்தங்களைக் கற்பித்து நூல்கள் எழுதினீர்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டுமென்கிறேன்.” என்று கூறினார்.
அதற்குத் தூப்புல் பிள்ளை, “நம்மாழ்வார் திவ்ய ப்ரபந்தங்கட்கு ரகசிய அர்த்தங்கள் செய்ததில்லையே! அப்படியிருக்கும்போது அதற்கு மாறாக நான் செய்திருந்தால் அதைப் பிழை என்று சொல்லலாமா? இந்த அர்த்தங்களை இடையில் வந்தவர்களன்றோ கூறினார்கள்? அவை சாஸ்த்ர ப்ரமாணங்களுக்கு ஒத்து இராததன்றோ? அதனால் தானே நானும் கண்டித்து எழுதினேன்.” என்றார்.
அது கேட்டுப் பெரியவாச்சான்பிள்ளை, “அது அப்படியன்று; நம்மாழ்வார் மதுரகவிகள் மூலமாக வெளியிட்ட திருவாய்மொழி முதலிய ப்ரபந்தங்கள் மறைந்து போயின. பின்பு பெருமாள், நம்மாழ்வாரைக் கொண்டு நாதமுனிகளுக்கு நேராக அருளும்படி செய்தார். நாதமுனிகளும் அதையே தமக்குப் பின்னால் வந்தவர்களுக்கு அருளிச்செய்தார். இப்படி பரம்பரையாக வந்தபோது பிற்காலத்தவர் இந்த அர்த்தங்களை மந்தமதிகளும் அறியும்படி நூல் வடிவமாக்கினர். அதனால் அதற்கெல்லாம் மாறாகச் செய்வதைத் தாங்கள் விடவேண்டும் என்கிறேன்.” என்றார்.
அதற்கு மறுபடியும் தூப்புல்பிள்ளை, “ஆழ்வார் ப்ரமாணங்களுக்கு விரோதமாக ஏதாவது செய்தேனோ? அதை எனக்குக் கூறவேண்டும்” என்று கேட்டார்.
பெரியவாச்சான்பிள்ளையும், “ஆழ்வார் முக்திதசையில் எல்லாவற்றையும் நேராகக் கண்டிருக்கிறவராகையாலே தாம் நேரே கண்ட அர்த்தங்களையே நாதமுனிகளுக்கு அருளினார் அல்லவா? அவற்றுக்குத் தக்கவாறுள்ள பிரமாணங்களைக் கைக்கொண்டு மற்றுள்ளவற்றையும் அதற்குத் தக்கவாறு இசைவிக்கவேண்டும். கண்டதைக் கொண்டு காணாதவற்றை ஒருங்கு விடவேண்டும். காணாததைக் கொண்டு கண்டதை அழிக்கலாமா? ஆளவந்தார், எம்பெருமானார், திருக்குருகைப்பிரான் பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், பட்டர், நஞ்ஜீயர் முதலானோருடைய பெருமைகளை தாங்கள் அறிந்ததில்லையா? அவர்களுக்குத் தெரியாத பிரமாண நிலை நமக்குத் தெரியுமோ?
இவற்றை விடுங்கள். வெறும் சாஸ்த்ரங்களைவிட ஆழ்வார் செய்தவை தான் மிகமிக முக்கியமானவை. ஆகவே தான் தத்வத்திலும் (உண்மைப் பொருளிலும்) அனுஷ்டானத்திலும் நாதமுனி மூலமாக அருளிய கட்டளையைப் பெற்று அதுவே சத்யமென்று நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
அதற்குச் சேராதவற்றைக் கேள்வி எழுப்பி நம்முன்னோர் அனுகூலங்களை மட்டும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த முன்னோர்களின் அர்த்தங்களையே மற்றவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு உபதேசித்துக் கொண்டு வந்தார்கள். அதனால் அந்த நிலைக்கு மாறாக நீர் வேறே ஓர் அர்த்தத்தைக் கூறி வரும் புதிய வழியை விட்டுவிட வேண்டும்” என்றருளிச் செய்தார்

நன்றி;ஞான ஆலயம்