Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, December 7, 2009

humour

சாமி கண்ணைக் குத்திட்டார்....

ஒரு ஊரில் ஒரு விநோதமான பழக்கம் இருந்ததாம்.
அங்க ஊர் கோயில்ல வழிபாட்டின் போது கடவுள் சிலையின் மீது கல்லை விட்டு எறியனுமாம்.கல்லு சரியா விழுந்தா நினைச்சது நடக்கும்னு ஐதீகம்.
அந்த ஊருக்குப் புதுசா ஒருத்தன் விருந்துக்கு வந்தானாம்.
அவனையும் அப்படிக் கல்லை விட்டு எறியச் சொன்னாங்களாம்.
அவனுக்கோ கடவுள் சிலை மீது  கல்லெறிய பயம்.சின்ன வயசிலே ஏதாச்சும் தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி சொல்லி அவங்க ஆத்தா வளர்த்து விட்டிருந்தது.சும்மா செய்யறத் தப்புக்கு கண்ணைக் குத்தும் சாமி அவர் மேலேயே கல்லைப் போட்டா சும்மா விடுமான்னு பயந்தான்.
ஆனாலும் ஊர்க்காரவங்க விடலை.சரின்னு வேறு வழியில்லாம கல்லை எடுத்து சிலையின் மீது எறிவது போல போக்குக் காட்டிட்டு பக்கத்துல இருந்த மரத்தின் மீது போட்டானாம்.
கொஞ்ச நேரத்துல அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சாம்.
சாமீ எனக்கு ஒரு உண்மைத் தெரியனும் சாமீய்ய்ய்  உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னுதானே மரத்து மேல எறிஞ்சேன் .இருந்தும் ஏஞ்சாமி என் கண்ணைக் குத்திட்டே னு அழுதானாம்.
அதுக்கு   கடவுள் சொன்னாராம் ஊர்க்காரங்க கல்லெடுத்து அடிக்கிறாங்கன்னு தான் நானே பக்கத்துல இருந்த மரத்து மேல ஒளிஞ்சிருந்தேன்.பாவி நீ எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னை கல்லால அடிச்சிட்டியே அதான் தப்பு செஞ்ச உன்னைக் கண்ணைக் குத்திட்டேன்னு .

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா சொல்லக் கேட்டு இரசித்தது:

நன்றி;kummionly blogspot


personality

பார்வை மட்டும் போதுமா

 


சுமார் முன்னூறு மாணவ, மாணவிகள் இறுக்கமாக அந்த அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அனைவருமே இன்ஜினியரிங் முதலாமாண்டுக்கு சமீபத்தில் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பதால் இதுபோன்ற கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது, எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்ற குழப்பம் அவர்களது முகத்தில் பளிச்சிடுகிறது. முயல்களைப் போல மருண்டவிழிகளோடு, பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாக கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர் வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக, சலசலத்துக் கொண்டே எழுகிறார்கள். “வணக்கம் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்....”, “குட்மார்னிங் சார்ர்ர்ர்...” – அப்பட்டமான பள்ளிவாசனை.

வந்தவரோ, “என்னை சார்னு கூப்பிடக்கூடாது. உங்களை விட ரெண்டு வயசு சின்னப்பய நானு. இளங்கோன்னே கூப்பிடுங்க” என்று சின்னதாக ஜோக்கடித்து, சூழலை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அடுத்தடுத்து இளங்கோவன் பேசப்பேச மகுடிக்கு கட்டுப்படும் நாகங்களாகிறார்கள் மாணவர்கள். சில நேரங்களில் கூரையதிர கைத்தட்டுகிறார்கள். சில நேரங்களில் ‘ஹோ’வென்று ஆனந்தக் கூச்சல். திடீரென உருகுகிறார்கள். ஆவேசத்தோடு பேசுகிறார்கள். பணிவாக தங்களது சந்தேகங்களுக்கு விடைகளை கேட்டுப் பெறுகிறார்கள். நவரசங்களையும் இப்போது காணமுடிகிறது அவர்களது முகங்களில்.

அந்த இடம், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம். சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரி. கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததின் பேரில் முதலாமாண்டு மாணவர்களோடு பேச வந்திருப்பவர் ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருக இதுபோன்ற நெம்புகோல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இப்போது கல்லூரிகளில் ஃபேஷன். சுமார் ஒன்றரை மணி நேர அமர்விற்குப் பிறகு ‘காம்ப்ளான் பாய்/கேர்ள்’ போல துள்ளிக்கொண்டு வகுப்பறைக்கு ஓடுகிறார்கள் மாணவ மணிகள்.

‘ப்ரின்ஸ் ஜீவல்லரி, பனகல் பார்க், சென்னை’ என்ற வசீகரமான குரலை டிவியிலோ, ரேடியோவிலோ விளம்பரங்களில் கட்டாயம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த இளங்கோ. இதுபோல நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற கம்பீரக்குரலும் இவருடையதுதான். ‘ரேமண்ட்ஸ் – தி கம்ப்ளீட் மேன்!’ – அமெரிக்க குரல் அல்ல. நம் இந்திய இளங்கோவுடையது.

இவர் ஒரு சகலகலா வல்லவர். விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துகிறார். வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இருநூறு பயிற்சியாளர்கள் இவரிடம் பணிபுரிகிறார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.


சாதாரண குடும்பத்தில் பிறந்த இளங்கோவுக்கு கல்வி ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடும் சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எண்பத்தி இரண்டு மதிப்பெண்கள் வாங்கினார். சென்னை மாவட்டத்திலேயே அப்போது முதலிடம். +2வில் அக்கவுண்டன்ஸியில் செண்டம். பின்னர் லயோலாவில் ஆங்கிலம் இளங்கலை. பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கினார். முதுகலையில் ஒலியியல் (Phoenetics) குறித்துப் படித்தார். தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில். முடித்தார்.

பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். சில கால ஆசிரியப் பணிக்குப் பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பணி... இப்போது, ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி...

இவ்வளவு அனுபவங்களும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே இளங்கோவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘நல்ல கல்வி கற்ற யார் வேண்டுமானாலும் இதையெல்லாம் செய்யமுடியுமே?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வருவது புரிகிறது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டோமே! இளங்கோவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை.

Sunday, December 6, 2009

architecture

Funny buildings

When we break our head with East facing, south facing "Vaasthu" etc. see these buildings. These pictures were contributed by reader
Crooked house (Soport, Poland)Forest spiral, Hundertwasser building,(Darmstadt, Germany) The torre Galatea figures,(Spain)Ferdinand cheval palace a.k.a ideal palace, (France) The basket buildings,(Ohio, USA)Kansas city Library,(Missouri, USA)Wonder works,(Orlando, Florida, USA)Habitat 67,(Montreal, Canada) Cubic House,(Rotterdam, Netherlands)hang nga guest house a.k.a crazy house (Vietnam)The UFO house( Sanjhih, Taiwan)Nakagin capsule tower( Tokyo, Japan)Erwin wurm house attack( Vienna, Austria)Wooden gagster house( Archangeisk, Russia)Repleys building,(ontario, Canada)

kitchen tips

டிப்ஸ்...டிப்ஸ்...




வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்து தனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள். பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.


பக்குவமாகச் செய்தாலும், ஊறுகாயில் பூஞ்சை காளான் வந்துவிடுகிறதா? கவலையை விடுங்கள். ஊறுகாயின் அளவுக்கேற்ப, சுத்தமாக உலர்ந்த பாட்டில் ஒன்றை எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, எல்லா இடங்களிலும் பரவும்படி செய்யுங்கள். பிறகு ஊறுகாயை நிரப்புங்கள். பூஞ்சை காளான் கிட்டே நெருங்காது.
-
வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.





பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ் செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்.

animated photo

Animation photo - 1

Here are some of the amazing animation photos sent by my friends. Hope they appear as they are. Wait for few seconds for the animation work to begin. To enjoy more zoom the page and see.
http://www.funfunky.com/download/file.php?id=13

animated photo

Are you able to see the drizzle?

rainx.gif

animated photo

Animated photos - 3

http://img189.imageshack.us/img189/3411/waterfalls.gif

civic sense

Etiquette


Matter of Etiquette:
Respecting the dictum of first come first served, a crow awaits its turn to pick up some food particles that a squirrel is busy nibbling away
-Courtesy: The Hindu

This is one of the very few clicks that impressed me on the very first sight.. I think Love at first sight is quite possible .... :)


source;;naan pathathu blogspot

moral story

An old story with a new twist

A hat-seller who was passing by a forest decided to take a nap under
one of the trees, so he left his whole basket of hats by the side.
A few hours later, he woke up and realized that all his hats were gone.
He looked up and to his surprise, the tree was full of monkeys and they had taken all
his hats.

The hat-seller sits down and thinks of how he can get the hats down.
While thinking he started to scratch his head. The next moment, the monkeys were doing
the same. Next, he took down his own hat, the monkeys did exactly the same. An
idea came to him, he took his hat and threw it on the floor and the monkeys
did that too. So he finally managed to get all his hats back.

Fifty years later, his grandson, Laloo, also became a hat-seller and
had heard this monkey story from his grandfather. One day, just like his
grandfather, he passed by the same forest. It was very hot, and he took a nap under
the same tree and left the hats on the floor.
He woke up and realized that all his hats were taken by the monkeys on
the tree. He remembered his grand father's words, started scratching his head and the monkeys followed. He took down his hat and fanned himself and again the monkeys followed. Now, very convinced of his grandfather's idea, Laloo threw his hat on the floor but to his
surprise, the monkeys still held on to all the hats. Then one monkey climbed down
the tree, grabbed the hat on the floor, gave him a slap and said.................

"You think only you have a grandfather?"

The market is dynamic and the strategy which works today may not work tomorrow, hence, the need of continuous innovations.

source; aravind's dad blogspot

nature animals

துதிக்கையில் ஒன்பது லிட்டர் தண்ணீர்
டிசம்பர் 06,2009,15:13   IST
* யானைகள் எலிபண்டிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.
* யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது.
* ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும்.
* யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது.
* யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.
* யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது.
* யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது.
* யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன.
* பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும்.
* விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன.
* விலங்கு இனத்தில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.
* யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
* யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன.
* யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
* யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.


-


வினோத யானை !
யானைகளுக்கு ஞாபக சக்தி மற்றும் செயல்திறன் உண்டு என்பது கதையல்ல ; நிருபீக்கப்பட்ட உண்மையும் கூட. வாஷிங்டனில் உள்ள மிருகக் காட்சி சாலையில் ""ஷாந்தி'' என்ற இந்திய யானை தன் பெயர்தான் ஷாந்தி என்ற தண்னுணர்வும், நான் இருக்கின்றேன் என் தன்நிலைப்பாடும் கொண்டதாக இருக்கிறது.
பெரிய கண்ணாடியை அதன் முன்பு வைத்தபோது, அதில் உள்ள பிம்பத்தை ஏதோ பொருளாக முதலில் கருதியது ; பின் நாளடைவில் அதில் தெரிவது தானேதான் என்றும் அறிந்து கொண்டது. இப்போதெல்லாம், தன் உருவத்தையும் தனது உள்ளங்கையில் ஏதேனும் உறுத்தினால், அதைப் பார்க்கவும் கண்ணாடியைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.
நன்றி  மஞ்சரி டிசம்பர் 

Friday, December 4, 2009

technology

வருங்காலத் தொழில்நுட்பம்!
ண்டுதோறும் நவம்பர் மாதக் கடைசி வியாழக்கிழமை அமெரிக்காவில் Thanks giving பண்டிகை. அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள சில கட்டாயவிடு முறைகளில் இதுவும் ஒன்று. காரணம்? அது 'கறுப்பு வெள்ளி'!
அப்படின்னா?
அமெரிக்காவில் நுகர்வு என்பது ஓர் அடிப்படைத் தேவை. அது அமெரிக்க மக்களின் ஆதாரச் சுருதி. நவம்பர் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை வருடாந்திர நுகர்வுக் கொண்டாட்டத்தின் முக்கிய நாள், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீஸனின் தொடக்க நாள் இந்த வெள்ளி. கறுப்பு வெள்ளியன்று, மலிவு-சலுகை-தள்ளுபடி எனப் பரபரப்பாக இருக்கும். அதுவும் சில கடைகளில், சில மணி நேரங்களே இந்த விற்ப னைக் கோலாகலம் உண்டு என்பதால், குடும்ப சகிதம் பார்க்கிங் லாட்டில் இரவு முழுக்க வரிசையில் நிற்கும் கூத்து எல்லாம்கூட உண்டு. கறுப்பு வெள்ளி என்ற பெயர் வந்ததற்குக் காரணம் செம சுவாரஸ்யம்.60-களின் தொடக்கத்தில் இந்த வெள்ளிக்கிழமை விற்பனைகளால் உண்டாகும் டிராஃபிக் ஜாம் பிலெடெல்ஃபியா காவல் துறையினருக்குத் தலைவலியாக இருக்க, அதைக் கறுப்பு வெள்ளி எனப் பெயரிட்டனர். அது எப்படியோ நாடு முழுதும் பரவி ஒரு பொதுப் பெயராகிவிட்டது.

60-களில் இணையம் இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகிவிட்ட இந்தச் சில வருடங்களில் இணையத்தில் கட்டப்பட்டுள்ள இ-காமர்ஸ் தளங்களுக்கு நுகர் வோர் வெள்ளியன்று செல்கிறார்களா என்றால், டிரெண்ட் அப்படியே உல்டா. மாறாக, நான்கு நாட்கள் விடுமுறையை ஜாலியாகக் கழித்துவிட்டு, வரும் திங்கள்கிழமை காலையில் ஆன்லைன் வியாபாரத் தளங்களைத் தேடுகிறார் திருவாளர் இணைய ஜனம். இந்த டிரெண்டினால், இ-காமர்ஸ் தளங்களின் டிராஃபிக் அதிகமாகி, அவற்றை ஆமை வேகத்தில் நகரவைப்பதால், கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த திங்கள்கிழமைக்கு Cyber Black Monday என்று பெயரிட்டார்கள்.
அப்படியானால், வேலை நேரத்திலா மக்கள் ஆன்லைனில் தங்களது பொருள் வாங்குவது போன்ற சொந்த வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்? என்றகேள்வி எழலாம். இ-காமர்ஸ் மட்டும் அல்ல; சமூக வலைதளங்களிலும் அதிக வேலை நேரம் செலவா கிறது என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது. இப்போதைக்கு, லாஸ் ஏஞ்சலீஸ் அருண்குமார் கணபதி, விகடன் டாட் காமில் லாக் ஆஃப் செய்துவிட்டு, வேலையைத் தொட ருங்கள்!
இணையத்தில் என்னவிதமான கிரேஸி ஐடியாவையும் முயற்சிக்கலாம் என்பதற்கு www.woot.com ஒரு நல்ல உதாரணம். இதன் பிசினஸ் மாடல் ரொம்பவும் சிம்பிள். அமேசான் போன்ற ஆன்லைன் மெகா ஸ்டோர்போல இல்லாமல், woot.com-ல் ஒரு நாளைக்கு ஒரு பொருள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படும். இந்தப் பொருளும் மற்ற ஆன்லைன் தளங் களைவிட மலிவான விலையில்விற்கப் படும். இப்படிச் செய்தால் இந்த நிறுவனம் விரைவில் நஷ்டம் அடைந்து மூடப்பட்டுவிடும் என்றுதானேஎதிர் பார்ப்பீர்கள்? நானும் woot.com-ஐப்பற்றி முதலில் கேள்விப்பட்டபோது அப்படித்தான் நினைத்தேன். ஆனால், பொருட்களை மொத்த விலையில் வாங்கி, அதில் mark mark up வைத்து விற்று லாபம் சம்பாதிக்கும் சராசரி வியாபாரத்தில் இல்லை woot.com. மாறாக, தங்களது தளத்தைப்பற்றி பரபரப்பை உருவாக்கவைப்பதுதான் அவர்களது முக்கிய இலக்கு. நாளின் எந்த நேரத் தில், அந்த நாளின் பொருளைப் பதிவேற்றம் செய்வார் கள் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து அவர்களது தளத்துக்குச் சென்றுகொண்டு இருப்பது மட்டும்அல்லாது, பொருளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், அங்கே இருக்கும் விவாதத் தளங்களில் பங்கேற்பதும் உண்டு. ஏற்கெனவே, woot.com. ல் இருந்து பொருட் களை வாங்கி இருப்பவர்கள் அந்தப் பொருட்களைப் பற்றிய விவாதத்தில் பங்கேற்பர்.
ஆக, மொத்தத்தில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் தளம் என்ற பெயரில் woot.com.(content) சேகரிப்பு. அதுவும், woot.com&க்குச் செல்பவர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் ஆர்வலர்கள் என்பதால், அவர்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் பொருத்தமானவை (Relevant Content) என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். சமூக வலைதளங்கள்தான் இன்றைய இணையலோகத்தில் முக்கியமானவை எனக் கருதப்படும் இன்றைய நாட்களிலும், 'Content is king’ என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தகவல்களையும், டிராஃபிக்கையும் பயன்படுத்தி விளம்பரங்கள் வழியாக லாபம் சம்பாதிப் பதுதான் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்டான பிசினஸ் மாடல். அது இதுவரை வெற்றிகரமாகவே சென்று கொண்டு இருக்கிறது. செய்வது வியாபாரம் அல்ல; மாறாக, தகவல்
சென்ற வாரத்தில், கூகுளின் க்ரோம் OS-ன் பிறப்பைப் பார்த்தோம். வெளியிடப்பட்ட நாளில் இருந்து, க்ரோம் OS பற்றி நாள்தோறும் ஐ.டி இண்டஸ்ட்ரியில் பலவிதமான உத்தேசங்கள், தீர்க்கதரிசனங்கள். க்ரோம் OS மூலமாக கூகுள் ஜெயிக்குமா என்பதைவிட, இதன் வெற்றி யாரை எல்லாம் கடுமையாகப் பாதிக்கும் என் பதையும் பார்க்க வேண்டியது அவசியம். க்ரோம் OS மூலம் விலை குறைவான நெட்புக் பயனீட் டாளர்களைக் கவர்ந்து mass market-ஐ அள்ளிச் செல்ல கூகுள் நோக்கமிடுவது தெளிவு. அதே நேரத்தில், விலை அதிக மாகவும், high end feature களை எதிர் பார்க்கும் பயனீட்டாளர்களை ஈர்ப்பதில் ஆப்பிள் நிறுவனம் வெற்றியடைந்து வருவது தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு சட்னியாகப்போவது மைக்ரோசாஃப்ட் என்பதற்கான அறிகுறிகள் அதிகம். க்ரோம் OS ஏற்றப்பட்ட நெட்புக் அளவுக்கு விலை குறைவாக இல்லாமலும், high end feature களைக் கொடுக்க முடியாமலும் இரண்டுங்கெட்டானாக மைக்ரோசாஃப்ட் அவதிப்படப்போவது ஒருபுறம் இருக்க, கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்களைக் காப்பாற்றுவதற்கான மென்பொருட்களைத் தயாரித்து விற்பவை, வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்கள், டேட்டா பேக்-அப் செய்ய உதவும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இத்யாதி வகையறாக்கள் அனைவரும் சிக்கலுக்குள்ளாகப்போவது நிச்சயம்.

1. ஒரு பள்ளிப் பேருந்தில் எத்தனை கால்ஃப் பந்து களை அடைக்க முடியும்?
2. சியாட்டில் நகரிலுள்ள அனைத்துக் கட்டடங்களின் ஜன்னல்களையும் கழுவ, எவ்வளவு சம்பளமாகக் கேட்பீர்கள்?
3. சாக்கடை மூடி வட்டமாக இருப்பதன் காரணம் என்ன?
இவை எல்லாம் லொள்ளு கேள்விகள் இல்லை. கூகுளில் வேலைக்காக இன்டர்வியூ செய்யப்பட்ட சிலரிடம் கேட்கப்பட்ட இந்த கேள்வி

aadhaaram; vikatan 09-12-09

Thursday, December 3, 2009

vaishnavam

பாண்டிச்சேரியில் வரலாற்று புகழ்மிக்க கோயில்களில் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். பிரசித்த பெற்ற இத்திருத்தலம் புண்ணியம் சேர்ப்பதில் காசியைவிட வீசம் அதிகம் என்று புகழப்படுகிற. அகத்திய முனிவர் இத்திருக்காஞ்சியில் இக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்வதாக வரலாறு சொல்கிறது. இறைவன் பெயர் கங்கைவராக நதீஸ்வரர். அம்மன் பெயர்கள் (இரு அம்மன்கள்) மீனாட்சி, காமாட்சி.
இத்தலத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் மாசி மக விழாவில் நீத்தார் நினைவுக் கடன் செய்வது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அந்த நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும். எத்தகைய பாவ உயிர்களும் நேரே மோட்சத்துக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. மாசி மகத் திருநாளில் இந்த நதியில் மூழ்கியவர்கள் பாவங்கள் களையப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தணன் ஒருவன் மரணமடைந்த தன் தந்தையின் அஸ்தியை ஒரு பானையில் இட்டு அதை தலையில் சுமந்து கொண்டு காசிக்குப் பயணமானான். அங்கு சென்று கங்கையில் அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பது தான் அவனின் எண்ணம். போகும்போது நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துச் சென்றான். பல நாட்கள் பயணம் செய்தான், வழியில் திருக்காஞ்சி சங்கராபாணி ஆற்றில் நீராடினான். அப்போது அஸ்தி கலசத்தை நண்பனிடம் தந்தான். நண்பன் அதைத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடிவிட்டான். நீராடித் திரும்பிய அந்தணனிடம் தந்துவிட்டான். பின் பல நூறு மைல்கள் பயணம் செய்து இருவரும் காசியை அடைந்தனர்.
அங்கு அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அந்தணன் பானையை திறந்த போது அதைப் பார்த்த நண்பன் திடுக்கிட்டான். தான் திருக்காஞ்சியில் திறந்து பார்த்தபோது அஸ்தி பானையில் பூக்குவியல் இருந்ததாகவும், இப்போது அது சாம்பலாகவும் இருப்பதை நண்பன் கூறினான்.
இதனைக் கேட்ட அந்தணன் “வா, நாம் திரும்பி திருக்காஞ்சி சென்று இதனை சோதித்துப் பார்ப்போம்” என்று கூற, இருவரும். திருக்காஞ்சி அடைந்ததும் அஸ்தி திரும்ப பூக்குவியலானது. உடனே அந்தணன் வியந்து அதை சங்கராபரணி ஆற்றில் கரைத்து தகப்பனுக்கு நல்முறையில் தர்ப்பணம் செய்தான். இதன் காரணமாகத்தான் திருக்காஞ்சி தலம் காஞ்சியை விட வீசம் அதிகம் எனப் புகழ் பெற்றது என புராணம் கூறுகிறது. அது முதல் திருக்காஞ்சியில் நீத்தார் கடன் செய்யும் நிகழ்ச்சி ஒரு புனித நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் மகத்தன்று நடக்கிறது. மகத்துக்கு 10 நாட்கள் முன்பு ஆலயத்தில் கொடியேற்றி திருவிழா தொடங்குகிறது. விழா பத்து நாட்கள் நடக்கும்.
ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் மகா தீர்த்த வாரியும் நடக்கும். இந்த 10 நாட்களும் சுவாமி திருவீதி உலா வருவார். மகத்தன்று சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்த வாரி நடைபெறும் போது 32 ஆலய சுவாமிகள் ஆற்றங்கரைக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தீர்த்தவாரி முடிந்ததும் இரவுக்குள் அவரவர் ஆலயத்திற்குச் சென்று விடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து சுவாமிகளையும் தரிசித்து மகிழ்வுடன் செல்வார்கள். திருக்காஞ்சி வில்லியனூரிலிருந்து தென்கிழக்கில் அமைந்துள்ளது.

மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது. புதிதாகப் படிக்க விரும்புகிறவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிப்பது சிறப்பானது. மகா விஷ்ணுவராக அவதாரம் எடுத்த நாளும் அதுதான்.
அன்று மகா மகக் குளத்திலோ வேறு புண்ணிய தீர்த்தத்திலோ குளித்தால் பிதுர் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். மாசி நீராடல் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு மாக புராணம் படிக்கலாம். அல்லது பிறர் படிப்பதை கேட்கலாம்.
சாபத்தால் கழுதையான இந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரையில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அன்று நெல்லி மரத்தடியில், துளசிச் செடியின் கீழ் உள்ள மண்ணை உடலில் பூசிக் கொண்டு திருமாலை நினைத்தபடி நீராடினால் சகல பாவங்களும் விலகி விடும்.
மக நட்சத்திரத்தன்று ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும்.
முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மகா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.
இது முருகனுக்கு உகந்த நாள். அன்று முழுவதும் விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை. அன்று ஏழைக்கு அன்னதானம் செய்யும் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.
மக நட்சத்திரக் கடவுள் குரு பகவான். இருவருக்கு மஞ்சள் உடை அணிவித்து மஞ்சள் மலரால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும். அன்று தான் முருகன் சிவனுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தார். இரண்யாட்சகனை சம்ஹரித்து பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் மாசி மகம்.
கர்ணணைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி அந்த பாவம் நீங்க உரோமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். முனிவர் மாசி மக நாளில் ஏழு கடலில் நீராடினால் இந்தப் பாவம் விலகும் என்று கூறினார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல் நீராடல் என நினைத்தபோது ஒரு அசரீரி “திருநல்லூர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் ஏழு கடலை நினைத்து கொண்டு மாசி மகத்தில் நீராடினால் உனக்கு பாப விமோசனம் கிட்டும்” என்று கூறியது. குந்திதேவியும் அப்படியே செய்து பாப விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘சப்த சாகரத் தீர்த்தம்’ என்பதாகும். நாமும் அதில் மாசி மக நாளில் நீராடினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும்.
திருவண்ணாமலை ஆலய கோபுரம் கட்டிய மன்னன் வல்லாள மகாராஜா. இம் மன்னனுக்கு பிள்ளை இல்லை. எனவே ஆண்டுதோறும் மகாமகத்தன்று அண்ணாமலையாரே பிள்ளையாக எழுந்தருளி ஆண்டுதோறும் பள்ளி கொண்டாபட்டுக்குச் சென்று தீர்த்தவாரி கொடுத்து நீர்த்தார் கடன் செய்தார். தற்போதும் இது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலய அகோர சிவன் ஐந்து முகங்களுடன் பஞ்சமூர்த்தியாக காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும். மயிலை கபாலீஸ்வரர் கடலுக்குச் சென்று தீர்த்த வாரி வழங்குவார். இவ்வாலயத்தில் தான் சம்பந்தர் பூம்பாலையின் அஸ்தியை பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
தென்காசி விசுவநாதர் ஆலயத் தேர்த் திருவிழா மாசி மக பிரம்மோற்சவத்தில் நடக்கும் தேர் விழா முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது. பூண்டி முருகர் ஆலயத்தில் மாசி மக தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநெல்வேலியில் அன்று நடக்கும் தெப்ப விழாவிற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.அது போல் திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள். நாமும் மகத்தன்று தீர்த்தவாரியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பாவம் போக்கி அருள் பெறுவோம்.

vaishnavam

கண் பார்வை தந்தருளும்  ஸ்ரீ எம்பார்


ஸ்ரீ வைஷ்ணவ மரபில், ஆசாரியனுக்கு மிக விசேஷமான ஸ்தானம் அளித்து, அவரின் ஆணைப்படி தொண்டு புரிதல் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது. இவர்கள் தனது மேன்மையை கருத்தில் கொள்ளாது எப்போதும், ஆசாரியனின் புகழைப் பரப்புவதும், அவர்பால் தொண்டு செய்வதே தான் பெற்ற இன்பம் எனவும் கருதுவர்.
ஆசாரியனின் உபதேசங்களையும், அவரது திருநாமத்தின் மஹிமையையும் நினைத்து நினைத்தும், அவர் காட்டிய நல்வழியில் செல்வர். மேலும் ஆசாரியன் ஒருவர் தான் நற்கதிக்கு வழிகாட்டி என்றும், வீடுபேறு பெற உறுதுணையாக இருப்பார் என்பதுவும், அவர்களது கருத்தாகும். இந்த வகையில், ஜகத்குருவான இராமானுசரின் சிஷ்யராகவும், அவரது நிழலாகவும் இருந்தவர் ‘எம்பார்’ என்னும்
ஸ்ரீவைணவர். இவருக்கு அவரது தாய் பெரிய பிராட்டியார், தந்தை கமல நயன பட்டர் இட்ட பெயர் கோவிந்த பெருமாள் என்பதாகும்.
இவர் மதுரமங்கலம் என்னும் ஊரில் அவதரித்தார். இது ஸ்ரீபெரும்பூதூருக்கு 16 கி.மீ. தூரத்தில் மிகவும் பசுமையும், எழிலும், தோட்டம் துறவுகள் உள்ள இடமாகும்.
எம்பார் தை மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். முதன் முதலில் இவரை புருஷா காரமாக (நல்வழிப்படுத்தி திருமாலை அடைய வழி வகுத்து அளித்தல்) இருந்து நல்வழியில் நடத்தியும், வழிகாட்டியும் கொடுத்தவர் ‘பெரிய திருமலை நம்பிகள்’ ஆவார்.
எம்பார் முதலில் சைவ சித்தாந்தத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தால். அவரை இராமானுசர் திருத்தி பணி கொண்டு, தன் சீடராய் ஏற்று வைணவ சித்தாந்தத்தை போதித்து அருளினார் என்பர். இவர் அனுதினமும் திரு ஆராதனம் (பூஜை செய்தல்) செய்த பெருமாள் ‘அழகிய சிங்கர்’ என்கிற நரஸிம்மரே ஆவார்.
இவர் பெரிய திருமலை நம்பிகள் என்கிற ஆசாரிய புருஷருடன் வாழ்ந்து, அவர்காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பல தொண்டுகள் ஆற்றி வந்தாராம். அவரிடம் எல்லாவித வடமொழி ஸாஸ்திரங்களையும், தமிழ் மறையான நாலாயிர திவ்யப்ர பந்தத்தையும் கற்று அறிந்தார்.
பிறகு இவர் பெரிய திருமலை நம்பிகளின் மூலம் இராமானுஜரை ஆஸ்ரயித்தார் (அவரையும் அவரது சித்தாந்தங்களையும் ஏற்று நடத்தல் என்பதாகும்).
இவர் இயற்கையில் மிகவும் இரக்கக் குணம் படைத்தவர். அதற்கு உதாரணமாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சியைச் சொல்லலாம்.
ஒரு சமயம் நந்தவனத்தில் ஆசாரியனுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு துன்பப்படுவதைக் கண்டு, இவர் அதன் நாவில் இருந்த முள்ளை எடுத்து காப்பாற்றினாராம். என்னே, அவரது கருணை! இதையறிந்த இராமானுசர் அவரது செய்கையை பாராட்டி, அவர் பிராணிகளிடம் வைத்துள்ள கருணையைக் கண்டு உளம் மகிழ்ந்தாராம்.
இராமானுசர் திரு அரங்கத்தில் இராமாயண கால«க்ஷபங்கள் செய்து வந்தாராம். அதை முடித்துக் கொண்டு திருமலை நம்பியிடம் விடை பெற வேண்டி கோரினார். அவ்வமயம் அவர் “இத்தனை தூரம் வந்து எங்களுக்கு இராமாயணத்தின் சிறப்பை நன்முறையில் எடுத்து உரைத்த உமக்கு, நான் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” எனக் குறைபட்டாராம். ஆயின் இராமானுஜர், “அப்படியாயின், திருத்தி பணி கொண்ட கோவிந்த பெருமாளை (எம்பார்) எமக்குத் தந்தருளும்” என்றாராம்.
இதைக் கேட்ட திருமலை நம்பிகள் மிகவும் ஆனந்தம் அடைந்து, கோவிந்த பெருமாளை அழைத்து, “நம்மைப் போல் இவரை நினைத்து இருப்பீராக” எனச் சொல்லி, தாரை வார்த்து, தத்தம் பண்ணி இராமானுசருடன் அனுப்பி வைத்தாராம்.
இராமானுசர் கோவிந்த பெருமாளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு சோளசிம்மபுரம் என்கிற கடிகாசலத்தில் உள்ள அக்காரகனி (யோக நரசிம்மர்) என்கிற நரசிம்மரையும், திருப்பக்குழியில் கோயில் கொண்டு அருள்புரியும், விஜயராகவப் பெருமானையும் மங்களாசஸனம் (போற்றிப் பாடுதல்) செய்துவிட்டு காஞ்சிபுரம் வந்து, திருக்கச்சிநம்பியிடம் சேர்ந்தாராம்.
காஞ்சிபுரத்தில், இராமானுஜர் யாதவப் ப்ராகாசரின் குருகுலத்தில் இருந்த போது, இவரின் அறிவாற்றலையும் அணுகும் முறையையும், கண்டு பொறாமை கொண்டவர்கள் இவரைத் தீர்த்துக் கட்ட (கொல்ல) வேண்டிய முயற்சியில் இறங்கினார்களாம். இதை அறிந்த கோவிந்தப் பெருமாள் இந்த முயற்சியை முறியடித்து இராமானுசரைக் காப்பாற்றினாராம். அவர் எப்பொழுதும் இராமானுஜருடன் இருந்து வந்தமையால் இவர் இராமானுசரின் நிழல் எனப் போற்றப்பட்டார்.
ஒரு சமயம் தன்பால் உள்ள ஞானம், பக்தி வைராக்யத்தை தனக்குத் தானே போற்றிக் கொண்டாராம். இதை அறிந்த சிலர், ‘ஆணவம் கூடாது, தாழ்மை அன்றோ பகவத் பாகவதர்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார்களாம். அதற்கு கோவிந்தப்பெருமாள், “இந்த குணங்களை எல்லாம் தோற்றுவித்தவர் எனது ஆசாரியன் ஸ்ரீ இராமானுசர் என்னும் லோககுரு. ஆகையால், இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவருக்கே” என்றாராம். இதையறிந்த இராமானுஜர் வியந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். என்னே ஆசாரிய பக்தி!
ஒரு சமயம் கோவிந்தப்பெருமாள் ஓர் ஆடல் அழகி வீட்டில் இராமானுசரை பற்றிய குணவிசேஷ தாலாட்டுப் பாடலைக்கேட்டு அவளுடைய வீட்டு வாயிலில் மெய் மறந்து நின்று இருந்தாராம்.
இதை அறிந்த ராமானுஜர், அவரைக் கண்டித்தபோது “தேவரின் குணங்களைப் போற்றிய தாலாட்டு பாடல் என்னை ஈர்த்தது, மேலும் அனுபவிக்கச் செய்தது” என்று பணிவன்புடன் நடந்ததை விரிவாக விளக்கினாராம். இதன்மூலம் அவரது ஆழ்ந்த ஆசாரிய பக்தியை வெளிக்காட்டினார் எனலாம்.
இவருக்குத் திருமணமாயிருந்தும் இல்லறத்தில் சிறிதும் நாட்டமில்லை. ஆயின் எப்போதும் ஆசாரியனுக்குப் பணி செய்வதே தன் கடன் என இருந்தாராம். இவரது தாயாரின் ஆணைப்படி தனது மனைவியை தனியாகச் சந்தித்து, அந்தர்மியான பகவானின் குண விசேஷங்களை எடுத்து உரைத்தும், ஆசாரியனுக்கு செய்யும் பணி ஒன்றுதான் மறுவீடு (மோஷம்) அளிக்கும் எனவும் கூறி மனைவியை அனுப்பி வைத்தார் என்பர்.
இந்த வைராக்கியத்தை அறிந்த இராமானுஜர் இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடி கோவிந்தப் பெருமாளுக்கு ஸந்யாஸ தீ¬க்ஷ கொடுத்து அவரது பெயரை சுருக்கி எம்பார் என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்று முதல் கோவிந்தப் பெருமாள், எம்பார் என அழைக்கப்பட்டார். எம்பார் அவதார ஸ்தலமான மதுர மங்கலத்தில் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமானும், கமலவல்லித் தாயாரும் கோயில் கொண்டு அருள் புரிகிறார்கள்.
இவர் அருளிய பிரபந்தங்கள் ‘விஜ்யான ஸ்துதி’ என்பதாகும். இவர் சதாசர்வ காலமும் ஆசாரியனே சர்வம், என்றும் எம்பெருமானின் (திருமால்) லீலா விபுதிகளே வாழ்க்கை என வாழ்ந்து காட்டியவராவார். இவரது (எம்பார்) அருளால் கண்பார்வை கோளாறுகள் நிவர்த்திக்கப்படுவதால் இத்தலத்துக்கு அடியார்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கண்பார்வை பெற இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
அப்ஜபாணி பதம் அம்புஜநேத்ரம்
நேத்ர ஸாத்குரு கரீஸ! ஸதா!! மே!
பொருள்: பேரழகான எம்பெருமானே, பேரழகனான உன் வடிவழகை எப்போதும் என் கண்களுக்குத் தெரியும்படி அருள்புரிவாயாக என்பது மேற்படி ஸ்லோகத்துக்கு அர்த்தமாகும்.
அவரது அவதார ஸ்தலமான மதுரமங்கலத்தில் தை மாதம் 10 நாட்கள் (7.02.09) புனர்பூசம் வரை திருவிழா நடக்கிறது.
வேத ஸ்வரூபன் கருடன்
கருடன் வேத ஸ்வரூபன் என்று பார்த்தோமல்லவா? அது ஏன் என்று தற்போது முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படிக்க
ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் - என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
ஸ்ரீ வைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. “ஸ்தோமம்” என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்” என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது. “த்ரிவ்ருத்” என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது. யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். “திஷ்ண்யம்” என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால் பாதங்களாகின்றன. “வாமதேவ்யம்” என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்” என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன. “யஜ்ஞாயஜ்ஞியம்” என்ற சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள். இப்படி வேத ஸ்வரூபனான கருடனில் பச்சைப்புயலென பெருமாள் வரும் போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருட சேவையைப் பார்த்தால் மறுபிறவி கிடையாது என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.
மோட்சம் தரும் கருட சேவை - ஆதி கேசவர் பல்லக்கு சிற்பம்

ஆதி சங்கரர் அமைத்த சிம்மத் துவாரம்
 நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் “சார் தாம்” என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கில் இராமேஸ்வரம், கிழக்கில் துவாரகை ஆகிய நான்கு தலங்களே இவை. இவற்றுள் பார்வதி தேவியை மகளாகப் பெற்ற பனி படர்ந்த இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத்தில் தான் பெருமாள் கருடனுன் நமக்கு சேவை சாதிக்கின்றார்.
மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம். அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை அருளிய தலம். அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள தலம்.
 
சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.
தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம். 
 
இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.
புத்தர் காலத்தில் குளத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து இக்கோவிலில் புனர் பிரதிஷ்டை செய்தார். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட விளக்கு ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.
இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நாரத முனிவர் மண்டியிட்டு அமர்ந்துள்ள நிலையில் சேவை சாதிக்கின்றார். இடப் புறத்தில் , குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் சேவிக்கலாம். அவரது வலப்புறத்தில் உத்தவர், நர, நாராயண முனிவர்களின் மூர்த்திகள், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
மகாவிஷ்ணுவின் வாகனமும் கொடியுமான கருடபகவானும் மண்டியிட்டு பெருமாளை வணங்கும் கோலத்தில் பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
தாயாரின் பெயர் அரவிந்தவல்லி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. தீர்த்தம் வெந்நீர் குண்டமான தப்தகுண்டம் அதன் கரையிலும் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3113 அடி உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது , பிண்ணனியில் நீலகண்ட சிகரத்தை தரிசனம் செய்யலாம். இவ்வதரி திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இரண்டு பாசுரங்களை சேவிப்போம்.
நர நாராயணர் மலைச்சிகரங்கள்
எய்த்தசொல்லோடு ஈளையேங்கி இருமியிளைத்து உடலம் பித்தர்போலச் சித்தம்வேறாயப் பேசி அயராமுன் அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த மைத்தசோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே. என்றும்
ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இனையடி இமையவர் வணங்க தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்தவென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வநல்நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாசிரமத்துள்ளானே. 
 
நன்றி   garudasevai blogspot
 
 

Wednesday, December 2, 2009

vaishnavam

உள்ளம் கவர் கள்வன்!


''என்னுடைய மூன்று நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால், தங்களை திருமணம் செய்து கொள்வதில் குறையேதும் இல்லை. என்ன... நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?'' - குமுதவல்லி இப்படிக் கேட்டதும் உடன் வந்த அனைவரும் ஆவேசமானார்கள்; உடைவாள் மீது கையை வைத்தனர்; எந்த நேரமும் அவளைக் கொன்று போடத் தயாராக நின்றனர்.
திருஆலி தேசத்து மன்னன் நீலனுக்கு, அந்த தேசத்தின் சாதாரண பிரஜை ஒருத்தி நிபந்தனை விதித்தால், சேனைகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்? சோழ மன்னனின் கீழ் சிற்றரசனாக ஆட்சி செலுத்தினாலும் மன்னன் மன்னன்தானே?!
ஆனாலும்... புன்னகை மாறாமல், நிபந்தனையை விவரிக்கும்படி கேட்டான் மன்னன். திருநாங்கூரில் வீதியுலா வரும் போது, இவளைப் பார்த்ததுமே மனதைப் பறிகொடுத்ததால்தான் இத்தனையும்!
''ரௌத்திரத்தைத் துறந்து அந்தணனைப்போல் அன்பும் கருணையும் கொண்டு வேதம் பயில வேண்டும்; ஸ்ரீவைஷ்ணவனாக, பெருமாளின் அடியவனாக, பஞ்ச சம்ஸ்காரம் செய்ய வேண்டும்; இல்லையென்று சொல்லாமல் அடியவர்களுக்கு அனுதினமும் அன்னதானம் இட வேண்டும்'' என்றாள். மன்னனும் சம்மதித்தான்!
தனது சத்திரிய குணங்களில் இருந்து மெள்ள மெள்ள விலகினான்; வேதங்களையும் மந்திரங்களையும் பயில... சக மனிதர்கள் மீதான வாஞ்சை மனதுள் பொங்கிப் பிரவாகித்தது. திருநறையூர் (கும்பகோணம் அருகேயுள்ளது) சென்று, திருமாலவன் சந்நிதியில்... அங்கே இருந்த தீபத்தால், தோள்களில் சங்கு - சக்கர இலச்சினையும் பொறித்துக் கொண்டான்! முகத்தில் சாந்தம்; மனதுள் பேரன்பு; தோள்களில் சங்கு - சக்கரம்; நெற்றியிலும் மார்பிலும் உடலிலுமாக பெருமாளின் திருச்சின்னங்கள்... என வந்த திருஆலி தேசத்து மன்னனைக் கரம்பிடித்தாள் குமுதவல்லி! பிறகு இருவருமாகச் சேர்ந்து, அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர்.
யுத்தம், வரி என அரசுக் காரியங்களில் இருந்த கவனம் நழுவி, பெருமாளின் தீவிர பக்தனானான் மன்னன். அடியவர்க்கு அன்னமிடுவதையே பெரும்பேறாகக் கருதி செயல்பட்டவனுக்கு வந்தது சோதனை! கஜானாவில் இருந்த செல்வங்கள் அனைத்தும் கரைந்தன; இனி அன்னமிட பணம் இல்லை எனும் நிலை! நீலன் கலங்கினான்; தவித்தான்; துடித்தான்; துவண்டான்; 'எப்படியேனும் அன்னமிட்டே ஆக வேண்டும்' என எண்ணினான்! இதனை அறியாமலா இருப்பார் பெருமாள்?!

'அருகேயுள்ள வேதராஜபுரத்துக்கு புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதி வந்திருக்கிறார்களாம்; பொன்னும் பொருளும் ஏராளமாக வைத்திருக்கிறார்களாம்!' - யாரோ சொல்ல... உற்சாகமானான் நீலன். ஆம்... ஆபரணங்களை அபகரித்து வந்து, பெருமாளின் அடியவர்களுக்கு அன்னமிட முடிவு செய்தான்.
அவர்களை நடு வழியில் மறித்தான்; ஆபரணங்களைத் தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டினான். நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். அந்தக் காலத்தில் ஆண்கள் மெட்டி அணிவது வழக்கம். ஆகவே, மெட்டியையும் கேட்டான் நீலன். 'நீயே கழற்றிக் கொள்' என்றான் பெண்ணின் கணவன். கழற்ற பிரயத்தனம் செய்தான் நீலன்; இறுதியில் தனது பற்களைக் கொண்டே கழற்ற முனைந்தான்; முடியவில்லை.
''என்னப்பா மந்திரம் போட்டாய்? கழற்றவே முடியலியே...'' என்றான் நீலன். உடனே அவன், 'ஆமாம்.. மந்திரம்தான்! காதைக் கொடு சொல்கிறேன்' என்று சொல்ல... நீலனும் செவி கொடுக்க... வந்தவன், 'ஓம் நமோ நாராயணாய' எனும் திருமந்திரத்தை உச்சரிக்க... அவ்வளவுதான்! உடல் முழுவதும் சிலிர்ப்பு பரவியது நீலனுக்குள்! உதறிப் போட்டது உடல்; கண்களிலும் முகத்திலும் தேஜஸ் கூடியது; நிமிர்ந்து பார்த்தவன் இன்னும் பிரமித்தான்.
ஆமாம்! தன் உள்ளம் கவர்ந்த கள்வனாம் நீலனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்த நாராயணன், தேவியுடன் திருக்காட்சி தந்தார்!
நாராயண மந்திரத்தை எவரேனும் ஆச்சார்யர் போதிக்கலாம்; ஆனால் நாராயணரே போதித்து அருளினால்...? எவருக்கும் கிடைக்காத பாக்கியம் நீலனுக்குக் கிடைத்தது. அன்று முதல் நீலன், ஆழ்வார் ஆனார்; திருமங்கையாழ்வார் என போற்றப்பட்டார்! இவருக்கு பெருமாள் காட்சியளித்து, எட்டெழுத்து மந்திரம் உபதேசித்த தலம்- திருநகரி!

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ளது திருநகரி. திருமங்கையாழ்வார் அவதரித்ததும் இங்குதான் (திருக்குறைய லூரில் அவதரித்ததாகவும் சொல்வர்; 'மண்ணியில்நீர் தேங்கும் குறையலூர் சீர்கலியன் தோன்றிய ஊர்...' என்று மணவாள மாமுனிகள் உபதேசரத்ன மாலையில் குறிப்பிடுகிறார்). இருந்தாலும், இவர் வாழ்ந்தது திருநகரியில்தான்.
ஒன்பது நிலை ராஜகோபுரம், ஏழு நிலை மற்றும் மூன்று நிலை கோபுரங்களும் கொண்டு, அழகுறத் திகழும் ஸ்ரீவேதராஜபெருமாள் ஆலயத்தையும், அமர்ந்த கோலத்தில் எழுந்தருளும் வேதராஜரையும் தரிசித்தால், இந்தத் தலத்தை விட்டுச் செல்ல யாருக்குத்தான் மனம் வரும்?
நான்கு யுகங்களைக் கடந்து காட்சி தரும் தலம்; சோழ தேசத்து
40 திருப்பதிகளில் 18-வது தலம்; பஞ்ச நரசிம்ம க்ஷேத்திர ஆலயங்களில் ஒன்று; குலசேகர ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்து அருளிய கோயில் என பெருமைகள் பல கொண்ட பிரமாண்ட ஆலயம்!
உள்ளே, இரண்டு துவஜஸ்தம்பங்கள்; ஒன்று ஸ்ரீவேதராஜ பெருமாளுக்கு; இன்னொன்று... திருமங்கையாழ்வாருக்கு! இன்னொரு விஷயம்... வேதராஜ பெருமாளுக்கு அருகிலேயே சந்நிதி கொண்டுள்ளார் திருமங்கையாழ்வார். உற்ஸவரின் திருநாமம் ஸ்ரீகல்யாணரங்கநாதர். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.
எந்த ஊரிலும் இல்லாத இன்னொரு விசேஷம்... ஊரைச் சுற்றி சுமார் 4 கி.மீ. தொலைவுகளில் 11 திவ்வியதேச ஆலயங்கள் உள்ளன. திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய்கோயில், மணிமாடக்கோயில், வைகுந்த விண்ணகரம், திருத்தேவனார்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய இந்தத் தலங்களை, திருநாங்கூர் திருத்தலங்கள் என்பர். இவற்றுள், திருநகரி தலமும் ஒன்று!
மேற்குப் பார்த்த ஆலயம்; ஸ்ரீவேதராஜபெருமாளும் மேற்கு பார்த்தபடியே காட்சி தருகிறார். உள்ளே நுழைந்ததும் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் ஒரு பக்கமும்... ஸ்ரீஆண்டாள் இன்னொரு பக்கமும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். உடையவர் மண்டபம், திருவந்திக்காப்பு மண்டபம், உத்ஸவ மண்டபம் என விஸ்தாரமான ஆலயத்தில், விழா வைபவங்களுக்கு குறைவே இல்லை.
ஸ்ரீராமாநுஜர், எம்பார், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனிச் சந்நிதி உண்டு. இவர்களின் திருநட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. குறிப்பாக, திருமங்கையாழ்வாரின் திருஅவதார நாளன்று, வெகு விமரிசையாக சிறப்பு அலங்காரம், வீதியுலா, உத்ஸவம் என திருநகரியே அமர்க்களப்படும்!
இந்த நாளில், திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாடி, பெருமாளைப் பணிவோம்! எல்லா நலனும் பெறுவோம்! 


நன்றி; சக்தி விகடன்



hinduism

மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.
பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.
சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.
அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.
உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.
துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.
அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.
உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.
மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.
இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. 
நன்றி;தேனீ பொன் கணேஷ் 

postive thought

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல


பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு "மர்லின் மன்றோ" என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

"மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவ
ர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

"ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த
, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ரு செய்தித்தாளில் "கார்ட்டூனிஸ்டா"கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் "உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை" அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் - மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

தகவல்;;என்கநேஷன் ஈழநேசன்  

Tuesday, December 1, 2009

vaishnavism---aazhvaar

Heading the list
 Nammazhvar is considered the foremost among the Azhvars, who are thought of as his organs. Parasara Bhattar, in a verse, gives a list of the Azhvars. But the list is not in chronological order. Bhootathazhvar is listed first, though he was the second. He is mentioned first because he is considered Nammazhvar’s head, 
Bhootathazhvar’s verses served as the model of philosophical explanations for the works of the later Azhvars and Acharyas. He writes in the first verse of his ‘Irandaam Thiruvandadi,’ that his love for Lord Narayana is a receptacle, his zeal is the oil. He calls the lamp he lights ‘gnana vilakku’— the lamp of knowledge. He also talks of ‘gnana Tamizh.’ Tamizh, as often emphasised, has a dictionary meaning of sweetness. Gnana too is sweet, for it liberates. So here gnana is sought to be imparted through Tamizh. And it is because Bhootathazhvar was the first among the Azhvars to begin the mission to impart knowledge, Parasara Bhattar puts him first in his list.
Thiruvarangathamudanar, in his ‘Ramanuja Nootrandadi,’ speaks of ‘pura irul’ and ‘agavirul’ when he mentions the first two Azhvars: Poigai Azhvar and Bhootathazhvar. Poigai Azhvar’s lamp, he says, dispelled the external darkness (‘puravirul’.) But it was Bhootathazhvar’s lamp that dispelled the darkness in our minds. In Parasara Bhattar’s verse, Ramanuja too is mentioned as ‘Yatindra Misra.’ Parasara Bhattar’s verse lists the Azhvars. As Ramanuja was not an Azhvar, why did Bhattar mention him? He is considered Nammazhvar’s feet.
Bhootathazhvar was the first to show us ‘Narayana sabdham.’ Poigai Azhvar, as did the other Azhvars, pointed to Lord Narayana as Paratva. But Poigai Azhvar says the One with Sudarsana Chakra is the Supreme One. He doesn’t give us Narayana Sabdham. It is Bhootathazhvar who gives us Narayana Sabdham, and is therefore the first in Bhattar’s list. Poigai Azhvar says the Supreme One is who that is the nayaka of Leela Vihbuti and Nitya Vibhuti. But Bhootathazhvar explicitly says this Ubhaya Vibhuti nayaka is Narayana


source; the hindu