Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, January 27, 2016

ஸ்ரீவைஷ்ணவம் -நாலாயிர திவ்ய பிரபந்தம் -interesting poems


I'm நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - கிளரொளி

"கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம்.

இளமை எவ்வளவு இனிமையானது.

அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக
தளர்ச்சி வந்து சேரும் .

வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும்.

இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது.

எனவே, இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால்
சேர்ந்து இருப்பது புத்திசாலி தனம் என்கிறார் நம்மாழ்வார்...(சொன்னா எங்கய
கேக்குராங்க்ய ... கடவுள் இல்லை , இருந்தா காமி பாப்போம் அப்படின்னு வாதம்
பன்றாங்க்ய ... தருதல புள்ள குட்டிக தாயே )

கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர் விலராகிச் சார்வதுசதிரே.


கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை

கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு

முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி

மாயோன் = கண்ணன், திருமால்

மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம்

பொழில் = பூங்கா

சூழ் = சூழ்ந்த

மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர்

விலராகிச் = தளர்ச்சி இல்லாமல்

சார்வதுசதிரே = சார்வது சதிரே = சேருவது மேலும் புத்திசாலிதனம்
---------

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பெனும் மலையுள் அகப்படும் மலை

இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம்
பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------------------
பேரே யுறைகின்ற பிர ¡ன் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே
-------------------------------------------------------------------------------------------------


சீர் பிரித்தபின்


-------------------------------------------------------------------------------------------------
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே


-----------------------------------------------------------------------------------------------------


பொருள்:


பேரே = திருப் பேரூர் என்ற ஊரில்

உறைகின்ற பிரான் = இருக்கின்ற பிரான்

இன்று வந்து = இன்று வந்து

பேரென் என்று = பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது
என்று சொல்லக் கேள்வி பட்டு இருக்கீர்களா)

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான்

கார் ஏழ் = ஏழு மேகங்கள்

கடல் ஏழ் = ஏழு கடலும்

மலை ஏழ் = ஏழு மலைகளையும்

உலகும் = இந்த உலகை எல்லாம்

உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும்

ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை

அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே


Sent from my iPad

No comments: