Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, January 27, 2016

ஆன்மிகம் -பல்சுவை

புலவர்களில் தனிச்சிறப்பு மிக்கவர் கம்பர் என்று ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் கூறினார்.

எத்தனையோ புலவர்கள் இயற்கையைப் பாடியுள்ளனர்.

ஒரு சில புலவர்கள் தெய்வத்தை மட்டும் பாடியுள்ளனர். ஆனால், மனிதனையும், மனித ரூபத்தில் வந்த தெய்வத்தையும், சமுதாயத்தையும் பாடியவர் கம்பர்.
                                      6
image3.jpeg
அதனால் கம்பரை தனிச்சிறப்பு மிக்க புலவர் என்று கூறலாம். மற்ற புலவர்களைக் காட்டிலும் பூமியில் கம்பன், வள்ளுவர், இளங்கோவைப் போன்று

பார்க்கவில்லை என்று பாரதி பாடுகிறார்.

இந்த 3 புலவர்களை வரிசைப்படுத்தும்போதும் கம்பரை முதலில் நிறுத்துகிறார் பாரதி.

வேதம், இதிகாச, புராணங்கள் ஆத்மா, பரமாத்மா போன்ற கருத்துகளையும்,

இறைவனை அடையும் வழிகளையும் சொல்லுகின்றன. கம்பர் தன்னுடைய ராமாயணத்தில் முக்தி பெறும் வழிகளையும் சொல்கிறார்.

சீதையை குரங்கு இனங்கள் தேடும்போது சுக்கிரவன்

அனுமனுக்கு கூறும் வகையில் கம்பர் எழுதியுள்ளது சிந்திக்க வைக்கிறது.

சீதையை எங்கு வேண்டுமென்றாலும் சென்று தேடுங்கள்.

வேங்கடமலைக்குச் செல்ல வேண்டாம். அங்கு சென்றால் பாவங்கள் எரிக்கப்படும். பாவங்கள் அழிந்தால் மோட்சத்துக்குப் போய்விடுவார்கள் என்று கூறுகிறார்.

அனுமன் ஒருவேளை வேங்கடமலைக்குச் சென்று சீதையைத் தேடுவதாக இருந்தால் அங்கு அனுமனுக்கு மோட்சம் கிடைத்துவிட்டால் ராவண வதம் நடக்காது.

அதைக் கருத்தில்கொண்டுதான் இப்படி கூறுகிறார்.

வாலியை ராமன் மறைந்து இருந்து கொன்றான்.

மாய்ந்தப் பிறகு ராமனிடம், வாலி கூறும்போது, "என்னுடைய தம்பி சுக்கிரவனை உன்னுடைய தம்பிகள் ஏளனமாகப் பேசினால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

எனக்கு மோட்சம் கிடைக்கக் காரணமாக இருந்தவனே என் தம்பி சுக்ரீவன்தான்’ என்கிறார்.

கம்பர் பல்வேறு இடங்களில் இப்படி மோட்சத்தைப் பற்றி பேசுகிறார்.

பகவான்- படைக்கும் தொழில், காக்கும் தொழில், அழிக்கும் தொழில் செய்கிறான் என்று கம்பர் சொல்கிறார்.

ஆத்மா அழியாது. ஆத்மாவுக்கு மாறுதல் கிடையாது என்பது வேதாந்த கருத்து. வேதாந்த கருத்துகளையும் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.

அழியா அழகுடையவன் ராமர் என்று கம்பர் கூறுகிறார்.

சீதையைச் சந்தித்த அனுமன் ராமனைப் பற்றிய அடையாளம் கூறும்போதும், ராமனின் குழல் அழகைக் கூறுகிறான்.

கடைசியில் சீதையைப் பிரிந்ததால் இப்போது ராமனின் குழல் சடையாக மாறிவிட்டது என்று சொல்கிறான்.

முதலில் ராமனைப் பற்றி கம்பர் கூறும்போது, அழியாத அழகு என்று சொன்னவர் இப்போது குழல் அழகு இழந்து சடையாக மாறியுள்ளதாகக் கூறுகிறார்.

அழகு என்பதற்கு முதலில் சொன்னதற்கும் இதற்கும் முரண்பட்ட கருத்து ஏற்பட்டாலும் மனைவியைப் பிரிந்து இருப்பதால்

ராமனின் குழல் சடையாக மாறியிருப்பதை காரணத்தோடு தொடர்புபடுத்துகிறார் கம்பர்.

இது போன்று பல்வேறு நிலையிலும் கம்பர் தனிச்சிறப்புடைய புலவராகக் காட்சி அளிக்கிறார் என்றார் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்.
-----------

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
image2.JPG
ஸ்ரீ ந்ருசிம்ம மூர்த்தியே நமஹ

உங்களுக்கு ஒபலய்யாவைத் தெரியுமா?.....நரசிம்மமூர்த்தி

"ஒபலய்யா' என்ற பெயரில் ஒரு சுவாமி இருக்கிறார். அவர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். தாயின் வயிற்றில் பிறந்து வந்தால் தாமதமாகும் என்று பிரகலாதனைக் காக்க தூணில் இருந்து ஓடிவந்தார் நரசிம்மமூர்த்தி. இந்த
அவதாரம் நிகழ்ந்த தலம் அஹோபிலம் என்னும் சிங்கவேள்குன்றம். இங்கு நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் இருப்பதால் "நவநரசிம்மம்' என்பர். வான் உயர்ந்த மலையும், மூங்கில் காடுமாக இருக்கும் இங்கு மக்கள் நடமாட்டம் மிக குறைவு. மலை அடிவாரமான கீழ்அகோபிலத்தில் இருக்கும் கோயிலில் லட்சுமி நரசிம்மர், மலை மேல் அமைந்துள்ள கோயிலில் சுயம்பு நரசிம்மர் ஆகியோர் வீற்றுள் ளனர். மூலவர் சன்னதி அருகில்திருமங்கையாழ்வார், ராமானுஜர், தாயார் சன்னதிகள் உள்ளன. தாயார்செஞ்சுலட்சுமி எனப்படுகிறார். நரசிம்மர் தோன்றிய தூண் மலைக்கு மேல் உள்ளது. இதற்கு "உக்ர ஸ்தம்பம்' என்று பெயர். இம் மலையில் செஞ்சு என்னும் வேடுவ இனமக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குலத்தில்பிறந்த பெண்ணை நரசிம்மப்பெருமாள் சிறையெடுத்து திருமணம் செய்ததாக ஐதீகம். அக்குலமக்கள் நரசிம்மரை "ஒபலய்யா' என்று அழைக்கின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கும் ஒபலய்யா, செஞ்சுலட்சுமி என்று பெயரிடுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
மதுகிரி நரசிம்மர்
யதுவம்ச அரசன் ஒருவன்நரசிங்கப்பெருமாளை வழிபட்டு வந்தான். அவன் ஒரு மலையின் மேல் கோட்டை நிர்மாணித்து அவருக்கு கோயில் கட்டினான். அந்தக் கோயிலே "மேலக்கோட்டை' என்று பெயர் பெற்றது. கர்நாடக மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூரு செல்லும் ரயிலில் பாண்டவபுரம் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து 30 கி.மீ., சென்றால் மேலக்கோட்டையை அடையலாம். யோக நரசிம்மசுவாமி வீற்றிருக்கும் மலை "யதுகிரி' எனப்படும். மலையின் அடிவாரத் தில் இருக்கும் கல்யாணி தீர்த்தம் பளிங்கு போல் தூய்மையாக இருக்கும். ராமானுஜர் திருமண் காப்பு (நாமம் இடும் கட்டி) கிடைக்காமல் அவதிப்பட்டபோது, இங்குள்ள பெருமாளே கனவில் தோன்றி யதுகிரியில் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்
காட்டினார். மறுநாள் காலையில் சென்ற ராமானுஜர் தன்னுடைய திரிதண்டத்தால் மண்ணைக்கீற அங்கே பால் போன்ற திருமண் கட்டிகள் இருந்தன. சோழமன்னன் ராமானுஜரை துன்பப்படுத்திய போது அடைக்கலம் புகுந்த கோயில் இதுவே. அப்போது இங்கு ஆட்சி செய்த ஹொய்சாள மன்னன் பிட்டிகன், ராமானுஜரைக் குருவாக ஏற்றுக் கொண்டான். 12 ஆண்டுகாலம் அங்கேயே தங்கி, காவிரியின் இருகரையோரங்களிலும், அஷ்டநாராயண மூர்த்திகளான எட்டு கோயில்களை அவர் நிர்மாணித்தார். இதில் மேலக்கோட்டை சம்பத் குமாரசுவாமி, பேலூர் விஜயநாராயணசுவாமி, ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில்கள் முக்கியமானவை.
நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம்
நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம், விசாகப்பட்டினம் அருகிலுள்ள சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை. தன்னுடைய பெயரைச் சொல்ல மறுத்த பிரகலாதனை இரணியன் கல்லைக் கட்டி கடலில் போட்டுவிட்டான். அவன் வெளியில் வரமுடியாதபடி பெரிய மலையையும் அவன் மேல் போட்டு அழுத்தினான். பக்தனைக் காப்பாற்ற பெருமாள்அம்மலையைப் பிளந்தார்.
பெருமாள் காத்தருளிய இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம். இக்கோயில் மலையை முழுக்க குடைந்தெடுத்து அமைக்கப்பட்டது. பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது. அத்தேரில் உள்ள நரசிம்மர் உக்ரத்துடன் இருப்பதால், அவரது கோபத்தைத் தணிக்க ஆண்டு முழுவதும் சந்தனம் சாத்துவார்கள். நரசிம்ம ஜெயந்தி அன்று இவருக்கு நடக்கும் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.
-------
Lakshmi,, the protagonist of French fiction
Ari Gautier weaves a story around her highlighting the hypocrisy of society
Every resident here is familiar with this gentle creature, and almost every tourist takes time out to visit Puducherry’s most famous animal.
Now, a new book narrates a fictionalised story of Lakshmi, the elephant at the Sri Manakula Vinayagar Temple, examining elements like caste, destiny and life choices.
A French book Carnet secret de Lakshmi by Ari Gautier also aims to put Puducherry on the literary map, says the author.
“For some unexplained reasons, there are very few fiction novels about Puducherry. The few books depicting this place are riddled with clichés and stereotypes. I believe it is time for Pondicherians to take our literary destiny in own hands,” says Mr. Gautier, who has spent his childhood here and studied at the Lycee Francais.
Born in Madagascar to a Pondicherian father and a Malagasy mother, the author has lived in France, and now stays in Oslo.
Using the power of fiction, Mr. Gautier attempts to highlight the hypocrisy of a society which venerates Lord Ganesha while it is insensitive to the plight of the elephant. So the author employs an invented caste system (much like the one in Indian society) for elephants.
Lakshmi belongs to the ‘Gajahramane’ caste which deems them to be temple elephants. The other castes in this complex system are the Gajatryas, the Gajasyas, the Gajasudras and the Gajavasis, says Mr. Gautier.
While Lakshmi dreams of becoming a movie star or a polo player, fate brings her to Puducherry as a temple elephant. The adventures and whether she is able to break through the shackles of her destiny follow the rest of the plot. Giving Lakshmi company are a three-legged dog, Tripod Dog Baba, and a flying fish, Alphonse. While Baba is street smart and has outwitted others into believing he is a spiritual guru, Alphonse who was born in the Ariyankuppam river, is presented as a reincarnated soul of Siddha teacher.
“Through Tripod Dog Baba, the reader can discover Puducherry and its history. In his own way, also tries to flee his destiny which was to be an insignificant dog among others,” says the author.
He adds, “Through Alphonse I wanted to write the stories of this beautiful city where 29 Siddhars walked and went into Jiva Samadhi and also wanted to give a mystical and spiritual aspect to the entire story.”
It is Alphonse who helps Lakshmi to understand the true meaning of life, says Mr. Gautier.
The story will help readers reflect about life choices and the role of destiny, says the author. “Is the Karmic notion which is deeply rooted in our society prejudicial? These are the questions Lakshmi is asking herself and to Tripod Dog Baba,” says Mr. Gautier.ad
-----
As the ""SASTHRAS"say
                              image4.jpeg
Nanjeeyar was a Sri Vaishnava preceptor, whose religious discourses were well attended by many, including the king. One day, while giving a discourse on the Ramayana, Nanjeeyar got to the point where Vibhishana advises Ravana and then leaves when Ravana does not heed his advice. Vibhishana tells Ravana of the bad omens that are being witnessed in Lanka. The sacrificial fire is smoky. Offerings intended for the sacrifice get infested by ants. Milk curdles, and horses neigh constantly as if they are in distress. All these seem to indicate trouble, and Vibhishana sees all of these as a result of Sita being kept prisoner by Ravana. 
But Ravana says that Rama cannot defeat him and that he fears no one. Vibhishana’s words are not only ignored by Ravana, but his loyalty is doubted too, said
Ravana says that Vibhishana is one of those who will rejoice if a relative falls. Vibhishana wisely decides to leave, and goes to Rama. At this point, the king interrupted Nanjeeyar. How could Vibhishana be considered good when he abandoned his own brother, he asked. Nanjeeyar told him that the Sastras had this to say in cases where there was a family disagreement: If one’s father and elder brother had the same opinion, then one should have no hesitation following the brother. But where the two differed, one should follow one’s father. Now Rama was the Jagatpitha — the father of all. 
Had Ravana not been opposed to Rama, then Vibhishana would have been right in following him. But he had gone against Rama — the parent of every one of us. So naturally, Vibhishana turned against his elder brother. Nothing that Vibhishana did was against the Sastras, explained Nanjeeyar to the king.
-----------------image1.JPG
கலியுகம் பிறந்து ஐயாயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டதே .. பகவான் இப்போது ஒரு அவதாரம் பண்ணக் கூடாதா! பரமாத்மா?’ என்று ஒரு சந்தகம் நமக்கு எழுகிறது.
ஒரு ஹிரண்ய கசிபு இருக்கிற போது பரமாத்மா அவதாரம் பண்ணினானே; ஒரு ராவணன் இருக்கிற போது அவதாரம் பண்ணினானே; ஒரு சிசுபாலனை வாதம் பண்ண அவதாரம் பண்ணினானே…. தத்துல்யமாய் ( கண்ணுக்கு எதிரே) இப்போது நிறைய பேர் அசுரர்களாக உள்ளார்களே இந்த லோகத்திலே! ஒருத்தருக்காக அவதாரம் பண்ணினவன் இப்போது பல அசுரர்கள் இருக்கிற போது ஏன் அவதாரம் பண்ணவில்லை?’ என்று சந்தேகம் வரும்.
அதனால் தான் கீதையிலே இந்த சந்தேகத்தைப் போக்குகிறான் பகவான்.
இதை விளக்கத்தான் அழகாக ஒரு ‘ச’ போட்டிருக்கிறான் இந்த ஸ்லோகத்திலே. ‘விநாசாய ச துஷ்க்ருதாம்’.
அனுஷ்டுப் சந்தஸ்ஸில் ஸ்லோகம் என்றால் 32 அக்ஷரத்திலே எழுத வேண்டும். 31 அக்ஷரம் வந்துவிட்டது. ஒன்று வரவில்லை என்றால் ஒரு’ச’ வைப் போட்டு விட்டால் சந்தஸ் பூர்த்தியாகிவிடும்.
ஆனால் பகவானுடைய வாக்கிலே —கீதையிலே வந்த ‘ச’ காரம் சந்தஸ்ஸை நிரப்ப மட்டும் வந்ததல்ல. அதன் நோக்கம் உயர்ந்தது. அது எதைக் காட்டுகிறது என்றால் பகவானுடைய அவதாரத்துக்கு முக்கிய பிரயோஜனம் என்ன என்பதைக் காட்டுகிறது.
‘துஷ்க்ருத் விநாசனம்’ என்பது அவதாரத்தின் முக்கிய நோக்கமல்ல.
அவனுடைய அவதாரத்தின் முக்கிய நோக்கம் சாது சம்ரக்ஷணம் ( பரம பாகவதர்களைக் காப்பாற்றுதல்). துஷ்க்ருத் விநாசனம் என்பது அதன் ஊடே நடக்கக் கூடியது தான்……. இதைத் தான் அந்த ‘ச’ காரமானது காட்டுகிறது.
இப்போது பகவான் அவதாரம் பண்ணினானேயானால் அவனுக்கு நிறைய ஹிரண்ய கசிபுகள் கிடைப்பார்கள்; நிறைய ராவணர்கள் கிடைப்பார்கள்; நிறைய சிசுபாலர்கள் கிடைப்பார்கள் .
ஆனால் ஒரே ஒரு பிரஹலாதன் கிடைப்பானா? பகவான் அந்த ஒரு ப்ரஹலாதனுக்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறான்.
பிரஹலாதன் போல ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் இந்த க்ஷணமே பகவான் அவதாரம் பண்ணி விட சித்தமாயிருக்கிறான். அப்படிப் பட்ட நிஜ பக்தி உள்ளவன் ஒருத்தன் இருந்தால் கூட போறும் — பகவான் அரை குலைய, தலை குலைய ஓடி வருவான். சாதுக்களைக் காப்பாற்றுவது தான் பகவானுக்கு முக்கியம் என்பதை இந்த ‘பரித்ராணாய சாதூனாம்’ என்கிற ஸ்லோகம் நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது.
                            image5.JPG



No comments: