Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, November 16, 2009

aanmeekam

கனத்துக் கொண்டே போகும் கல் கருடன்!

கும்பகோணத்திலிருந்து ஆறு மைல் தூரத்தில் திருநறையூர் உள்ளது.
திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாஸன், வாஸுதேவன் என்ற பெயர்களுடன் நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம் புரிந்தார். வஞ்சுனவல்லித் தாயாருக்கு நம்பிக்கை நாச்சியார் என்ற பெயர். இங்கு பெருமாளுடைய கல் கருடவாகன சேவை பெயர் பெற்றது.
வருட வாகனத்தை சன்னிதியில் முதலில் நான்கு பேர்களும் கோயில் வாசலின் முடிவில் அறுபத்து நான்கு பேர்களும் எழுந்தருளச் செய்யும்வகையில், கருடவாகனம் சிறுகச் சிறுகக் கனத்துவிடும். இந்த கல் கருடனுக்கு தனி சன்னிதியுண்டு. இந்த ஊரில் நாச்சியாருக்கே முதல் இடம்.
பெருமாள் கல் கரடன் மீதும், தாயார் அன்னவாகனத்திலும், வீதி உலா வருவதுண்டு. இந்தக் கண்கொள்ளாக்காட்சியை அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும். வருடத்தில் இரண்டு முறை கல் கருட சேவை விமரிசையாக நடக்கிறது.
பெருமாளுக்கு நவரத்னக் கவசம் என்ற ஒரு வகை இனிப்பு நிவேதனம் செய்யப்படுகிறது. நம் மனத்தில் எதைப் பிரார்த்தித்துக் கொண்டாலும் கருடன் நடத்தி வைப்பான் என்பது நம்பிக்கை. திருமணத்தடை குழந்தையின்மை, வேலையின்மை இப்படிப் பல பிரச்னைகளைத் தீர்த்து நறையூர் நம்பி துணைபுரிகிறார்.
- கோமளா நாராயணன்
நன்றி;
மங்கையர் மலர்

No comments: