Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, January 16, 2010

KUTTI-FILM REVIEW

 பொங்கல் திருநாளில் எங்கள் குடும்பம் பிக் பம் புகழ் ஜீவா ருக்மணி திரை  அரங்கில்கண்டு களித்த ''குட்டி'' பட  விமர்சனம்

 தெலுங்குவில் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கி வசூலில் பட்டையை கிளப்பிய "ஆர்யா" படத்தின் ரீமேக் . இளகிய மனசுடைய ஷ்ரேயா கன்னியாகுமாரியில் தனக்காக கடலில் குதித்த முகம் தெரியாத ஒருவன் இறந்து விட்டான் என்றும் தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்று தினமும் வருந்துகிறார் . அதனால் சமீர் தட்டாணி தன்னை ஸ்ரேயா காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டும் பொழுது கன்னியாகுமரி சம்பவம் நினைவுக்கு வருகிறது . உடனே சமீரின் காதலை ஏற்றுக்கொள்கிறார் ஸ்ரேயா . அப்பொழுது தான் ஸ்ரேயா வாழ்கையில் தனுஷ் நுழைகிறார் . ஸ்ரேயா வேறொருவனை காதலிப்பது தெரிந்தும் அவளிடம் தன காதலை சொல்கிறார் தனுஷ் . "நான் உன்னை காதலிக்கிறேன் நீ யாரை காதலித்தாலும் பரவாயில்லை என்னுடைய காதலை நீ உணர்ந்தால் மட்டும் போதும்" என்று ஸ்ரேயா பின்னாலயே சுற்றுகிறார் தனுஷ் . இதனால் வெறுப்படையும் சமீர் தனுஷை முறைக்கிறார் . சமீரின் அரசியல்வாதி தந்தை ராதா ரவி வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து முடிக்கிறார் , பின் தனுஷ் உதவியுடன் சமீர் -ஸ்ரேயா காதல் தொடர்கிறது . ஒரு கட்டத்தில் அடியாட்கள் சூழும்போது ஸ்ரேயாவை கலட்டி விட்டு ஓட்டம் எடுக்கிறார் சமீர் . அந்த தருணத்தில் ஸ்ரேயாவை காப்பாற்றுகிறார் தமிழ் நாட்டின் புரூஸ் லீ தனுஷ் .பின் ஸ்ரேயாவுக்கு தனுஷ் மீது காதல் மலர்கிறது . அதை வெளிபடுத்த நினைக்கும் நேரத்தில் தன் தந்தையை சமாதான படுத்தி அழைத்து வருகிறார் சமீர் . சமீர் -ஸ்ரேயா ஜோடி மணவறை ஏறுகிறது . அப்போது தான் கன்னியாகுமரியில் தனக்காக கடலில் குதித்தது தனுஷ் தான் என்பது தெரியவருகிறது . பின் ஷ்ரேயா -தனுஷ் ஒன்று சேர்கிறார்கள் .




நல்ல கதையை கையில் எடுத்துகொண்டு அதை சாதாரனமாய் சொல்லி இருக்கிறார்கள் . தொழில் நுட்ப ரீதியாக எந்த புதுமையையும் செய்யவில்லை . "எடிட்டிங் ,சிநேமேடோகிராபி" நம்மை எந்த நெருடலும் இல்லாமல் கதையுடன் பயணிக்க வைக்கிறது . இன்னும் மெனக்கட்டிருந்தால் படத்தை உணரவைத்திருக்கும் .படம் தனுஷ் -ஸ்ரேயா - சமீர் மூவரையும் சுற்றியே பயணிப்பதால் மற்றவர்களுக்கு படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை .





பிளஸ் +++++++++++++++++++

1. அற்புதமான கதை .



2. தனுஷின் அற்புதமான நடிப்பு . சூப்பர் பாடி லாங்குவாஜ் . குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அழும்பொழுது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது



3. ஆங்காங்கே வரும் சில காமெடி காட்சிகள்



4. அடக்கி வாசித்திருக்கும் ஸ்ரேயா



5. "oneside love" என்கிற உன்னதமான ஒன்றை கையில் எடுத்திருப்பது .



6. தெலுங்குவில் உள்ள அளவு ஹீரோயிசம் இதில் இல்லாதது . சண்டை காட்சிகளில் கூட சின்ன யுமர் வைத்திருக்கிறார்கள்



7. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் "feel ma love " பாடலும் "oneside love " பாடலும் ரசிக்கவைகின்றன .தாமரையின் வரிகளில் "யாரோ ஏன் நெஞ்சில்" பாடல் சூப்பர் .



8. தெலுங்கு படத்தில் இருந்தது போல தான் என்றாலும் எல்லா இடத்திலும் R.R வைக்காமல் சில இடங்களில் மௌனத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர் .







மைனஸ் -------------------------

1. திரைகதையில் விறுவிறுப்பும் அழுத்தமும் குறைவு .



2. இரண்டாம் பாதி பொறுமையை சில சமயம் சோதிக்கின்றது .



3. பெரிய அளவில் ட்விஸ்ட் களோ சுவாரசியமான காட்சிகளோ இல்லை .



4. சமீரின் கதாபாத்திரத்தை சரியாக வைக்க தவறி இருக்கிறார்கள் . அவர் ஹார்ட் நேச்சரா ? இல்லை சாப்ட் நேச்சரா ?



5. கல்லூரி காட்சிகளில் அடித்து ரகளை ஓட்டி இருக்கலாம் . மிஸ் பண்ணிடாங்க .



6. ஒரு தலை காதலை கையில் எடுத்தவர்கள் அதில் நம்மை கட்டிப்போட வைக்க தவறிவிட்டார்கள் .







VERDICT - couldnt feel love completely





முடிவாக ஒன்று .......





 . சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தல் நல்ல பொழுது போக்கு படம்

No comments: